சொந்தமாக வீடு மனை வாங்க வழிபடவேண்டிய வராக மூர்த்தி வரலாறு
இரண்யட்சகன் எனும் அரக்கன் நாட்டை அட்டூழியம் செய்கின்ற பட்சத்தில் பூலோகத்தை தாங்கி நிற்கும் பூமி தாயாகிய பூமாதேவியை கடலுக்கடியில் சென்று மறைத்து வைக்கின்றான்.
இயற்கையின் அற்புதத்தை தாங்கி நிற்பவள் பூமித்தாய் .
உயிரினங்கள் எனும் அற்புத படைப்பை கண்டு மகிழ்ந்து -அரவணைப்பவள் பூமித்தாய்.
நம்முடைய அர்த்தமுள்ளவாழ்க்கையின் பயனை அடைவதற்கு இடம் அளிப்பவள் பூமித்தாய்.
அப்படிப்பட்ட கருணைக் கடலாகிய பூமாதேவியை இரண்யட்சகன் கடலுக்கடியில் சென்று மறைத்துவிட
படைக்கும் தொழிலை செய்கின்ற பிரம்மனும் -தேவர்களும் சென்று மகாவிஷ்ணுவிடம் பூமாதேவியை மீட்டு தருமாறு வேண்டி நிற்க மகாவிஷ்ணு பூமியில் வராக மூர்த்தியாக அவதாரம் எடுக்கிறார்.
எவராலும் தமக்கு அழிவு கிடையாதுஎந்த ஆயுதத்தாலும் தம்மை அழிக்க முடியாது-
என்றவரத்தைப் பெற்ற இரண்யாட்சகனை அழிப்பதற்காக பன்றி முகம் கொண்ட ரூபமாக தோன்றி அவனை அழிக்கின்றார் மகாவிஷ்ணு.
பூமித்தாயை காப்பாற்றி- பூலோகத்தை மீட்ட மகாவிஷ்ணுவின் அவதாரமாகிய வராக மூர்த்தியின் அனுக்கிரகத்தை நாம் பெற்றுவிட்டால் வாழ்க்கையில் சகல நன்மைகளும் உண்டாகும். நினைத்த காரியங்கள் ஜெயமாகும் .
வராக மூர்த்தியை வழிபட்டால் ஏற்படக்கூடிய பலன்கள்..
சிறப்பு 1 மகா விஷ்ணுவின் அருள் பெற்று வாழ்கின்ற வாழ்க்கை வளமாகும் .
சிறப்பு 2பூமித்தாயின் அனுக்கிரகம் நமக்கு கிடைக்கும். நினைத்த காரியம் ஜெயமாகும் .
சிறப்பு 3வீடு மனை வேண்டி -வராக மூர்த்தியை வழிபட புதிய மனை வாங்கி வீடு கட்டும் யோகம் கிடைக்கும்.
சிறப்பு 4 நமக்கு சேர வேண்டிய பூர்வீக சொத்துக்கள் நிலங்கள் கிடைப்பதற்கான அனுகூலம் உண்டாகும்.
சிறப்பு 5 புதிய வீடு கட்ட நினைப்பவர்களுக்கு இந்த முயற்சி நிச்சயம் நல்ல பலனைத் தரும்.
புதிதாக மனை வாங்கி சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என நினைப்போர் வாழ்க்கையிலே -அந்த முயற்சி ஜெயமாக வராக மூர்த்தி வழிபடுவதற்கான வழிமுறை..
பூமி அதிபதியான கிரகம் செவ்வாய் மற்றும் வியாழபகவான் குருவின் ஆதிக்கம் பலம் பெற்று ..
வராக மூர்த்தியின் அனுக்கிரகமும் நமக்கு அமைந்துவிட்டால்- நிச்சயமாக சொந்தமாக நமக்கு மனை அமைந்து மிக அருமையாக வீடு கட்டுவதற்கான யோகம் நமக்கு கிடைக்கும்.
ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் அருகே இருக்கும் பெருமாள்கோவிலுக்கு சென்று செவ்வாய் என்று அழைக்கக்கூடிய கிரகமான அங்காரகனுக்கும்- குரு பகவானுக்கும் இரண்டு இடங்களிலும் இரண்டு அகல்தீபம் ஏற்றி..
குருபகவானுக்கு அர்ச்சனை செய்து
கோவிலை வலம் வந்து ஓம் ஸ்ரீ வராக மூர்த்தியே நமஹ என 108 முறை போற்றி வழிபட்டால் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் ஜெயமாகும் என்பது திண்ணம்.
(ஒன்பது வாரங்கள் தொடர்ந்து வழிபடுதல் விரைவில் பலன் கிடைக்கும்)
கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் தம்முடைய இல்லத்தில் இந்த வழிபாட்டை செய்யலாம்..
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும் காலை அல்லது மாலை
ஆறு மணியிலிருந்து ஏழரை மணிக்குள் இரண்டு அகல் தீபம் பூஜை அறையில் ஏற்றி ஓம் ஸ்ரீ வராக மூர்த்தி நமஹ -என 108 முறை போற்றி வழிபாடு செய்யலாம்.
வீடுகட்டி கிரகப்பிரவேசம் செய்த பிறகு ஒருமுறை ஸ்ரீ வராக மூர்த்தியின் திருத்தலம் சென்று கீழ்வருமாறு வேண்டுதலை நிறைவேற்றலாம்..
சந்தனகாப்பு -புஷ்பாபிஷேகம்
கலச திருமஞ்சனம் -துலாபாரம் லட்சார்ச்சனை என்று நம்மால் முடிந்ததை - தெய்வத்திற்கு வழிபாடு செய்து வேண்டுதலை நிறைவேற்றலாம்.
வாழ்க்கையில் வளம்பெற
செல்வ கடாட்சம் மேலோங்க
வீடு மனை சொந்தமாக அமைய
வாழ்விலே நிம்மதி பெற்று மகிழ்ச்சியோடு வாழ
ஸ்ரீ வராஹ மூர்த்தியை வழிபட்டு வாழ்க்கையில் சிறப்பை அடையலாம்.
சொந்தமாக வீடு மனை அமைவதற்கான தெய்வீக வழிபாட்டு முறைகள் புத்தகமாக Amazon Kindle app டவுன்லோட் செய்து படித்து பயன் பெறுக 🙏🌹🍀🌹👇👇👇👇
தோஷங்கள் அனைத்தும் விலகி வாழ்க்கை சுபிட்சமாக நிலவ கல்லுப்பு பரிகாரம்🙏🌹👇👇
Copy rights at balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக