தீபங்கள் ஏற்றி மகிழும் தீபாவளி வருக வருக
தீபம்+ ஒளி தீபாவளி
தீபத்திருநாள் .தீபங்கள் ஏற்றப்பட்டு நம் வாழ்க்கை தரம் ஒளிரும் சுபநாள்.
புத்தம்புது புத்தாடை மெருகோடு உறவுகளோடு உறவாடி இனிப்புகளை பகிர்ந்து இசை பாடி கொண்டாடும் ஒரு நன்னாள்.
பட்டாசு ஒளிர்கின்ற ஒளியினில் உலகமே கொண்டாடும் திருநாள்.
நம்முடைய மனதில் உள்ள அசுர தன்மையுள்ள எண்ணங்கள் விலகி புதிய எண்ணங்களை தீபமாய் ஏற்றி கொண்டாடும் ஒரு நன்னாள் .
தீபாவளி பிறந்த வரலாறு
அசுரனை அழிக்க விஷ்ணு பகவான் வராக அவதாரம் எடுத்து பூமாதேவியை உரச...
பூமாதேவிக்கு பிறந்தவன் தான் நரகாசுரன் எனும் அசுரன்.
பிள்ளையே தவறு செய்தாலும் தட்டி கேட்பவள்
தாயாகத்தான் இருக்க முடியும் என உலகுக்கு எடுத்துக்காட்ட...
பூமாதேவியின் அவதாரமான சத்தியபாமா தன் மகனை அழித்த வரலாறுதனை எடுத்துக்காட்டிய திருநாள் .
இறக்கும் தருணத்தில் தம்முடைய தவறை உணர்ந்த நரகாசுரன், தீமைகள் அழிக்கப்பட வேண்டி தான் பிறந்த நாளை உலகமே கொண்டாட வேண்டும்...
என்று வேண்டிக் கொண்ட ஒரு சுபநாள்.
தீபாவளி ஏன் வந்தது! நாம் ஏன் கொண்டாடுகின்றோம்! எனும் வரலாறு தனை குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள் .
குழந்தைகளின் மனதில் இருக்கும் களைகளை நீக்கி , செழித்து வளரக்கூடிய நெல் மணிகளாக உருவாக்க, இந்த நாள் மிகவும் பொன்னான ஒரு திருநாள்.
தீமை செய்வது தவறு என்பதை புரிய வைப்பதற்காக கொண்டாடப்படுவது தான் தீபாவளி என தீபமேற்றி பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழுங்கள்.
தீபாவளி எனும் விழா கொண்டாடி மகிழ்ந்து குடும்பத்தோடு உறவாடி சிரித்து இனிப்புகள் வழங்கி இல்லறம்கூடி இனிதே வாழ்க.
பட்டாசு வெடிக்கும் போது மிகமிக கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்🙏🌹🍀🌹👇👇
https://balakshitha.blogspot.com/2019/10/blog-post_87.html
நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹
Copy rights at Balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக