பங்குனி உத்திரத்தின் சிறப்புகள மற்றும் அதன் மகத்துவங்கள்
பங்குனி மாதத்தில் வரக்கூடிய உத்திர நட்சத்திரமும் சேர்கின்ற நாளை பங்குனி உத்திரம்.
கல்யாண விரதம் கனிந்து
சிறப்பான பதவி ஒன்று
பெற்றுவிட்ட மகிழ்ச்சிதனை..
நமக்கு எல்லாம்
வாரி வழங்கி
அருள்கின்ற ஒரு
சிறப்பான தினமே
பங்குனி உத்திரம் *
சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்திலே
மீனாட்சி சுந்தரேஸ்வரராக அற்புதமாக காட்சி தந்த
திருநாள் பங்குனி உத்திரம்.
அழகு கோதையவள்
ஆண்டாள் தன்
மனமுவந்த திருமாலின்
கரம்பிடித்த சுபநாளும்
இந்நாள்
படைக்கும் பிரம்மனோ* கலைவாணியை மகிழ்வோடு மணந்திட்ட
பெருநாளும் இந்இந்நாள்.
அழகு முகம் கொண்ட
ஆறுமுகன் *
திருமண கோலத்திலே
காட்சிதந்த ஒரு
புண்ணிய தினமும்
இந்நாளன்றோ!
தெய்வ திருமணங்கள் *
அனைத்தும் நடந்தேறிய
பங்குனி உத்திரம் *
எனும் இந்த சிறப்பான
நாளினையே..
கல்யாண விரதம்*
திருமண விரதம் என்ன பங்குனி உத்திரத் நாளை அழைக்கும் புனிதம் உணர்ந்தால் திருமணம் செய்ய வேண்டி விரும்புவோர் அனைவருக்கும் இது ஒரு வரப்பிரசாதமாக நாளே!
பிறவியிலே சிறந்தது மனிதப்பிறவி .
இப்பிறவியில்
கடைப்பிடிக்க
வேண்டிய நெறிகளோ - 4
கிரஹஸ்தம் *
பிரம்மச்சரியம் *
வானப்பிரஸ்தம் *
சந்நியாசம் *
மிக சிறப்பான
முதல் படியே கிரகஸ்தம் *
அதாவது திருமண பந்தம்*
அக்னிசாட்சியாக
அருந்ததி பார்த்து..
சப்தரிஷிகள்
வேத பிராமணர்கள்
உற்றார் உறவினர்
நண்பர்கள் சாட்சியாக..
வைத்து மேளதாளத்தோடு
நடக்கும் ஒரு அற்புத பந்தமே திருமணம்*
இந்த திருமணம்உரிய வயதில்
ஒவ்வொரு ஆணுக்கும்
பெண்ணுக்கும் நடக்க வேண்டும்.
அதில் ஏற்படும் தடைகளை
நீக்கி திருமணம் சிறப்பாக நடப்பதற்கு
அருள்புரியுமாறு
முருகப் பெருமானை
வேண்டுகின்ற ஒரு
ஒரு அற்புத தினம்தான்
பங்குனி உத்திரம் *
இந்த சிறப்பான தினத்தில் மகாலட்சுமி *அவதரித்த தினமும் சிறப்பு என்பதால் அவளின் மனம் குளிர வைக்க மோர் தானம் கொடுப்பது சிறப்பு *
பங்குனி உத்திரம் அன்று முருகப் பெருமானுக்கு திருமணம் செய்து வைத்தால் அடுத்துவரும் சித்திரையில் திருமணம்
நிச்சயம் கைகூடும்*
பங்குனி உத்திரம் அன்று
அனைத்து கோவில்களிலும் தெய்வத் திருமணங்கள் மிக சிறப்பாக நடக்கும் .
அந்த கோவில்களில் ஏற்பாடுகளைமுன்பே
தெரிந்து கொண்டு
கோவிலுக்கு சென்று..
.
திருமண கோலத்தில் காட்சி தரும் தெய்வங்களின் இனிய நிகழ்ச்சியை மனமுறுக தரிசனம் கண்டு..
மனம் மகிழ்ந்து மனமுருக வேண்டினால் அடுத்து வரும் சித்திரையில் திருமணம் நிச்சயம் கைகூடும்*
அதன் பிறகு திருமணம் நடந்தவுடன் தம்பதி சமேதராய் அதே கோவிலுக்கு சென்று உபயதாரராக அபிஷேகம் அர்ச்சனை செய்து இனிப்பு பிரசாதம் வழங்கி வேண்டுதலை நிறைவு செய்யலாம்*
மாதத்தின் கடை மாதம்பங்குனியோடு நம்மிடம் உள்ளகவலையெல்லாம் துன்பமெல்லாம் பறந்து ஓட ...
அடுத்து வரும் சித்திரையோ!புதுவருடம்புதிய வருடமாகசெய்த புண்ணிய பலன்யாவும் அனுபவிக்கும் வருடமாக..
புன்னகையோடு வாழ்க்கை முழுதும் வாழ்வதற்கு வரம் கொடுக்கும் முருகப் பெருமானின்அருளைப் பெற்றுசீரும் சிறப்புமாய் வாழ்வோம்.
நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹
வாழ்க்கை அனைத்து செல்வமும் பெற்று சிறப்புடன் வாழ்வதற்கு கல் உப்பு பரிகாரம்🙏🌹👇👇
குலதெய்வத்தை எவ்வாறு வணங்குவதுவழிபாட்டு முறைகள்🙏🌹🍀🌹👇👇https://balakshitha.blogspot.com/2019/08/blog-post.html
Copy rights at Balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக