புதன், 25 ஜூன், 2025

அடுத்த மாதம் ஆடி மாதமா?



 

அடுத்த மாதம் ஆடி மாதமா? அதற்கு இப்பொழுதே  தயாராகலாமா!




ஆடி மாதத்தின் சிறப்புகளை முன் கூட்டியே தெரிந்து கொண்டோம் என்றால் அதற்கேற்ப விரத முறைகளை முன்னேற்பாடாக செய்து கொள்வது நிறைய நன்மைகள் தரும்.

நம் கண்ணெதிரே தெய்வீக பலன் கிடைக்க பல வழிகள் இருந்தாலும் அதை காணாது மனம் தளர்வதும் துன்பத்தில் துவண்டு விழுவதும் இயல்பு . தெய்வீக வழிபாடு செய்து வழிபட்டால் நிச்சயம் துன்பத்தில் இருந்து விடுபடலாம்.

 அப்படிப்பட்ட தெய்வ வழிபாடுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆடி மாதத்தில் வரக்கூடிய அம்மன் வழிபாடு. 

ஆடி மாதத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன? 




அம்மனை நினைத்து விரதங்கள் இருந்து அவளுடைய மகிமைகளை படிப்பது, சுலோகங்கள் படிப்பது,  நிறைய நேரங்களை தெய்வத்திற்காக செலவிடுவது என ஆடி மாதத்தில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க . 

நினைத்த காரியங்கள் அனைத்தும் அடுத்து வரும் சுபா முகூர்த்த ஆவணி மாதத்தில் நிச்சயம் நடைபெறும் என்பதிலும் உறுதிகொள்க .

ஆடி மாதத்திற்குரிய சிறப்புகள் என்ன? 




ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு சிறப்புக்குறிய மாதம் ஆகும். அம்மனுக்கு பிடித்தமான வேப்பிலையை வீடு முழுக்க கமழ  செய்வது ஆடி மாதத்திற்குரிய சிறப்பாகும் . அம்மனுடைய அருள் பூரணமாக நிறைந்து வீட்டினில் சுபிட்சம் நிலவ நாம் எடுத்துக் கொள்ளக்கூடிய முதல் பதிவாக தங்களுக்கு எழுதுகிறேன்.

நம்முடைய வீட்டில் அம்மனை வருக வருக என  வரவேற்று நம் இல்லத்தில் தெய்வீக மணம் மணப்பதற்கான தேடல்தான் தெய்வீக மணம் கொண்ட வேப்பிலை ஆகும்.

வேப்பிலை மரம் உங்கள் வீட்டின் அருகில் இருக்கின்றதா ?




வேப்பிலை மரம் உங்கள் வீட்டின் அருகில் இருக்கின்றதா!  என்பதை தெரிந்து கொள்ளுங்கள் அல்லது வேப்பிலை மரக்கன்றுகள் நீங்கள் போகும் வழியில் கிராமத்து பக்கங்களில் நிறைய சாலை இரு புறங்களிலும் வளர்ந்து இருக்கும்.


 சாலையின் ஓரங்களில் வளர்ந்து  இருக்கும் வேப்ப மரத்தின் கன்றுகளை வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வரவும் . வீட்டில் ஒரு தொட்டியில் மணல் இட்டு வேப்பங்கன்றை நட்டு வைக்கவும்.  முதலில் நாம் செய்யக்கூடிய வேப்பங்கன்று நடுதல் என்னும் இந்த செயல் நமது வாழ்வினில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் .

 நம்முடைய அகமும் புறமும் தூய்மையாகும். எதிர்மறை எண்ணங்கள் நம்மை விட்டு விலகும். எப்போதும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிலவுவதற்கான தொடக்கமாக ஆடி மாதம் அனைவருக்கும் கண்டிப்பாக அமையும்.


 அம்மனுக்கு பிடித்தமான வேப்பிலை




 வேப்பிலையின் வாசம் இருந்தால் போதும் அம்மனவள் ஆனந்தமாய் வந்து நம் வீட்டில் குடி புகுவாள் . இந்த ஆடி மாதம் முழுவதும் நம்மால் முடிந்த அளவு வேப்பிலை தோரணங்கள் வாசலில் கட்டுங்கள்.  பூஜை அறையில் வேப்பிலை வழிபாடு , அம்மனுக்கு வேப்பிலை மாலை என வேப்பிலையில் மணம்( மனம்) காணுங்கள் . 

 வேப்பிலை தோரணங்கள் கட்டுவதால் என்ன பயன் கிடைக்கும்?





ஆங்கில மருத்துவம் காணாத அன்று மக்கள் அறிந்த பெரும் மருத்துவமே வேப்பிலையாகும். அம்மனின் தெய்வீக அம்சமாக நோய் கண்ட மருந்தாக திகழ்கின்ற அற்புத மூலிகைதான் வேப்பிலை.

வேப்பிலை பல நோய்களை தீர்க்கும்.  மனவேதனையை மாற்றும் . மங்கல மணம் வீசும் . பசுமையான வாழ்க்கையைத் தரும்.

வேப்பிலை மரம் வீட்டில் இருந்தால் அந்த வீடு சுபிட்சம் பெறும்.  வெள்ளிதோறும் சுமங்கலி பெண்கள் வேப்பிலை மரத்தை மஞ்சள் குங்குமம் இட்டு அம்மனாக வழிபடும் அற்புதமான தமிழ் கலாச்சாரம் இன்றும் கிராமத்து புறங்களில் பார்த்து மகிழலாம் .

மரம் அமைக்க வசதி இல்லாது இருந்தாலும் ஒரு தொட்டியில் வேப்பிலை ஒன்றினை  வைத்து வழிபட,  நம்முடைய வாழ்க்கையும் படிப்படியாக வளம் பெற்று வாழ்வினில் சிறப்பு பெறுவதை பார்க்கலாம்

 அம்மனுக்கு உகந்த வேப்பிலையின் புகழை இந்த ஆடி மாதத்தில் நாம் படிப்பதே நாம் செய்த பாக்கியம் ஆகும் .

நன்றி பாலாக்க்ஷிதா 🙏🌷

Copy rights of balakshitha 









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக