படிப்புமிலா - அறிவுமிலா
மாடு மேய்க்கும் வெகுளி அவன் அவமான சொல் கேட்டு
மனமெலாம் - புண்ணாக
கோவில்தனிலே
அமர்ந்த அவன்
வாடிக்கையான புலம்பல் கேட்டு
காளிதேவியோ* மனமிறங்க
தேவியின் பார்வை பட்டு
கவிஞரான அதிசயமோ!
சோழ மன்னன் அரசவையில்
புலவர் ஆனதும் ஓர் ஆச்சரியமோ!
அதை நினைச்சு நினைச்சு
காளிதேவி கேட்ட புலம்பிண்டே இருக்கான்..
அதுவே ஒரு முயற்சி தானே !
'மாடு மேய்ச்சோம், நேரம் ஓடுது சாப்பிட்டோம் -படுத்தோம் 'என
வாழ்ந்துட்டு போயிருந்தால்
மகாகவி என்ற பட்டம் பெற்ற காளிதாஸ் யார்?
என்று நமக்கு தெரியாம போயிருக்கும். அவனோட முயற்சியால்தான்
என்ன முயற்சின்னு கேட்காதீங்க!
புலம்பலும் ஒரு முயற்சி தானே*
அமைதியாக இருத்தலை விட புலம்பலுக்கு ஒரு தீர்வு
நிச்சயமாக உண்டு .
அதற்காக சத்தமா வெளியில
புலம்பிண்டு இருக்க வேண்டாம் மனசுல நிறைய கேள்வி கேளுங்க.. கேள்வி? என்பதும்
ஒரு புலம்பல் தானே
படிப்புக்கு அருள் வாரி வழங்கும் சரஸ்வதி தேவியை மனசில நெனச்சிண்டு கேள்வி நிறைய அவகிட்ட கேளுங்க..
அதற்கு நிச்சயமாக நல்ல தீர்வு கிடைக்கும்
ஆறு அறிவோடும் *
பேரு பதினாறும் *
கனிந்த அன்போடும் *
கல்வி சுடரோடும்*
ஒழுக்க நெறியோடு*
தெய்வ அருள் பெற்று*
இந்த பூமிதனில்
ஒப்பில்லா மாணிக்கமாய் சுடர் வீசி* பல்லாண்டு பல்லாண்டு வாழியவே.
Copy rights at Balakshitha

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .
ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.
Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡
---
❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்