பெரியவர்களை மதித்து பிள்ளைகள் நடந்து கொண்டால் இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!
பெரியவர்களின் மனது இனிதன்றோ
பெரியவர்களின் பேச்சுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தோம் அன்று- பிள்ளைகள் பேச்சுக்கு கட்டுப்பட்டு வாழ்கின்றோம் இன்று..
படிப்பு கொடுக்கும் துணிச்சல் என்று சொல்வதும் உண்டு -ஆக நாம் ஒரு நிலைக்கு வந்துவிட்டோம் இன்று..
இளசுகள் எந்த முடிவு எடுத்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்று- நம்முடைய வளர்ப்பில் குறை காணாது- "நன்று' என்று புன் சிரிப்பு வைக்கின்றோம்
இனிது இனிது பெற்றவர்களின் மனதும் இனிதன்றோ!
இனிது இனிது வாழ்க்கை
இனிதன்றோ part-4🌹🍀🌹🌹👇👇👇
http://balakshitha.blogspot.com/2019/06/part-3.html
இனிது இனிது வாழ்க்கை
இனிது அன்றோ part-6 🍀🌹🍀🌹👇👇👇
http://balakshitha.blogspot.com/2019/11/part-6.html
பிள்ளைகளின் மனதும் இதுவன்றோ!
நம்பிக்கை வைக்கும் பெற்றோர் -புகழ் மணக்க வாழ்ந்து காட்டுவோம் இன்றும்- வாழ்ந்து ஜெயித்து காட்டுவோம் என்றும் ..
என பெருமிதத்தோடு வாழ்வினில் நல்வழி செல்க..
முடிவு எடுப்பது நல்ல செயலாக தொடுக -எந்த முடிவு எடுத்தாலும் இது சரியா தவறா என யோசித்து முடிவு செய்க -
நம்மை தவறு செய்ய விடாது பாதுகாக்கக்கூடிய ஒரு பெரிய ஆயுதம் ஆன்மீகம் -அதனால் தெய்வத்தை முழுமையாக நம்பிக்கையோடு வழிபாடு செய்க-
நாம் எடுத்த முடிவில் படிப்படியாக முன்னேற்றத்திற்கு வரமுடியும் என்று நம்பிக்கையோடு வாழ்க்கையில் வெற்றி கொள்க.
இனிது இனிது பிள்ளைகளின் மனதும் இனிதன்றோ.
பெற்றோர்களை மகிழ்விக்க மேலும் சில வழிமுறைகள்..
1- பெற்றோர்களை மகிழ்விக்க ஒரு மணி நேரம் பூங்காவிற்கு அழைத்துச் சென்று வரலாம்.
2- தினமும் ஒரு பத்து நிமிடம் மனம்விட்டு பேசலாம் .
3பூச்செடிகளை பராமரிக்க ஏற்பாடு செய்து தரலாம் .
4- அவர்களுக்கு பிடித்தவாறு ஒரு சின்ன புத்தக லைப்ரரி வைத்து தரலாம் .
5-வருடத்திற்கு இரு முறை புத்தம் புது துணி வாங்கி கொடுத்து மகிழலாம்.
நல்ல விசேஷ தினங்களில் குடும்பத்தோடு பெற்றவர்கள் காலில் விழுந்து வணங்குவது மகா கோடி புண்ணியம்.
பிள்ளைகள் பெற்றோருக்கு ஆற்றும் கடமைதனில் இனிது கண்டால்-
அவன் பிள்ளை பெற்றோரை மகிழ்வித்து வாழ்க்கையில் இனிது காண்பானே.
Copy rights at balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக