ஞாயிறு, 8 ஜூன், 2025

முருகனை நினைத்து முறையாக விரதம் இருக்கும் முறை


 முருகப்பெருமானை நினைத்து முறையாக விரதம் இருக்கும் முறை



அழகிய அரைஞான் ஆட -மார்பினில் உள்ள பூணூல் ஆட- மணம்  நிரம்பிய கடம்ப மாலை  ஆட -இடையாட- தோள் வளையாட- விளங்கும்  குழை ஆட -பன்னிரு  கைகளும் ஆட  - தாமரை மலர் போன்ற பன்னிரு  விழிகளோடு நெற்றிக்கண்  ஆறும் சேர்ந்தாட- மலர்ந்த  அழகிய வாய்இதழ்  ஆட- வேலாட- மயிலாட- நான்கு வேதங்களும் ஆட -அதைக்கண்டு நம்மையும் ஆட வைக்கும் முருகனின்  அழகுக்கு ஈடு இணை ஏது!

குமரகுருபரர்




தமிழ் கடவுள் ஆகிய முருகப்பெருமானை வணங்கினால் வாழ்க்கையில் அனைத்து கவலைகளும் பிரச்சனைகளும் தீர்ந்து சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். மாதத்தில் வரக்கூடிய கிருத்திகை சஷ்டி மற்றும் வைகாசி விசாகம், கந்த சஷ்டி ஆரம்பம் சூரசம்காரம் ஆகியவை முருகப்பெருமானுக்குரிய சிறப்பு தினங்கள் ஆகும் .


முருகப்பெருமானுக்குரிய அந்த சிறப்பு தினங்களில்

நாம் எவ்வாறு விரத முறைகளை கடைப்பிடிக்கலாம் என்பதை பற்றி பதிவினில் அறிந்து கொள்வோம்.

1- நம்முடைய காரியம் ஜெயம் ஆக  முருகனை வேண்டிகொண்டு விடிகாலை எழுந்து-ஸ்நானம் முடிந்தவுடன் ஆலயம் சென்று அர்ச்சனை வழிபாடுகளோடு  ஆரம்பித்தல் சிறப்பு.


2 - விநாயக பெருமானை வேண்டி அதன் பிறகே  நாம் விரதம் இருப்பதற்கான எம்பெருமான் முருகனை வேண்டுதல் மிக சிறப்பு. .


3‌-  நெற்றியிலே விபூதி குங்குமம் அல்லது சந்தனம் என குளிர்ந்து  நிறைந்து இருத்தல் விரதத்திற்கு உரிய தனிச்சிறப்பு .


 4 -  காலை மாலை விளக்கேற்றி முருகனின் புகழ் பாடி -கந்தபுராணம் கந்த சஷ்டி மனமுருகி மெய் கனிந்து படித்தல் விரதத்திற்கு சிறப்பு.


 5 - முருகனையே நினைத்து   காலை உணவை தவிர்த்து மதியம் ஒருவேளை உணவு உண்டு இரவில் பால் பழம் என அல்லது டிபன் எடுத்துக்கொள்வது முறையான விரதம் இருப்பதற்கான  சிறப்பு .


6 - விரதம் இருக்கும் பொழுது கோபப்படுதல், தவறாக பேசுதல்  கூடாது முடிந்தவரை மௌன விரதம் இருந்து அவசியத்திற்கு மட்டுமே பேசுவது என்பது விரதத்திற்கே சிறப்பு.





இப்படி முறையாக முருகப் பெருமானுக்குரிய சிறப்பு தினத்தில் முருகனை நினைத்து விரதத்தை முறையாக எடுத்துக்கொண்டு , நாம் ஒரு வேண்டுதலை இறைவனிடம் வைத்தால் அளவில்லாத ஆனந்தம் கொண்டு கந்தன் கடம்பன் கதிர்வேலன் முருகன் என அன்போடு அழைக்கப்படும் மயில் மீது அமர்ந்திருக்கும் எம்பெருமான் குமரனவன் பலனை இனிதே நிறைவேற்றி வாழ்க்கையில் ஒளியேற்றி கவலையெல்லாம் நீக்கி அருள்புரிவான்.





விரத தினத்தன்று முருகனையே நினைத்து ‌மனதை ஒரு நிலைப்படுத்தி,  உபவாசம் இருந்து,  சிந்தை தெளிவாகி ஒழுக்க அறநெறிகள் தான் கொண்டு வாழ்வோம். இம்மை மறுமையிலும் இறை அருள் பெற்று இனிதாக வாழ்ந்து நம்முடைய வாழ்வின் பிறவிப்பயனை இனிதே பூர்த்தி செய்து நிறைவு காண்போம்.


நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக