தமிழ் வருட மாத விசேஷ தினங்களின் முக்கியத்துவம்
படையலின் மிக முக்கியமான பொருட்கள்
தெய்வத்திற்கும் நமக்கும் உள்ள தொடர்பை ஆழமாக உணர செய்வது ஆன்மீகம்.
இன்றைய சூழ்நிலையில் நாகரீகம் வளர்ந்து விட்டது. பண்பாடு குறைந்துவிட்டது. நம் முன்னோர் சொன்ன சொல் மறந்துவிட்டது.
எங்கே செல்கின்றது உலகம்! நம் வாழ்க்கையின் தரம் எப்படி இருக்கின்றது- உணர்கின்ற நேரத்தை நாம் உருவாக்க வேண்டும் . ஆனால் நாகரீகம் வளர்ந்தாலும் பண்பாடு குறைந்தாலும் முன்னோர் சொன்ன சொல் மறந்தாலும் .... என்றும் மாறாமல் இருப்பது நம்முடைய விரத முறை வழிபாடுகள் மட்டுமே.
ஆம்! மாதம் தோறும் வணங்கி வழிபடக்கூடிய விசேஷமான விரத தினங்கள் சங்கடகர சதுர்த்தி, கிருத்திகை, அமாவாசை, பிரதோஷம்.... என பல விரத தினங்களில் இன்றும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் வழிந்து கொண்டுதான் இருக்கின்றது.
தீபாரதனை சிறப்பாக நடக்கின்றது விளக்குகளின் ஒளி தீபம் பக்தியின் ஒளிப்பிழம்பாக மிளிர்கின்றது. கலியுகத்தில் ஆயிரம் தவறுகள் நடந்தாலும் மனிதநேயம் ஆன்மீகத்தில் அதிகம் ஆட்சி செய்வது இன்றும் விரத தினங்களில் காணமுடிகின்றது.
அப்படிப்பட்ட விரத தினங்களில் நாம் செய்யக்கூடிய நெய்வேத்தியம் பற்றிய முழுமையை அறிந்துகண்டு அதன்படி செய்து வழிபட்டால், நாம் வாழ்க்கையில் அனைத்து வளமும் பெருகும் என்பது விசேஷ தினத்துக்குரிய சிறப்பு.
நாம் வணங்கும் தெய்வத்துக்கான விரத தினங்களில் வைக்கப்படும் நைவேத்யம் சிறப்பினை பற்றி அவசியம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
சிறப்பு-1 1தெய்வத்திற்கும் நமக்கும் உள்ள தொடர்பை அதிகப்படுத்துவது நைவேத்தியம்.
சிறப்பு- 2 மனதை கட்டுப்படுத்தும் கலையை செய்வது நெய்வேத்தியம்.
சிறப்பு - 3 நோய் நொடி இலா சுக ஆரோக்கிய வாழ்வை அளிப்பது நெய்வேத்தியம்.
சிறப்பு - 4 ஒரு வேண்டுதல் நிறைவேற தூண்டுகோலாய் இருப்பது நெய்வேத்தியம் .
சிறப்பு- 5 மனித வாழ்வின் பிறவிப்பயன் தீர்ந்து மோட்சம் அளிப்பது நைவேத்தியம் .
அப்படிப்பட்ட தெய்வீக பிரசாதம், விசேஷம் விரத தினங்களில் பயபக்தியோடு செய்து தெய்வத்திற்கு படைப்பது மிக உத்தமம்.
பசுமையான வாழ்க்கைக்கு வாழை இலை படையல் விசேஷ விரத தினங்களுக்கு தெய்வத்திற்கு மிகவும் உகந்தது.
சாதம் தங்களுக்கு தேவையான அரிசி பலவாக இருக்கலாம் ஆனால் ஒரு பிடி பச்சரிசி சேர்த்து சாதம்தனை தெய்வத்திற்கு உகந்த படையல் நைவேத்யம்.
உப்பு கார சுவைகளை குறைத்து தெய்வத்திற்கு உகந்த நெய்தனை சேர்த்தால் அதுவே தெய்வத்துக்கு மிகவும் பிடித்தமான பிரசாதம்.
வருட மாத விசேஷ தினங்களை மறவாதீர்கள். அன்றைய தினம் அறிந்து வீட்டில் அல்லது கோவிலில் அரைமணிநேரம் ஆன்மீகத்தில் மனதை ஆட்சி செய்யுங்கள் .
உங்கள் வாழ்க்கை மாறும். புத்துணர்ச்சி மனதில் பிறக்கும். நம்பிக்கை மலர் பூக்கும். நினைத்தது கைகூடும்.
பூஜை அறை சாஸ்திரங்கள் பகுதி-1
https://balakshitha.blogspot.com/2021/0 மற்ற4/1.html
தெய்வீகமான மாங்கல்யத்தை, எந்த நேரத்தில் யாரிடம் எவ்வாறு செய்வது முழுமையான விளக்கங்கள் 🙏🌹👇👇
https://balakshitha.blogspot.com/2021/03/blog-post.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக