ஆண்டாளின் திருப்பாவை பாசுரம்
பாடல் -16
நாயகனாய் நின்ற நந்தகோபனுடையகோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரணவாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறைமாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான் வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீநேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்.
திருப்பாவை பாசுரத்தின் பொருள் விளக்கம்....
எம்பெருமான் நாராயணனின் திருமுகத்தை தரிசனம் காண , பாசுரம் பாடியவாறு தன் தோழியரோடு வருகின்றாள் கோதை .
அங்கிருக்கும் வாயில் காப்பாளனை பார்த்ததும் கூறுகின்றாள்;
" எம்முடைய தலைவன் நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே! அழகிய கொடி தோரணங்கள் கட்டப்பட்ட வாசல் காவலனே! ஆயர்குல சிறுமியரான என் தோழியரோடு வந்த எமக்காக இந்த மாளிகைக் கதவைத் திறப்பாயாக.
மாயச்செயல்கள் செய்பவன், கரிய நிறத்தவன் என பெயர் பெற்ற கண்ணபிரான் எங்களுக்கு ஒலியெழுப்பும் பறை தருவதாக நேற்றே சொல்லியிருக்கிறான். அதனைப் பெற்றுச்செல்லவே நாங்கள் அதிகாலை நீராடி பாவை நோன்பு மேற்கொண்டு வந்திருக்கிறோம். எம்பெருமானை துயிலெழுப்பும் பாடல்களையும் பாட உள்ளோம்.
முடியாது என முன்பே நின் வாய்மொழி மறுக்காமல் மூடியுள்ள இந்த நிலைக்கதவை எங்களுக்காக திறப்பாயாக " என்று பணிவன்போடு வாயிற்காப்பானை கோவிலின் கதவை திறக்குமாறு வேண்டுகின்றாள்.
நமக்கு ஒரு செயல் பிடிக்காத போதும் அபசகுனமாக முன்பாகவே பேசாமல் நிதானமாகபேசி எடுத்து புரிய வைக்க வேண்டும் என்று இந்தப் பாடலில் அறிவுறுத்துகின்றாள் ஆண்டாள்.
காரியத்தில் கண்ணாய் இருக்க வேண்டும். நாம் ஒரு காரியம் நிறைவேற்ற வேண்டும் என்றால் ஆண்டாளின் வழியை பின்பற்றுக .
கண்ணனை மாலையிட துடிக்கின்றாள் கோதை . சிறுவயதில் தினம் ஒரு பாமாலை பாடி பூமாலை தொடுத்து முதலில் தான் சூடி, பிறகு கண்ணனுக்கு சூடி அழகு பார்த்தாள்.
அடுத்து கண்ணனை அடைவதற்கு பாவை நோன்பிருந்து மார்கழி குளிரில் அதிகாலை தூக்கம் கலைந்து குளிரில் நீராடுவது என்பது மிகுந்த சிரமம் என்றாலும் அனைத்தையும் முறையாக பின்பற்றுகின்றாள். முடிவில் வெற்றி பெறுகின்றாள். இதுதான் லட்சியம் வெற்றி பெறுவதற்கான பாதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக