குடும்ப தலைவனின் தலையாய கடமை தம்முடைய குடும்பத்தை செவ்வனே நடத்திச் செல்வது...
குடும்பத்தில் பொறுப்புகள் அனைத்தும் தான் கொண்டு , புரிந்து.. குடும்பத்தை வழிநடத்தும் திறன் கொண்டு, தாம் போகின்ற பாதையில் தம் மக்களையும் (மகனையும்) அழைத்துச் சென்று நாளை இன்னார்க்கு பிறந்த மகன் (ள்) என்று பெயர் சொல்லும் அளவிற்கு வழிநடத்துதல் என்பதும் தலைமை பொறுப்பில் இருக்கும் சிறந்த தலைவன் பொறுப்பு.
புரிதல் என்பது இன்று யாருக்குண்டு! மனம் போல் வாழ்ந்து தன் சுயம் போல் நடந்து , பொறுப்பில்லாத வாழும் வாழ்க்கை என்றும் இனிமை தருமா!
நிச்சயம் ஒருபொழுதும் அப்பக்கம் சாயாதீர். அது அனுதினமும் ஆனந்தம் தந்தாலும் ஒரு நிலையில் மனம் ஒவ்வாது துன்பத்தில் கொண்டுபோய் நிறுத்திவிடும்.
அன்று அப்பாவின் முதுகில் உப்பு மூட்டை சுமந்து, அம்மாவின் மடியில் படுத்து உறங்கும் சுகம் கண்டு வாழ்ந்த நீங்கள் இன்று குடும்பத் தலைவன் என்ற பொறுப்பு வந்ததும் தானும் ஒரு தகப்பன் என்ற உயர்ந்த ஸ்தானத்தை அடைநதீர். அதில் எடுக்கக்கூடிய கடமைகள் என்ன!
தம்முடைய தாய் தகப்பனுக்கு மகன் ஆற்றும் கடமை
தமக்கைக்கு பாகம் கொடுக்கும் கடமை
மனைவிக்கு பரிவு காட்டும் கடமை
பிள்ளைகளுக்கு சொத்து மட்டுமல்லாது நல்ல நற்பண்புகளையும் அளிக்கும் கடமை
வேலை செய்யும் இடத்தில் நேர்மையாக பணி செய்யும் கடமை
நாட்டுக்கு நலன் செய்யும் கடமை
கொடுத்து சிவந்த கைகள் பெற்று புண்ணியம் பல பிள்ளைகளுக்கும் சேர்த்து வைக்கும் கடமை
தான் செய்த பொறுப்புகளில் நிறைவு கண்டு முடிவில் முதுமையில் மகிழ்வோடு தலைசாய்க்கும் கடமை
அப்பப்பா கடமைதனில் இத்தனை வகை உண்டா! இதற்குத் தீர்வுதான் என்ன! என்று ஒரு பொழுதும் அசராதீர்
குடும்ப தலைவனுக்கு உள்ள பொறுப்பு குடும்பத் தலைவிக்கும் என்றும் பங்கு உண்டு. சிவசக்தி சொரூபமாய் வாழ்வதில் சிறப்பும் உண்டு
பொறுமை , நிதானம் , செயலாற்றும் திறன் , வழி நடத்தும் கொள்கை, தெய்வ நம்பிக்கை , தன்னம்பிக்கை, தளராத மனம்… இவை அனைத்தும் அமைந்துவிட்டால் …
குடும்பத்தின் பொருப்பு எனும் கனம் கலைந்து குடும்பத்தின் பொறுப்பில் குடும்பத் தலைவன் எனும் அங்கீகாரத்தில் சுகம் உண்டு என்பதை அறிந்து கொண்டால் புரிந்து கொண்டால் வாழ்க்கை என்றும் இனிமையே..
நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹
Copy rights at Balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக