வெள்ளி, 8 மார்ச், 2019

பங்குனி திங்களே வருக -பங்குனி மாத விசேஷங்கள்


பங்குனி மாதம் வரக்கூடிய விசேஷ தினங்கள்


விசேஷ தினங்கள்  முன்கூட்டியே அறிந்துகொண்டு  தெய்வ பக்தியோடு வழிபட்டு அதற்கான பலனை அடையலாம்.

காரடையான் நோன்பு *
பங்குனி செவ்வாய்*
பங்குனி உத்திரம் *
ஸ்ரீராமநவமி *

என பல விசேஷ தினங்கள் இந்த பங்குனி மாதத்தில் வருகின்றது.



சிறப்பு -1 காரடையான் நோன்பு *அம்பாளை நினைத்து வழிபட கூடிய விசேஷ தினமாகும்.


சுமங்கலி பெண்கள் வழிபடக்கூடிய மிக அற்புதமான பூஜை இது ..

பாரம்பரியமாக நோன்பு எடுத்து படைத்து நோன்பு கயிறு கட்டிக்கொண்டு விரதம் இருக்கும் பூஜையாகும் .

நோன்பு எடுக்காதவர்கள் கூட இந்த நாளில்- முறைப்படி அன்றைய தினத்தில் தாலி சரடு மாற்றிக் கொண்டால் கணவனுடைய ஆரோக்கியம் ஆயுள் கூடும்.


வாழ்க்கையில் என்றும் தீர்க்க சுமங்கலியாக இருப்பதற்கு சுமங்கலிப் பெண்கள் இந்த பூஜையை செய்யலாம்.

பங்குனி உத்திரம் வழிபாடு மற்றும் மகத்துவம்🌹🍀🌹🍀🌹👇👇👇👇
http://balakshitha.blogspot.com/2019/03/blog-post_19.html

சிறப்பு -2 பங்குனி செவ்வாய் *என்பது துர்க்கை அம்மனுக்கு உப்பில்லா விரதம் இருந்து விளக்கேற்றி வழிபடும் ஒரு விசேஷ தினமாகும்.

பங்குனி உத்திரம்* முருகப்பெருமானுக்கும் ,


ஸ்ரீராமநவமி *திருமாலின் அவதாரமாகிய ராமபிரான் பிறந்த நாளாக கொண்டாடப்படும் ஒரு விஷேச தினமாகவும் ..

பங்குனி மாதத்தில் வருவது மிகச்சிறப்பு.


ஒரு விசேஷ தினம் வருகின்றது என்றால் -வருவதற்கு முன்பு ஓரிரு நாட்களில் தெரியும் போது விரதத்தை அவசரமாக கடைப்பிடித்து தெய்வத்தை வழிபடுவது என்பது சரியான நிறைவு கிடைக்காது ....

அதே சமயத்தில் அடுத்து வரும் தமிழ் மாதத்தில் வரக்கூடிய விசேஷ தினங்கள் என்ன என்பதை முன்பே தெரிந்து கொண்டால் ...

வரப்போகும் இந்த விசேஷ தினத்தில் நாம் இந்த தெய்வத்திற்கு எளிமையான என்னென்ன விரதத்தை கடைபிடிக்கலாம்..

எந்த கோவிலுக்கு சென்று வரலாம் - நாட்கள் ஒத்துவருமா ! 

நீண்ட தூரம் உள்ள கோவிலுக்கு போக முடியுமா !அல்லது அருகாமையில் உள்ள இந்த கோவிலுக்கு போய் வரலாம்.

அதற்கு என்ன முன்னேற்பாடுகள் செய்து கொள்ளலாம் -அல்லது வீட்டிலேயே ஒரு சின்ன பிரசாதம் செய்து  என் னென்ன ஸ்லோகங்கள் சொல்லி தெய்வத்தை வழிபடலாம்*

என முன்கூட்டியே மனதில் ஏற்பாடு செய்து தெய்வத்தை பயபக்தியோடு வணங்கும் போது -நாம் விரதம் இருப்பதற்கான முழுபலனும் கிடைக்கும் *என்பதால் ..

வரக்கூடிய விசேஷ தினங்களை முன்பே தெரிந்து கொண்டு -தெய்வத்தை வழிபட்டு அதற்கான பலனை பெறுவோம்


நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹


Copyrighs at Balakshitha

3 கருத்துகள்: