குலதெய்வ வழிபாடு பிறப்பு எனும் வாழ்க்கை தனில் எத்தனை எத்தனை
துன்பம் -என சோர்ந்துவிடாமல் காரணம் என்னவென சிந்தித்து நிவர்த்தி
செய்யும் ஒரு அற்புத வழிபாடு -குலதெய்வ வழிபாடு *.
யார் ஒருவர் விடாமல் தொடர்ந்து குலதெய்வத்திற்கு வருடா வருடம் பொங்கல் வைத்து படையல் வைத்து வழிபடுகிறார்களோ..
அவர்கள் வாழ்க்கையில் என்றும் சீரும் சிறப்புமாய் இருப்பார்கள் *
இறந்து போனவர்களின் ஆத்மா ஆற்றலும் சேர்ந்த ஒரு வழிபாடு குலதெய்வ வழிபாடு*
முன்னோர் காலத்தில் இருந்தே தொன்றுதொட்டு இருந்து வரும் -ஒரு அற்புத வழிபாடுதான் குலதெய்வ வழிபாடு *
எந்த ஒரு சுப தினம் நடந்தாலும் முதல் பத்திரிக்கை குல தெய்வ கோவிலுக்கு வெற்றிலை பாக்கு பழம் வைத்து படைத்த பின்னரே விசேஷத்திற்காக ஏற்பாடுகளை செய்ய ஆரம்பிப்பார்கள் *.
அதேபோல குழந்தை பிறந்த முதல் மொட்டை குலதெய்வத்திற்கு போட்ட பின்னர்தான் மற்ற கோவில்களில் அடுத்தது மொட்டை போட வேண்டும் *
ஒரு குழந்தை பிறந்தது முதல் மூன்று மொட்டை போட வேண்டும் என்பது ஒரு ஐதீகம்*
குல தெய்வ வழிபாட்டிற்கான
ஸ்லோகம்🙏🌹🍀🌹👇👇
http://balakshitha.blogspot.com/2019/08/blog-post.html
காயத்ரி மந்திரத்தின் சிறப்பு மற்றும் அதன் மகிமைகள் 🍀🌹🍀👇👇👇
http://balakshitha.blogspot.com/2019/04/part-1_4.html
அடிக்கடி ஏதாவது ஒரு விதத்தில் மனக்கஷ்டம் என்பது வந்து கொண்டிருந்தால் நாம் முதலில் செய்ய வேண்டியது .. வீட்டின் பூஜை அறையில் ஒரு உண்டியல் வைத்து குலதெய்வ காணிக்கையை நம் குறை நீங்குமாறு நன்கு வேண்டிக்கொண்டு போட வேண்டும் .
நினைத்த காரியம் ஜெயமாக வேண்டும் என்றும் வெள்ளிக்கிழமை தனில்வேண்டி கொண்டு உண்டியலில் காணிக்கை போட்டு வைக்கலாம் .
வெளியூர் பிரயாணம் செய்யும்போது கிளம்புவதற்கு முன்பு பிரயாணம் சுபமாக நடக்க வேண்டும் என வேண்டி..
உண்டியலில் பணம் போட வேண்டும் .
இப்படி நாம் எந்த காரியத்தை வேண்டி கொண்டும் போட்டு வந்தாலே நம்முடைய மனக்குறை படிப்படியாக குறைவதை நம்மால் உணர முடியும்.
வருடம் ஒருமுறை குலதெய்வ கோவிலுக்கு சென்று பொங்கல் வைக்கும் போது குலதெய்வ கோவில் உண்டியலில் அந்த காணிக்கையை சேர்த்து விடலாம் .அல்லது அபிஷேக பொருட்கள் வாங்குவதற்கு பயன் படுத்துங்கள்.
குழந்தை இல்லாத குறை நீங்க 12 அல்லது 15 அகல்விளக்குகள் வாங்கிக்கொண்டு அந்த அகல்விளக்கை தண்ணீரில் போட்டு எடுத்து ஈரம் போக காய வைத்தால் நெய்யைஅகல் உறிஞ்சாமல் இருக்கும் .
குல தெய்வ கோவிலுக்கு குடும்பத்தோடு சென்று 'வாழையடி வாழையாக" குலம் தழைக்க வேண்டும் என்று வேண்டி முதலில் பிள்ளையாருக்கு அகல் தீபம் ஏற்றிய பிறகு-..
அங்கு இருக்கும் அனைத்து தெய்வத்திற்கும் தெய்வத்திற்கும் விளக்கேற்றி வைத்து வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறி வாழ்க்கையில் சிறப்பை அடையலாம்.
நாம் வணங்கும் மூதாதையரின் குலதெய்வ சக்தியானது நம்முடைய வாழ்க்கையில் அனைத்து விதமான சிறப்புகளையும் கொடுத்து நினைத்த
காரியத்தை நலமாக முடித்து வைப்பதுதான் குலதெய்வ கோவிலில் சிறப்பு*
சொந்த மனை அமைய விரும்புவோர் அமேசான் கீழ்க்காணும் மின்னணு புத்தகத்தை டவுன்லோட் செய்து 10 அற்புதமான வழிபாட்டு முறைகளை படித்து பயன் பெறலாம்🙏🍀🌹🍀👇👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC
நல்ல மனதோடு *
பண்போடு *
உயர்ந்த மனிதனாக *
வாழ்வதற்கு
குலதெய்வ வழிபாடு *
நிச்சயம் வழிவகுக்கும்*
குலதெய்வத்தை வணங்குவதன் மூலமாக தடைகள் அனைத்தும் நீங்கும் . நினைத்தது நிறைவேறும்.
உள்ளத்தில் மகிழ்ச்சி உண்டாகும் .
அதனால் வாழ்க்கையில் சிறப்பு உண்டாகும்*
Copy rights at Balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக