ஓடாத நதியும் தேடாத மனமும் தெளிவு கொள்ளாது.
தெளிவுபடுத்துங்கள் . தெளிவு கொண்டால் பார்க்கும் பார்வை தெளிவாகும். நாம் எப்படி வாழ வேண்டும் ! நம் கடமை என்ன! இந்த பூமியில் படைக்கப்பட்டது எதற்காக! என்பது புரிந்துவிடும் . கர்ம யோகத்தில் (யோக நிஷ்டை) 'உன் கடமையை ஒழுங்காக செய் உன்னுடைய வாழ்க்கை அர்த்தமுள்ளதாக விடும்' என்கிறது பகவத்கீதை.
மனம் இனிது- கடமை இனிதுநேர்மை இனிது -உண்மை இனிது தியாகம் இனிது என அறிந்து வாழ்வின் சுவையை அறிந்து வாழ்வில் இனிது காண்போம்.
பிறந்தேன் -வளர்ந்தேன் -வாழ்ந்தேன் என்பது தான் வாழ்க்கை என்றால்
ஒரு சிலர் வேண்டுமானால்- இனிமை எனலாம்.
ஆனால் தன்னுடைய வாழ்க்கையை அர்த்தம் நிறைந்த வாழ்க்கையாக வாழ்பவன் எவனோ அவனே வாழ்வினில் தலைசிறந்த மனிதனாக வாழ்பவன் ஆகின்றான்.
கடமையை சரியாக செய்வதிலும் ஒரு கடமை இருக்கிறது . அதுதான் லட்சியம் குறிக்கோள் லட்சியம் இருந்தால் மட்டுமே நிறைவு என்பதை நாம் காண முடியும்.
நாம் எடுக்கும் மிக பெரிய முடிவின் செயல் முழுமை பெற மிக சிறப்பான வழிமுறைகள்
1- பலருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் முடிவின் செயல் இனிது.
2- முடிவு எடுக்கப்படும் முன்பு அனுபவம் பெற்ற மனிதரிடம்-பகிர்வது இனிது.
3- முடிவின் செயல் வடிவாக்கத்தில் நேர்மை இனிது .
4- பற் பல சோதனை முறியடித்து வெற்றி பெறும் முடிவின் சுகம் இனிது .
5- இறைநம்பிக்கை கொண்ட மனதோடு எடுக்கும் முடிவின் செயல் வெற்றிக்கு இனிது.
இவையெல்லாம் கனிந்து வெற்றிக்கனியை தொடுவதற்கு
சில பல காலம் ஆனாலும் தளராது முயற்சி செய்தால்- அந்த முடிவின் செயலுக்கு வெற்றி நிச்சயம் .அதற்கான பலனை இறைவன் நிச்சயம் அளிப்பான்.
நம்முடைய இலட்சியம் வெற்றி பெறுவதற்கான தருணம் வந்துவிட்டது இதுதான் உங்கள் வாழ்க்கையின் சாதனை . அந்த சாதனையில் நீங்கள் வெற்றி பெற்று வாழ்க்கையை அர்த்தமுள்ள வாழ்க்கையாக வாழ ஆரம்பித்து விட்டீர்கள்
மிகவும் மகிழ்ச்சி . குறிக்கோளும் லட்சியமும் தங்கள் வசம். வெற்றி நிச்சயம் உங்களுக்கே .
முடிவில் ஒன்று மனிதப் பிறவியின் ரகசியத்தை சொல்லி பதிவை நிறைவு செய்கின்றேன்..
புது உலகை காண ஆவலோடு மண்ணிலிருந்து வெளிவந்த புழுதனையே அருமையான விருந்தென கொத்திப் போனது பூச்சி ஒன்று...
அந்தோ அப்பூச்சி, எங்கிருந்தோ பறந்து வந்த வண்டுக்கு இறையாகி , அடுத்த சில நிமிடத்தில் வண்டோ தவளையின் நாக்குக்கு ருசியாகி..
அய்யகோ ! வளைந்து நெளிந்து வந்த பாம்பின் கண்களில் அத்தவளை பட்டுவிட ...நடந்தது என்ன என்று நாம் அறிவதற்குள் எங்கிருந்தோ பறந்து வந்த பருந்து ஒன்று பாம்பை கவ்வி ருசி பார்க்க.. விருந்து உண்ட மகிழ்ச்சி நிலைப்பதற்குள் , எதிர்பாராது வந்த அம்புக்கு பருந்தோ அடிபணிய, நல்ல வேட்டை என மகிழ்ந்த வேடன் அவன் வீட்டில், அன்று பருந்து கறிச்சுவை மணம் மணக்க, சிறிது காலம் வாழ்ந்த வேடன் மரணித்து புதைத்தான் ஆறடி மண்ணுள்ளே. சிலநாளில் புதிய உலகம் காண வெளியே வந்தது புழு ஒன்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக