🔱 கந்த சஷ்டி விரதத்தின் ஆன்மீக சிறப்புகள்
Kandha Sashti Viratham – Spiritual Significance and Powerful Rituals
🔱 கந்த சஷ்டி விரதத்தின் ஆன்மீக சிறப்புகள் | MuruganDevotion
🕉️ Kandha Sashti Viratham – The Sacred Six Days of Devotion
🔱 கந்த சஷ்டி விரதத்தின் ஆன்மீக சிறப்பான நாட்கள்
🌺 விரதத்தின் தொடக்கம்
ஐப்பசி மாதம் அமாவாசைக்கு அடுத்த ஆறு நாட்கள் முருகப்பெருமானை நினைத்து கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படும் மிகப் புனிதமான நாட்களாகும்.
அந்த நாட்களில்தான் முருகன் அசுரன் சூரபத்மனுடன் போரிட்டு சம்ஹாரம் செய்தார். அதனால்தான் இந்த ஆறு நாட்கள் “கந்தர் சஷ்டி” எனும் ஆன்மீக பெருநாள் ஆகும்.
🕉️ முருக நாமத்தின் மகிமை
இந்த ஆறு நாட்களிலும் “முருகா” என்ற நாமத்தை தொடர்ந்து சொல்லி வந்தால்,
முருகப் பெருமான் நம்மை முழுமையாக ஏற்றுக்கொள்வார்.
அவரது அருள் நம் மனதையும் வாழ்க்கையையும் ஒளியால் நிரப்பும்.
.
🌿 விரதம் ஏன், எப்படி?
விரதம் இருப்பது நம் மனதையும் உடலையும் சுத்தப்படுத்தும் புனித வழிபாடாகும்.
ஆனால், சிலருக்கு வேலைப்பளு, குடும்பப் பொறுப்புகள் அல்லது உடல் நலம் காரணமாக முழுமையான விரதம் கடைப்பிடிப்பது கடினமாக இருக்கலாம்.
அந்த நேரங்களில் மனமார்ந்த நம்பிக்கை, நெஞ்சார்ந்த பிரார்த்தனை, எளிமையான வழிபாடு —
இவை மூன்றும் இருந்தால் போதும். முருகன் அதை உண்மையான விரதமாக ஏற்றுக்கொள்வார்.
🪔 எளிமையான விரத அனுஷ்டானம்
இந்த ஆறு நாட்களும் விரதம் இருக்கலாம், அல்லது ஆறாவது நாளான சஷ்டி திதியில் மட்டும் விரதம் அனுஷ்டிக்கலாம்.
மன அமைதி, பக்தி, நம்பிக்கை — இவையே விரதத்தின் அடிப்படை.
🌸 சிறப்பு – 1
🧘♀️ புனித ஸ்நானத்தின் மகிமை
தினமும் காலையில் கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும் என்று புனித சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அது நம்முடைய பாவங்களையும் தோஷங்களையும் நீக்கும் அற்புதமான ஸ்நானம்.
ஸ்நானத்திற்கு முன் ஒரு குவளை நீரை எடுத்து, மனதில் அதை கங்கை நீராகக் கருதி நம்முடைய மோதிர விரலால் “ஓம்” என்ற எழுத்தை எழுதிப் பின் தலையில் ஊற்றுங்கள்.
கங்கை நீரில் ஸ்நானம் செய்ததற்குச் சமமான சக்தியும் அருளும் நமக்குக் கிடைக்கும்.
🌿 உணவுப் பழக்கம் ] FASTING
விரதக் காலத்தில் எளிமையான மற்றும் சுத்தமான உணவைப் பின்பற்றுவது சிறந்தது. இரவில் பழம், பால் அல்லது இலகுவான டிபன் எடுத்துக்கொள்ளலாம். இது உடல் ஆரோக்கியத்தையும் மன அமைதியையும் தரும்.
.
🪔 சிறப்பு – 2
காலையும் மாலையும் விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் படிப்பது மிகுந்த புண்ணியம் தரும்.
தீபத்தின் ஒளியில் நம்முடைய வேண்டுதல்களை மனமாரப் பிரார்த்திக்கும்போது, அந்த ஒளி நம்முடைய வாழ்விலும் நம்பிக்கையையும் ஆசீர்வாதத்தையும் சேர்க்கும்.
வடக்கு நோக்கி அமர்ந்து மன அமைதியுடன் கவசம் படிப்பதே முழுமையான விரத அனுஷ்டானம்.
🌸சிறப்பு – 3
திரவியங்கள், ஊதுபத்தி நறுமணம் மற்றும் முருகரின் தெய்வீக பாடல்கள் — இவை மூன்றும் சேர்ந்து ஆன்மீக ஆற்றலை வளர்க்கும்.
இவை நம்மைச் சுற்றியுள்ள சூழலையும் புனிதமாக்கி, விரதத்தின் சிறப்பை அதிகரிக்கும்
.
🕉️ சிறப்பு – 4
விரத முடிவில் முடிந்தவர்கள் கோவிலுக்குச் சென்று முருகப்பெருமானை தரிசித்து, அமைதியான பத்து நிமிடங்கள் அவருடைய நாமங்களை ஜபிக்கலாம்.
அந்த நேரம் நம்மை முழுமையாக இறைவனோடு இணைக்கும் ஆன்மீக அனுபவமாக மாறும்.
.
🌺 கந்த சஷ்டி திருவிழாவின் மகிமை
முருகப்பெருமானை நினைத்து கொண்டாடப்படும் கந்த சஷ்டி என்பது ஒரு சாதாரண விழா அல்ல —
அது மனதை தூய்மைப்படுத்தும் ஆன்மீக பெருவிழா,
சிந்தையை இறைபக்கம் இழுக்கும் தெய்வீக கலைவிழா.
இந்த அற்புதமான நாட்களில் விரதமிருந்து முருகனின் அருளைப் பெற்று
வாழ்க்கையில் சிறப்பையும் சாந்தியையும் அடையலாம்.
நன்றி 🙏 பாலாக்க்ஷிதா🌷
.jpeg)






.png)











.png)
.jpeg)
.jpeg)
.jpeg)









.jpeg)





