திங்கள், 16 ஜூன், 2025

முருகப்பெருமானின் அறுபடை வீடுகள்

 


முருகப்பெருமானின் அறுபடை வீடுகள்

திருப்பரங்குன்றம் 

 



முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு

என மிகவும் புகழ்பெற்ற திருத்தலம் திருப்பரங்குன்றம் 

அந்தத் திருத்தலத்தில் தான் முருகன் தெய்வானையை

மணந்து திருமண கோலத்தில் காட்சி தருகிறார்.

முருகன் என்றால் அழகு.  அழகு என்றால் முருகன். 

அவருக்குத் துணையாய் மனைவியாய் தெய்வானையோடு

பக்தர்களுக்கு அருள் பாவிக்கின்றார். 


முருகன் தெய்வானையை ஏன் திருமணம் புரிந்தார்?

 தேவர்கள் அசுரர்களிடம் சிறை பட்டுத் துன்புற்றபோது

முருகப்பெருமான் சூரசம்ஹாரம் புரிந்த தேவர்களை

காப்பாற்றுகிறார்.  அதனால் மகிழ்ச்சியுற்று,  இந்திரன்

தன் மகளாகிய தெய்வானையை முருகப்பெருமானுக்கு

நிச்சயம் செய்கிறார். திருப்பரங்குன்றத்திலே மிகவும்

கோலாகலமாய் முருகப்பெருமானுக்கும் தெய்வானைக்கும்

திருமணம் நடைபெறுகிறது அப்படிப்பட்ட புகழ்பெற்ற

திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில்

முதல் படை வீடாகப் புகழ்பெற்று விளங்குகிறது. 

.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக