புதன், 5 ஆகஸ்ட், 2020

திருமணம் கை கூட- மழலை செல்வம் பெற - அடிப்பிரதட்சணம் வழிபாடு

 திருமணம் விரைவில் கை கூட- மழலைச் செல்வம் இனிதே பெற நாகாத்தம்மன் கோவிலில் அடிப்பிரதட்சணம் வழிபாடு


 இந்த பூமி- கடல்- காற்று- வான் அனைத்தும் தமக்குள் அடக்கமாக தாமே ஆதிபராசக்தியாக  அன்னையின் அம்சமாக- தாய்மையில் சிகரமாக நம்முடைய உள்ளத்திலே குடி கொண்டிருக்கிறாள் அன்னை அபிராமி .

அவளை வணங்கினால் எப்படிப்பட்ட தோஷங்களும் இருந்தாலும் நம்மிடமிருந்து விலகி பரிபூரணமாக அம்மன் அருள் பெற்று திருமணம் உடனே நடைபெறும் ..அதற்கான வழிபாட்டினை காண்போம்.

நாக புற்றுகள்- நாக மூர்த்திகள் இருக்கும் அம்மன் ஆலயம்  அருகில் இருந்தால் அந்த கோவிலுக்கு செல்லவும் . நல்ல நாள் பார்த்து விரதத்தை ஆரம்பிக்கலாம். 

புற்றுமண்ணுக்கு சக்தி அதிகம்.  புற்று மண்ணை தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டால் போதும் ..பூர்வ ஜென்ம பலன் கிடைக்கும் .

108 சிவாலயங்கள் சென்று வந்த பலன் அனைத்தும்-   புற்று மண்ணை தொட்டு வணங்குபவருக்கு கிடைக்கும் செல்வம் சம்பத்து உண்டாகும்.

ஊற்று போல் வாழ்வு சிறக்கும். மனம் போல் மாங்கல்யம் கிடைக்கும் மழலைச்சொல் கேளார் மழலை செல்வம் பெற்று வாழ்வில் காண்பார்.



விரதம் இருக்கும் முறை.. 

வெள்ளிக்கிழமை மற்றும் பஞ்சமி நாட்களில் ஒரு நல்ல நாளாக தேர்ந்தெடுத்துக் கொள்ளவும் .

 அருகிலே நாக புற்று கொண்ட அம்மன் கோவில் இருந்தால் - கோவிலுக்கு திருமணம் ஆகவேண்டிய மகளை  அழைத்துச்சென்று -5 அகல் தீபம் ஏற்றி வைத்து தெய்வத்தை வேண்டி அடிப்பிரதட்சணம் செய்ய வேண்டும்.

புற்றுக்கு  பால் ஊற்றி நாக அம்மனை திருமணம் தடைபடாது விரைவில் நடக்க வேண்டும் 

குழந்தை செல்வம் பெற வேண்டும். விரைவில் கருத்தரிக்க வேண்டும் என வேண்டிக்கொண்டு.. 

ஒவ்வொரு அடியாக அடிப்பிரதட்சணம் செய்கின்ற போதும் மனம் தெய்வத்தோடு ஒன்றி திருமணம் நடக்க வேண்டும் என வேண்டிக்கொண்டு -கோவிலை சுற்றி வந்தால் எடுத்து வைக்கும் அந்த அதிர்வலைகளின் சக்தியில் தெய்வத்தின் மனம் கனிந்து- திருமண ஆசிகளை வழங்கி அருள் புரிவாள் என்பது ஐதீகம்.

ஒன்பது வாரங்களும் 5 சுமங்கலி பெண்களுக்கு நம்மால் முடிந்த வெத்திலை பாக்கு மஞ்சள் -குங்குமம் என தாம்பூலம் வைத்து கொடுக்க வேண்டும். முடிந்தவர்கள் ஜாக்கெட் பிட் சேர்த்து வழங்கலாம்.

தொடர்ந்து ஒன்பது வாரங்கள் கோவிலுக்கு சென்று தீபமேற்றி அடிப்பிரதட்சணம் செய்து வழிபட்டால்
மூன்றே மாதத்தில் திருமணம் நிச்சயமாகி விரைவில் திருமணம் நடக்கும்.

வெள்ளிக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை அன்று பூஜை அறையை சுத்தம் செய்து மலர் அலங்காரம் செய்து விளக்கேற்றவும்
..

கோவிலுக்கு போக முடியவில்லை என்ற  இந்த சூழ்நிலையில் - தொடங்கும் நாள் மட்டும்  கோவிலுக்கு சென்று 5 அகல் தீபம் ஏற்றி மற்றும் புற்று மணலை  தொட்டு வணங்கவும் .

அதன்பிறகு வீட்டிலேயே  ஒன்பது வாரங்கள் தொடர்ந்து  ஐந்து அகல் விளக்கு நெய் தீபம் ஏற்றி  வைத்து..

வடக்கு நோக்கி மனையிலே அமர்ந்து மனதார நாக அம்மனை நினைத்து வணங்கவும்  . மனதிலே தெய்வீகமான ஒரு கற்பனையில் உருவாக்கவும். ..

கையிலே ஒரு கிண்ணம் பால் எடுத்து கொள்ளுங்கள். மனதை  ஒரு நிலை படுத்தி தெய்வமே.. தெய்வமே நாக வடிவம் பெற்று  புற்றில் இருந்து இறங்கி வந்து நம் கைகளில் வைத்திருக்கும் பாலை குடிப்பது அந்த தெய்வீக உணர்வை மனதால் உணரவும்.

விளக்கேற்றி அம்மனை நினைத்து 'நாகாத்தம்மனே  போற்றி போற்றி' எனும் 108 போற்றி சொல்லி வழிபட்டால் நினைத்த காரியம் அனைத்தும் ஜெயமாகும்.

மலர் மலர்ந்தால் இறைவனுக்கும் மங்கலம் நிறைந்தால் குடும்பத்திற்கும் மாசற்ற மனம் நிறைந்தால் மகிழ்ச்சிக்கும் -குணம் நிறைந்தால் குலத்திற்கும் -கைகள் பணித்தால் ஈகைக்கும் வித்திட்டு கடமையில் கண்ணாக வாழ்ந்து - வாழ்ந்த பயனை அடைந்து - வாழ்வினில் இனிது காண்போம்.

மேலும் படிக்க..
 வாழ்க்கையில் உயர்வை கொடுக்கும் வெற்றிலை இனிப்பு தீர்த்தம்🌹🍀🌹👇
https://balakshitha.blogspot.com/2020/04/blog-post_27.html

பிரதோஷம் அன்று விரதம் இருக்கும் முறை 🌹🍀🌹🍀👇👇👇👇👇👇👇👇
https://balakshitha.blogspot.com/2020/03/1.html


Copy rights at balakshitha







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக