அட்சய திருதியை குறைவில்லாத செல்வம் பெற எடுத்த காரியம் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெறக்கூடிய நாள்தான் அட்சய திருதியை .
வாழ்க்கையிலே மனம் அறம் மங்கலம் செல்வங்கள் சிறப்புகள் என ஐங்கனி சுவை தேனோடு கலந்த வாழ்வுதனை இந்த அட்சய திருதியில் வேண்டி நாம் பெறலாம்.
சித்திரை மாதம் அமாவாசைக்கு மூன்றாம் நாள் அட்சய திருதியை.
திரிதியை திதி அன்று அதிகமான நிறைய தெய்வீக நிகழ்ச்சிகள் அனைத்தும் நடந்த சுபதினம்.
குபேரனுக்கு பதவி கிடைத்த தினம் பாஞ்சாலிக்கு அட்சய பாத்திரம்
பெற்ற தினம் -கங்கை நதியானவள் பூமியில் பிறந்த தினம்- ஐஸ்வர்ய லட்சுமி தான்ய லட்சுமி அவதாரம் நிகழ்ந்த தினம் -அன்னபூரணி அம்மையிடம் அன்னம் பெற்று பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து ஈஸ்வரன் விடுபட்ட தினம் ..என பல அற்புதங்கள் நிகழ்ந்த தினம் தான் அட்சய திருதியை .
திருதியை அன்று அட்சய பொருட்கள் அதாவது சுபீட்ச பொருட்கள் நாம் கடையில் வாங்க வேண்டும் அதுபோல தானமாக பிறருக்கு கொடுக்க வேண்டும் .
இப்படி செய்தால் நாம் வாழ்க்கையில் சுபிட்சம் பெறலாம் -வீட்டில் செல்வ சேர்க்கை உண்டாகும் -குபேரன் வாசம் வீட்டில் நிலவும் -மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் - எந்த காரியத்திலும் வெற்றி கிடைக்கும்.
அட்சய திருதியை அன்று பிரம்ம முகூர்த்தத்தில் கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும். மகாலட்சுமி படத்திற்கு மல்லிகை மலர் சாற்றி ஐந்து முக விளக்கை ஏற்றி..
வீடு முழுவதும் வத்திநறுமணமும் தெய்வ பாடலும்ஒலிக்கட்டும்..
மனமுருக மஹாலக்ஷ்மி நினைத்து வேண்டினால் மகா லட்சுமியின் அருள்கடாட்சம் நமக்கு கிடைத்து செல்வங்கள் தானாக வீடு தேடி வரு வதற்கான அருமையான அற்புதமானதினமே அட்சய திருதியை .
வடக்கு நோக்கி மனதிலே அமர்ந்து 108 மகாலட்சுமி போற்றி 108 குபேரர் போற்றி பாடலாம்.
அன்றைய தினத்தில் லட்சுமி குபேர பூஜை செய்தால் ஏழு தலைமுறைக்கு தேவையான செல்வங்கள் குவியும். அந்தநாளில் குபேரனின் அம்சமான நாள் என்பதால் நகைகள் வாங்கலாம்.
அப்படி முடியாதவர்கள் நம்மால் முடிந்த -வெண்ணிற நிறம் கொண்ட பொருட்களை தானம் செய்யலாம். அட்சய திருதியை என்பதை மனதில் கிரகித்துகொண்டு மனமுருக மஹாலக்ஷ்மியை வேண்டி அன்றைய தினத்தில்- பொருட்கள் வாங்கலாம் பொருட்களை தானம் செய்யலாம்.
சர்க்கரை- கல்கண்டு -அரிசி மல்லிகைப்பூ- பால் -கல்லுப்பு என தெய்வத்திற்கு உகந்த இந்த பொருட்களை வாங்கலாம். தானம் செய்யலாம் .இதில் ஏதாவது ஒரு பொருளை வாங்கி பூஜை அறையில் வைத்து வழிபட்டால் செல்வ கடாட்சம் பெருகும் .
அன்றைய தினத்தில் இந்த பொருட்களை கோவிலில் அபிஷேகத்துக்கு அர்ச்சனைக்கும் அன்னதானத்திற்கும் கொடுக்கலாம். தயிரன்னம் செய்து அன்னதானமாகக் கொடுப்பது -கற்கண்டு வழங்குவது சர்க்கரை பொங்கல் அன்னதானம் என அனைத்தும் வழங்கலாம் .
நம் மனதிற்கு மிகுந்த ஆனந்தத்தை கொடுக்கக்கூடிய -நம் வம்சம் நன்றாக தழைத்து செல்வம் பெருக தெய்வத்தின் அருள் கிடைப்பதற்கு நாம் இப்படிப்பட்ட தானங்கள் வழங்கி இந்த அட்சயதிரிதியில் வாழ்க்கையில் சிறப்பை அடையலாம்.
Copy rights at balakshithaIn
வாழ்க்கையிலே மனம் அறம் மங்கலம் செல்வங்கள் சிறப்புகள் என ஐங்கனி சுவை தேனோடு கலந்த வாழ்வுதனை இந்த அட்சய திருதியில் வேண்டி நாம் பெறலாம்.
சித்திரை மாதம் அமாவாசைக்கு மூன்றாம் நாள் அட்சய திருதியை.
திரிதியை திதி அன்று அதிகமான நிறைய தெய்வீக நிகழ்ச்சிகள் அனைத்தும் நடந்த சுபதினம்.
குபேரனுக்கு பதவி கிடைத்த தினம் பாஞ்சாலிக்கு அட்சய பாத்திரம்
பெற்ற தினம் -கங்கை நதியானவள் பூமியில் பிறந்த தினம்- ஐஸ்வர்ய லட்சுமி தான்ய லட்சுமி அவதாரம் நிகழ்ந்த தினம் -அன்னபூரணி அம்மையிடம் அன்னம் பெற்று பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து ஈஸ்வரன் விடுபட்ட தினம் ..என பல அற்புதங்கள் நிகழ்ந்த தினம் தான் அட்சய திருதியை .
திருதியை அன்று அட்சய பொருட்கள் அதாவது சுபீட்ச பொருட்கள் நாம் கடையில் வாங்க வேண்டும் அதுபோல தானமாக பிறருக்கு கொடுக்க வேண்டும் .
இப்படி செய்தால் நாம் வாழ்க்கையில் சுபிட்சம் பெறலாம் -வீட்டில் செல்வ சேர்க்கை உண்டாகும் -குபேரன் வாசம் வீட்டில் நிலவும் -மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் - எந்த காரியத்திலும் வெற்றி கிடைக்கும்.
அட்சய திருதியை அன்று பிரம்ம முகூர்த்தத்தில் கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும். மகாலட்சுமி படத்திற்கு மல்லிகை மலர் சாற்றி ஐந்து முக விளக்கை ஏற்றி..
வீடு முழுவதும் வத்திநறுமணமும் தெய்வ பாடலும்ஒலிக்கட்டும்..
மனமுருக மஹாலக்ஷ்மி நினைத்து வேண்டினால் மகா லட்சுமியின் அருள்கடாட்சம் நமக்கு கிடைத்து செல்வங்கள் தானாக வீடு தேடி வரு வதற்கான அருமையான அற்புதமானதினமே அட்சய திருதியை .
வடக்கு நோக்கி மனதிலே அமர்ந்து 108 மகாலட்சுமி போற்றி 108 குபேரர் போற்றி பாடலாம்.
அன்றைய தினத்தில் லட்சுமி குபேர பூஜை செய்தால் ஏழு தலைமுறைக்கு தேவையான செல்வங்கள் குவியும். அந்தநாளில் குபேரனின் அம்சமான நாள் என்பதால் நகைகள் வாங்கலாம்.
அப்படி முடியாதவர்கள் நம்மால் முடிந்த -வெண்ணிற நிறம் கொண்ட பொருட்களை தானம் செய்யலாம். அட்சய திருதியை என்பதை மனதில் கிரகித்துகொண்டு மனமுருக மஹாலக்ஷ்மியை வேண்டி அன்றைய தினத்தில்- பொருட்கள் வாங்கலாம் பொருட்களை தானம் செய்யலாம்.
சர்க்கரை- கல்கண்டு -அரிசி மல்லிகைப்பூ- பால் -கல்லுப்பு என தெய்வத்திற்கு உகந்த இந்த பொருட்களை வாங்கலாம். தானம் செய்யலாம் .இதில் ஏதாவது ஒரு பொருளை வாங்கி பூஜை அறையில் வைத்து வழிபட்டால் செல்வ கடாட்சம் பெருகும் .
அன்றைய தினத்தில் இந்த பொருட்களை கோவிலில் அபிஷேகத்துக்கு அர்ச்சனைக்கும் அன்னதானத்திற்கும் கொடுக்கலாம். தயிரன்னம் செய்து அன்னதானமாகக் கொடுப்பது -கற்கண்டு வழங்குவது சர்க்கரை பொங்கல் அன்னதானம் என அனைத்தும் வழங்கலாம் .
நம் மனதிற்கு மிகுந்த ஆனந்தத்தை கொடுக்கக்கூடிய -நம் வம்சம் நன்றாக தழைத்து செல்வம் பெருக தெய்வத்தின் அருள் கிடைப்பதற்கு நாம் இப்படிப்பட்ட தானங்கள் வழங்கி இந்த அட்சயதிரிதியில் வாழ்க்கையில் சிறப்பை அடையலாம்.
Copy rights at balakshithaIn
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக