இளைஞர்கள் இந்த நூற்றாண்டில் எப்படி இருக்க வேண்டும்!
கடல் நீர் எரி பொருளாக மாற்றி இருசக்கர வாகனம் லிட்டருக்கு 98 கிலோ மீட்டர் பயணிக்கும் வகையில் புதிய கண்டுபிடிப்பை உருவாக்கி , தமிழகத்தை சேர்ந்த 7 வயது சிறுவன் உலக சாதனை படைத்துள்ளார்.
சென்னையை அடுத்த கோடம்பாக்கத்தின் தனியார் நிறுவனத்தில் மதுரையை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவன் அகிலேஷ் என்பவர் ஆராய்ச்சி பயிற்சி பெற்று வருகிறார் . இந்த சிறுவன் கடல் நீரில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஹைட்ரஜன் காற்றில் எரிபொருளாக மாற்றி இருசக்கர வாகனம் லிட்டருக்கு 98 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும் எனும் கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளார்.
போலந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச கண்டுபிடிப்புகள் போட்டியில் உலக அளவில் சுமார் 400க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகள் இடம்பெற்றன . இதில் இந்தியாவை சேர்ந்த அஷ்வித் தனது கண்டுபிடிப்பிற்காக தங்கம் வென்று உலக சாதனை படைத்துள்ளார். இது தற்போதைய செய்தி.
இந்த சிறுவன் உலக சாதனை படைத்து இருப்பது நமக்கெல்லாம் பெருமை தரக்கூடிய செய்தி.
20 வயதிற்கு மேற்பட்டு செய்யக்கூடிய திறமைகளை இந்த சிறு வயதில் செய்து இளைஞனாக காட்சி அளிப்பதற்கு முக்கிய காரணங்கள் என்ன என்பதை சிறிது சிந்தித்து சிதறிய வார்த்தைகளை கோர்வைகளாக கோர்ப்போம்.
குழந்தைகள் நல்ல திறமையோடு வருவதற்கு
1- பெற்றோர்
2 - ஆசிரியர்
3 - சக தோழர்கள் ஊக்குவிப்பு
4 - அறிவாற்றல்
அனைத்தும் சிறப்பு அம்சமாக இருக்க வேண்டும்.
ஒரு விளக்கு பிரகாசமாய் எரிய தேவையானது என்ன!
எண்ணெய் , திரி, காற்றின் அனுகூலம் இவை அனைத்தும் இருந்தால் மட்டுமே ஒரு தீபத்தின் ஒளி சுற்றிலும் சுடர்விட்டு பிரகாசமாய் எரியும்.
வாழ்க்கை எனும் அகல்விளக்கு
காற்று என்பது தெய்வத்தின் அனுக்கிரகம்
அகல் விளக்கில் ஊற்றும் எண்ணையாக பெற்றோர்கள்
திரி யாக நல்ல ஆசிரியர் (குரு) இருந்தால் மட்டுமே விளக்கு பிரகாசமாக ஒளி வீசுதல் போன்று , அந்த குழந்தைகளின் அறிவாற்றல் , சாதனை உலகுக்கு தெரியவரும்.
இளைஞர்கள் இந்த நூற்றாண்டில் இருக்க வேண்டிய தேவைகள் என்ன என்பதற்கு விளக்கம் இதுதான்.
இப்படித்தான் ஒவ்வொரு இளைஞனும் உருவாக வேண்டும் . அதற்கேற்ப இருக்கக்கூடிய பண்புகளையும் பற்றி சிறிது உரையாடுவோம்...
பணிவு என்றும் வேண்டும் பாரம்பரியம் பிறழாமை வேண்டும் நெஞ்சினில் திடம் வேண்டும். திறம் வளம் பட வேண்டும் தீய சொல் பேசாமை வேண்டும். நேர்மைக்கினிய நெஞ்சு வேண்டும் . சாதனை படைப்பதில் அஷ்வித் போல் இருத்தல் வேண்டும். நம் இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்
இளைஞர்களுக்கு ஒரு நிமிடம் , கேட்ட பிறகு சிந்திக்க பல நிமிடம்...
சில இளைஞர்கள் வாழ்க்கையில் தோல்வி அடைந்தால் உடனே மனம் முறிந்து விடுகின்றனர் . ஒரு நிமிடம் சிந்தியுங்கள் ...
அழகான புத்தகம் தான் வாழ்க்கை. வாழ்க்கையின் சில பக்கங்களில் தவறு நிகழலாம். அதற்காக புத்தகத்தையே மூடிவிட நினைப்பது தவறன்றோ! வாழ்க்கையை முடித்து விட நினைப்பதை தவிர்த்து விடுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக