ராகு காலத்திலே கோவிலுக்கு சென்று விளக்கேற்றும் வழிமுறைகளை
பற்றி பார்க்கலாம் ..
செவ்வாய் -வெள்ளி- ஞாயிறு இந்த மூன்று நாட்களும் ராகுகாலத்தில்
விளக்கேற்றுவதற்கு சிறந்த நாட்கள் *
எதனால் ராகுகாலத்தில் விளக்கேற்றுகிறோம் ? என்ற காரணத்தை முதலில் பார்க்கலாம்..
நம்முடைய பிறந்த ஜாதகத்தின் அமைப்பு நன்றாக இருந்தால் வாழ்க்கையும் இனிதாக அமைந்துவிடும் .ஆனால் நாம் பிறந்த ஜாதக அமைப்பில் ராகு தோஷம் இருந்தால் குடும்பத்தில் நிம்மதி இன்றி பல தடைகள் சிரமங்கள் ஏற்படும்..
இராகு தோஷத்தினால்
ஏற்படும் தடைகள் நீங்க
ராகு காலத்தில்
துர்க்கைக்கு விளக்கு
ஏற்றுகிறோம் .
துர்க்கைக்கு விளக்கு ஏற்றுவதற்கான ஒரு தனி சிறப்பு*
ராகுவின் அதிதேவதை துர்க்கை* என்பதால் ராகு காலத்தின் போது ராகுவின் உடல் பகுதி விஷமாக இருந்தாலும் வால் பகுதி அமிர்தமாக மாறும் -
அந்த நேரத்தில் எலுமிச்சம்பழத்தில் தீபம் ஏற்றி -துர்க்கைக்கு மிகவும் பிடித்தமான மலர்களாகிய சிகப்பு நிறமுடைய
அரளி*
செம்பருத்தி *
ரோஜா*
செந்தாமரை *
மலரினால் அர்ச்சனை செய்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி 9 வாரங்கள் தொடர்ந்து வழிபட்டால் துர்க்கையானவள் ராகு தோஷத்தை நீக்கி
ஆனந்தத்தை அருளுகின்றாள்*
தீபம் ஏற்றும் போது ஐம்*க்ரீம் *க்லீம் எனும் மந்திரத்தை சொல்லி ஏற்றுவது சிறப்பு *
ஓம் சாமுண்டாயை விச்சே* எனக்கூறி பயபக்தியோடு விளக்கை ஏற்றி கோவிலை ஒன்பது முறை சுற்றி வர வேண்டும். இதற்கான விளக்கத்தை காண்போமே ..
ஐம்*என்றால் சரஸ்வதி
க்ரீம் என்றால் லக்ஷ்மி
க்லீம் என்றால் காளி
ஓம் சாமுண்டாயை விச்சே
என்றால் சரஸ்வதி கடாட்சம்* லட்சுமி கடாட்சம் *
காளி கடாட்சம்* அனைத்தும் வழங்கும் தெய்வமே ! வேண்டிய பலனை தந்து அருள்வாயே..
என கூறி துர்க்கைக்கு நாம் இந்த மந்திரத்தை சொல்லி வேண்டுதலை வைக்கின்றோம்.
ராகு -கேது
நிழல் கிரகம் தானே!
என அசந்து விட்டால்
அல்லல்பட வைப்பானே ..
என்று உணர்ந்து
நவக்கிரக
வழிபாட்டிலே*
ராகுதோஷம்
நீங்க வேண்டி ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றி மனமுருக வேண்டுகையில்
முழு பலனும் கிடைத்திடுமே*
துன்பமெல்லாம் நீங்கிடுமே* துயரமெல்லாம் தொலைந்திடுமே*
Copyrighs at Balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக