வியாழன், 9 ஆகஸ்ட், 2018

அமாவாசை நிலவோ!


   திருக்கடையூர் அபிராமி*


தேரினிலே  பவனி வர-  அபிராமி பட்டரோ -   

ஆனந்தகூத்தாட -  தமக்கும் இதில்      பங்குண்டோ!

நிலவாக காட்சி தரும்  அணிகலனோ ஐயமுற..

 'ஒளிஇன்றி உலகேது* 'அம்பிகையின் புன்சிரிப்பால் ..

 வான்மதியும் அகம் மகிழ-    

"அணிகலனும் நிலவான காரணத்தை அறிவாயோ!


முழுகதையும் கவிதை வடிப்பதற்கு வழியுண்டோ? "
   
மேளமோ தாளமிட-கேட்பீரே

 நாதஸ்வரத்தின் இசைதனையே!
அம்பிகையின் மேல் கொண்ட
 அளவு கடந்த பக்தியினால்..

பட்டரின் பிதற்றல் கேட்ட
 சோழ மன்னன் சரபோஜியோ 

"தேய்பிறை திதி அன்று மதி காணா   பட்டர் தலை கொய்க"  

என புணர- செவி கேட்ட
பட்டரோ

 மனம் கலங்கி உரி மேலே
  நெஞ்சுருக கவி பாட

 இது என்ன விந்தையடி
என் தோழி!

காத்தருளும் அம்பிகையின் அணிகலனோ நிலவாக*
 வானத்திலே.  

இன்றும் அபிராமி பட்டரின் நினைவாக திருக்கடவூரிலே தை அமாவாசை பெரு விழாவாக கொண்டாடப்படுகின்றது.

நிலவும் -அவளும் ஒன்றே*
அவளின் முழுமையான
 சக்தி  பௌர்ணமி *அன்று 
நிலவிலே பூரணமாக
 நிறைந்து இருக்கும் என்பதற்கு 

அபிராமி பட்டரின் வரலாறு நமக்கு உணர்த்தும் அன்றோ..


இந்த பூமி -கடல் 
காற்று -வான் -அனைத்தும் 
தமக்குள் அடக்கமாக 
தாமே ஆதிபராசக்தியாக*
 அன்னையின் அம்சமாக*
 தாய்மையின் சிகரமாக *
இந்த பிரபஞ்சத்தையே 
ஆளுகின்ற தாய் 
என்பது அம்பாளின் 
பெருமையன்றோ..

நினைத்தது ஜெயமாக 
பவுர்ணமி *அன்று 
அம்பாளை நினைத்து
 விரதமிருந்து விளக்கேற்றி
முடிந்தால் கோவிலுக்கு
சென்று அம்மனை வழிபட்டு 
நிலவு தரிசனம்* 
கண்ட பிறகு அன்னம் உண்டு விரதத்தை முடிக்கலாம்.


அம்பிகையின் மீது முழுமையாக நம்பிக்கை வைத்தால் ஒரு பொழுதும் நம்மை அவள் கை விட மாட்டாள்  என்பதை மனதில் கொண்டு  அவள் பாதம் பணிந்து அனைத்து அருளும் பெறுவோமே*


Copyrighs at balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக