திருமணத்திற்கு மாங்கல்யம் எந்தநாள் எப்படி யாரிடம் செய்வதற்கு கொடுக்க வேண்டும்
பெண் எனும் இனியாள் கழுத்தில் நிறைந்திருக்கும் பொன்நகை ஆயிரம் இருந்தாலும்.. பொன்னை உருக்கி செய்யப்பட்ட தங்க நிறம் என ஜொலிக்கும் தாலிக்கு இணையாகாது.
தமக்கு வருகின்ற ஒரு மனையாள் நல்லாளாக ஆக காலமெல்லாம் வழி நடந்திட வேண்டும் என கணவன் தாலிகட்ட..
காலமெல்லாம் தமை காக்கும் கணவன் மனம் அறிந்து தாமும் நடந்திட வேண்டும்.. என மனைவி தாலியைக் ஏற்பதும்.. உணர்த்துகின்ற அரும்பொருளே பொன்னால் உருக்கி செய்யப்பட்ட மாங்கல்யம்.
இந்து முறைப்படி பெண் சுமக்கும் மாங்கல்யம்- தவறு செய்ய விடாது வழிநடத்தும் மாங்கல்யம்- குடும்ப பாரத்தை இனிதாக சுமக்க உணர்த்தும் மாங்கல்யம்- இதயத்திற்கு பலமாய் அமையும் கருவியாக மாங்கல்யம்- மலை போல் சோதனைகளையும் எதிர்த்து நின்று போராடும் திறன் அளிக்கும் மாங்கல்யம் - மலர்போன்ற பெண்ணாள் பத்தரை மாற்றுத் தங்கமாய் உருவேற்றும் மாங்கல்யம் மனதிற்கு புத்துணர்ச்சி தரும் மாங்கல்யம் -அந்த மாங்கல்யம் செய்யப்படும் நாள் -செய்யப்படும் நேரம் -செய்பவர் யார்! எப்படி செய்யப்பட வேண்டும் ..என்பதற்கான ஐதீகத்தை தெரிந்துகொள்வோம்
மாங்கல்யம் செய்யும் முறை..
திருமணநிச்சயதார்த்தம் முடிந்ததும்ஒரு நல்ல நாள் பார்க்க வேண்டும்.
அன்றைய தினத்திலே மாங்கல்யம் செய்வதற்கான தங்க நாணயம் வீட்டினில் வாங்கி பூஜை அறையில் வைப்பது சிறப்பு.
தங்கத் தாமரையில் வீற்றிருக்கும் மகாலட்சுமியின் அருள் பெற்ற குபேரனின் அனுக்கிரகம் பெற்ற
தங்க நாணயம் உருக்கப்பட்டு தாலி செய்யப்பட வேண்டும்.
நாம் பூஜை அறையிலே வைத்து ஐந்து முக விளக்கை ஏற்றி மங்கல இசை நாதத்திலே மனம் குளிர்ந்த அந்த தங்க நாணயத்தால் செய்யப்படும் நாங்கள் எதிர்க்க மிகப் பெரிய மகத்துவம் உண்டு.
வீட்டில் வரக்கூடிய மகாலட்சுமியின் கழுத்தில் அலங்கரிக்கும் அந்த தாலி மஞ்சள் குங்குமம் என்றும் நிறைந்திருக்கும் அந்த தாலி- மாங்கல்ய பலம் கொடுக்கக்கூடிய அந்த தாலி- பூஜை அறையில் வைத்து நம்முடைய குல தெய்வத்தை நினைத்து படைக்கப்பட்ட தங்க நாணயத்தில் இருந்து உருக்கப்பட்டு செய்யப்பட வேண்டும்.
எந்த நாளில் மாங்கல்யம் செய்யப்பட வேண்டும்
மாங்கல்யம் மணமகன் இல்லத்தில் செய்யப்பட வேண்டும் . மணமகன் வீட்டில் முகூர்த்தக்கால் நடும் விழா அன்று மாங்கல்யம் செய்வதற்கான நாள் குறிக்கப்பட வேண்டும் .
முகூர்த்தக்கால் நடும் விழா எவ்வாறு செய்ய வேண்டும் 🌹🍀🌹👇👇
https://balakshitha.blogspot.com/2020/01/blog-post_6.html
என்றும் எங்கள் இல்லத்தில் நிறைந்து எங்கள் மனதிலே வாழ்ந்து- எங்கள் குடும்பத்தோடு இசைந்து -கணவன் மனைவி பந்தத்தில் இணைந்து வாழையடி வாழையாக குலம் தழைத்து வளர்ந்து வாழ வேண்டும் என மணமகன் வீட்டார் குலமகளை வரவேற்க தயாராகும் ஒரு அற்புத நாள்தான் மணமகன் வீட்டில் போடப்படும் முகூர்த்தக்கால் நடும் விழா.
சொந்த பந்தங்களை அழைத்து பந்தக்கால் நடும் விழா செய்கின்ற அந்த நாளில் - மாங்கல்யம் செய்வதற்கான கொடுப்பதற்கான ஏற்ற நாள் . அன்றைய தினத்தில் சொந்த பந்தங்கள் அனைவரின் முன்னிலையில் தங்க நாணயத்தை பூஜை அறையில் வைத்து படைக்க வேண்டும் .
அனைத்து சொந்த பந்தங்களின் முன்னிலையில் நம்முடைய பரம்பரையாக செய்யக்கூடிய பொற்கொல்லர் அதாவது பத்தரை வரவழைத்து மூத்த சுமங்கலிகள் கையால் தட்டில் பழங்கள், வெற்றிலை பாக்கு மலர் என வைத்து அதில் மாங்கல்யத்திற்காக படைக்கப்பட்ட தங்க நாணயத்தை வைத்து கொடுப்பது மிக உத்தமம்.
பொதுவாகவே ஒரு வீட்டில் வருடத்திற்கு ஒருமுறையாவது தங்க நாணயம் வாங்கி படைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது மிக சிறப்பு. கணபதி பூஜை அல்லது நோன்பு என்று நல்ல பூஜை நாட்களில் தங்க நாணயம் வாங்கி வைத்து பூஜை அறையில் படைக்கவும் .
அந்த நாணயங்களை உருக்கி செய்யப்படும் நகைகள் என்றென்றும் வீட்டில் இருந்தால் வீட்டில் சுபிட்சம் நிலவும்.
கண் திருஷ்டி தோஷம் அனைத்தும் விலகி சுபநிகழ்ச்சிகள் இனிதாக நடைப்பெறும் கல் உப்பிலே செய்யகூடியு ஐந்து விதமான பரிகாரங்கள்🙏🌹🍀👇👇
https://youtu.be/0p5op0-Zjwkகுபேரன் பகவான் அருள் நிறைந்து செல்வ செழிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்து கொண்டே இருக்கும். அட்சய பாத்திரம் போன்ற செல்வங்கள் நம் வீட்டிலே அள்ளக் குறையாது நிறைந்து இருப்பதற்கு- நல்ல பண்டிகை நாட்களில் நாம் தங்க நாணயம்வாங்கி பூஜை அறையில் வைத்து படைப்பதுப்பது மிக சிறப்பு.
பரந்தாமனின் மார்பில் தவழ்கின்ற மகாலட்சுமி நெஞ்சத்தை அலங்கரிக்கும் மாங்கல்யத்தின் பாக்கியத்தை மங்கையர்கள் அனைவரும் பெற்று சிறப்புற தீர்க்க சுமங்கலியாய்பல்லாண்டு பல்லாண்டு வாழியவே.
மேலும் படிக்கலாம்..
சொந்தமாக வீடு மனை வாங்க அதற்கான பரிகாரங்கள் 🍀🌹👇
https://balakshitha.blogspot.com/2020/09/blog-post_27.html
வீடு மனை அமைவதற்கான 10 தெய்வீக வழிபாட்டு புத்தகத்தை Amazon Kindle app டவுன்லோட் செய்து படித்துப்பயன் பெறலாம்🌹🍀👇👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC
Copy rights at balakshitha
.
Hi unga blog padichen.. romba nallaruku..azhaga ezhuthirukinga.. ungaluku oru help panalam nu iruken,
பதிலளிநீக்குI'm a paid Graphics Designer, I would like to do free design work for your blog.