செவ்வாய், 15 ஏப்ரல், 2025

16- 4- 2025 சங்கடஹர சதுர்த்தி

 


16–4–2025 சங்கடஹர சதுர்த்தி


நான் பிறந்த கதை கேளீர்


விநாயகர் பெருமான் பிறந்த வரலாறு





 புத்திசாலி  பலசாலி 

 எனப் புகழ் பெற்ற 

மழலை வேண்டுமென 

 பார்வதி அம்மையார் ஆசைப்பட்டு

பிடித்து  வைத்தாள் 

ஒரு மஞ்சள் பிடி.


அப்பிடியோ 

குழந்தையாக உருமாற … ஆசையோடு 

ஓடி வந்த உமையானவள் 

அன்போடு தூக்கி 

கொஞ்சுகின்றாள்! 

கணேசன் *என்று 

பெயரிட்டு  மகிழ்கின்றாள்*


"யாரும் உள்ளே புகா வண்ணம் 

பார்த்துக்கொள்ள டா" 

என் மகனே 

என ஆணையிட்டு 

குளிக்கச் சென்றாள்.


வந்தார் சிவபெருமான் 

தடுத்தான்  கணேசன் 

கோபம் கொண்டார்  

சிவபெருமான்.


எகிறியது கணேசன் தலை

 துடிக்கின்றாள் பார்வதி.

 "வடக்கு திசை பார்த்து 

வேறொரு பாலகனின் 

தலையைக் கொண்டு 

வந்து உயிர் கொடுப்பேன் 

என் மகனுக்கு " என

கைலாயநாதர் ஆணையிட …


 'பாலகன் தலை கிடைக்காது'

 கொண்டுவந்தனர் 

கெஜேந்திரன் தலையை

உயிர் கொடுத்தார் 

சிவபெருமான் 

உலகத்தையே காத்தார்

வினாயகப் பெருமான்


அப்படிப்பட்ட 

உலகத்திற்கே நாயகனான 

விநாயகப் பெருமானை 

சங்கடஹர சதுர்த்தியில்

வணங்குவோருக்கு 

துன்பங்கள் அனைத்தும் 

நீக்கி  நல்லருள் புரிவான் 

விநாயகப் பெருமான். 


 விநாயகப் பெருமானை வணங்குவதன்

 மூலமாகத் தடைகள் அனைத்தும் நீங்கும்.

 நினைத்தது நிறைவேறும் .உள்ளத்தில் ஒளி உண்டாகும். 

வாழ்க்கையில் சிறப்பு உண்டாகும்.


நன்றி பாலாக்க்ஷிதா


   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக