சனி, 25 அக்டோபர், 2025

கந்த சஷ்டி விரதத்தின் ஆன்மீக சிறப்புகள் | Kandha Sashti Viratham



🔱 கந்த சஷ்டி விரதத்தின் ஆன்மீக சிறப்புகள்

Kandha Sashti Viratham – Spiritual Significance and Powerful Rituals






🔱 கந்த சஷ்டி விரதத்தின் ஆன்மீக சிறப்புகள் | MuruganDevotion


🕉️ Kandha Sashti Viratham – The Sacred Six Days of Devotion

🔱 கந்த சஷ்டி விரதத்தின் ஆன்மீக சிறப்பான நாட்கள்


🌺 விரதத்தின் தொடக்கம்

ஐப்பசி மாதம் அமாவாசைக்கு அடுத்த ஆறு நாட்கள் முருகப்பெருமானை நினைத்து கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படும் மிகப் புனிதமான நாட்களாகும்.





அந்த நாட்களில்தான் முருகன் அசுரன் சூரபத்மனுடன் போரிட்டு சம்ஹாரம் செய்தார். அதனால்தான் இந்த ஆறு நாட்கள் “கந்தர் சஷ்டி” எனும் ஆன்மீக பெருநாள் ஆகும்.

🕉️ முருக நாமத்தின் மகிமை

இந்த ஆறு நாட்களிலும் “முருகா” என்ற நாமத்தை தொடர்ந்து சொல்லி வந்தால்,
முருகப் பெருமான் நம்மை முழுமையாக ஏற்றுக்கொள்வார்.
அவரது அருள் நம் மனதையும் வாழ்க்கையையும் ஒளியால் நிரப்பும்.


.


🌿 விரதம் ஏன், எப்படி?

விரதம் இருப்பது நம் மனதையும் உடலையும் சுத்தப்படுத்தும் புனித வழிபாடாகும்.
ஆனால், சிலருக்கு வேலைப்பளு, குடும்பப் பொறுப்புகள் அல்லது உடல் நலம் காரணமாக முழுமையான விரதம் கடைப்பிடிப்பது கடினமாக இருக்கலாம்.

அந்த நேரங்களில் மனமார்ந்த நம்பிக்கை, நெஞ்சார்ந்த பிரார்த்தனை, எளிமையான வழிபாடு —
இவை மூன்றும் இருந்தால் போதும். முருகன் அதை உண்மையான விரதமாக ஏற்றுக்கொள்வார்.


🪔 எளிமையான விரத அனுஷ்டானம்

இந்த ஆறு நாட்களும் விரதம் இருக்கலாம், அல்லது ஆறாவது நாளான சஷ்டி திதியில் மட்டும் விரதம் அனுஷ்டிக்கலாம்.
மன அமைதி, பக்தி, நம்பிக்கை — இவையே விரதத்தின் அடிப்படை.






🌸 சிறப்பு – 1

🧘‍♀️ புனித ஸ்நானத்தின் மகிமை

தினமும் காலையில் கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும் என்று புனித சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அது நம்முடைய பாவங்களையும் தோஷங்களையும் நீக்கும் அற்புதமான ஸ்நானம்.


ஸ்நானத்திற்கு முன் ஒரு குவளை நீரை எடுத்து, மனதில் அதை கங்கை நீராகக் கருதி   நம்முடைய மோதிர விரலால் “ஓம்” என்ற எழுத்தை எழுதிப் பின் தலையில் ஊற்றுங்கள்.

இந்த முறையில் ஸ்நானம் செய்வதால்,
கங்கை நீரில் ஸ்நானம் செய்ததற்குச் சமமான சக்தியும் அருளும் நமக்குக் கிடைக்கும்.

🌿 உணவுப் பழக்கம்  ] FASTING

விரதக் காலத்தில் எளிமையான மற்றும் சுத்தமான உணவைப் பின்பற்றுவது சிறந்தது. இரவில் பழம், பால் அல்லது இலகுவான டிபன் எடுத்துக்கொள்ளலாம். இது உடல் ஆரோக்கியத்தையும் மன அமைதியையும் தரும்.


.


🪔 சிறப்பு – 2

காலையும் மாலையும் விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் படிப்பது மிகுந்த புண்ணியம் தரும்.
தீபத்தின் ஒளியில் நம்முடைய வேண்டுதல்களை மனமாரப் பிரார்த்திக்கும்போது, அந்த ஒளி நம்முடைய வாழ்விலும் நம்பிக்கையையும் ஆசீர்வாதத்தையும் சேர்க்கும்.
வடக்கு நோக்கி அமர்ந்து மன அமைதியுடன் கவசம் படிப்பதே முழுமையான விரத அனுஷ்டானம்.







🌸சிறப்பு – 3 


திரவியங்கள், ஊதுபத்தி நறுமணம் மற்றும் முருகரின் தெய்வீக பாடல்கள் — இவை மூன்றும் சேர்ந்து ஆன்மீக ஆற்றலை வளர்க்கும்.

இவை நம்மைச் சுற்றியுள்ள சூழலையும் புனிதமாக்கி, விரதத்தின் சிறப்பை அதிகரிக்கும்




.


🕉️ சிறப்பு – 4


விரத முடிவில் முடிந்தவர்கள் கோவிலுக்குச் சென்று முருகப்பெருமானை தரிசித்து, அமைதியான பத்து நிமிடங்கள் அவருடைய நாமங்களை ஜபிக்கலாம்.

அந்த நேரம் நம்மை முழுமையாக இறைவனோடு இணைக்கும் ஆன்மீக அனுபவமாக மாறும்.


.


🌺 கந்த சஷ்டி திருவிழாவின் மகிமை

முருகப்பெருமானை நினைத்து கொண்டாடப்படும் கந்த சஷ்டி என்பது ஒரு சாதாரண விழா அல்ல —
அது மனதை தூய்மைப்படுத்தும் ஆன்மீக பெருவிழா,
சிந்தையை இறைபக்கம் இழுக்கும் தெய்வீக கலைவிழா.

இந்த அற்புதமான நாட்களில் விரதமிருந்து முருகனின் அருளைப் பெற்று
வாழ்க்கையில் சிறப்பையும் சாந்தியையும் அடையலாம்.





Achieve Your Dream – வாழ்க்கையில் லட்சியம் இருந்தால் சாதனை நிச்சயம்!


வாழ்க்கையில் லட்சியம் இருந்தால் சாதனை நிச்சயம் [Achieve Your Dream



வாழ்க்கை ஒரு பயணம், ஆனால் அந்தப் பயணத்தை அழகாக மாற்றுவது நம் லட்சியம்!

💪 “சாதிக்க வேண்டும்” என்ற எண்ணத்தோடு ஒவ்வொரு நாளும் எழுந்தால்,
நமக்கு எதிரான சூழ்நிலைகளும் கூட ஒரு நாள் நம் சாதனையின் சாட்சியாக மாறும்.

✨ சின்ன சின்ன முயற்சிகளும் பெரும் வெற்றிகளின் விதையாகும்.
முக்கியம் — நம்பிக்கையை விடாதீர்கள்!
இன்று ஒரு படி எடுத்து வையுங்கள்… நாளை அதுவே உங்களை உச்சிக்குக் கொண்டு செல்லும்.

Believe, Begin, and Become – நம்புங்கள், தொடங்குங்கள், சாதியுங்கள்! 🌈

ஒவ்வொரு நாளும் சிறு முயற்சி,
ஒவ்வொரு தோல்வியும் ஒரு பாடம்,
ஒவ்வொரு நம்பிக்கையும் ஒரு வெற்றியின் ஒளி.

உங்களின் லட்சியம் உங்கள் வாழ்வின் விளக்காகட்டும் 🔥


BALAKSHITHA Online Tamil Classes

Empowering Tamil Learning for Kids in India & Abroad

Balakshitha International Academy is a global online learning platform dedicated to nurturing Tamil language and culture among children aged 5 to 15 years, both in India and abroad.

🎓 Key Features of Balakshitha Online Tamil Classes:

✅ Comprehensive Tamil Grammar lessons
✅ Inspirational teachings from Thirukkural
✅ Learning about Tamil Culture & Heritage
✅ Exploring Ancient Epics and Stories
✅ Optional courses in Sanskrit & Sloka Chanting (based on parents’ preference)

We focus on developing discipline, values, and cultural identity in every child while nurturing their love for learning Tamil with joy and pride.


🌍 About Balakshitha International Academy

A trusted online education platform offering quality training for global Tamil learners.
Located in Puducherry, India, our mission is to empower young minds to connect deeply with Tamil language, culture, and tradition.

📞 WhatsApp: +91 81241 52666
📧 Email: balakshidha@gmail.com

Balakshitha International Academy – Where Language Meets Culture!







வெள்ளி, 24 அக்டோபர், 2025

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே

 பணம் பந்தியிலே குணம் குப்பையிலே கருத்துமிக்க திரைப்பட பாடல்






பணம் பந்தியிலே - குணம் குப்பையிலே என்பது இன்றைய  சமுதாயத்தில் நடக்கிறது சாதாரணமான விஷயமா போச்சு.

பணம் இல்லை என்றால் வாழ்க்கை இல்லையா?

 பணம் இல்லை என்றால் வாழ்க்கை இல்லையா யோசிக்க வேண்டிய கேள்விதான்!





வாழ்க்கையில் நிம்மதியே இல்லை ன்னு நாம் அடிக்கடி சொல்லிக்கிட்டு இருக்கிறோம் . ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம்!





' பணம் இல்லைன்னா நிம்மதி இல்லை, சொந்த பந்தங்களுக்குள்ள பிரச்சனைனா நிம்மதி இல்லை , உடல்நிலை சரியில்லைன்னா நிம்மதி இல்லை,  நம்மை யாரும் மதிக்க மாட்டறாங்களே  என்று நினைக்கும் போதும் நிம்மதி இல்லை '

இந்த புலம்பலை முதலில் நிறுத்தி விடுவோமா!





இவ்வாறு  புலம்புபவர்கள் எத்தனை பேர்? இந்த புலம்பலை நிறுத்தினாலே ஆட்டோமெட்டிக்கா எல்லாம் சரியாகிவிடும்.


 இதற்கெல்லாம் ஒரு தீர்வு காண்போமா!

 'பணம் பந்தியிலே குணம் குப்பையிலே -  பணம் என்னடா பணம் பணம் குணம் தானடா நிரந்தரம்'

 என்று எப்படி வேண்டுமானாலும் கவிஞர்கள் பாட்டு எழுதலாம் . எந்தப் பாட்டை நாம் பாடலாம் என்று நாம் தான் செலக்ட் பண்ணனும்.







நமக்கேற்ற பாடல்தான் எது? 

நமக்கேற்ற பாடல்தான் எது?  புலம்பலை நிறுத்துவதற்கான வழிதான் என்ன என்று கேட்கும் அனைவருக்குள்ளும் ஒரு திறமை எனும் ஒளி இருக்கின்றது  ... அது என்ன என்பதை கண்டுபிடிப்போமா? உங்கள் ஒருவரால் மட்டும்தான் கண்டுபிடிக்க முடியும் என்பதில் நீங்கள்தான் தெளிவு கொள்ள வேண்டும்.

பணம் போதவில்லை என்று கவலையா?


 கீழ்கண்ட திரைப்பட பாடலை முதலில் காண்போம்👇

பணம் பந்தியிலே திரைப்பட பாடல்

 பணம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம் என்பதை உணர்த்துகின்றது இந்த திரைப்பட பாடல் . பணம் பத்தவே மாட்டேங்குது மாசக் கடைசியில் இவ்வாறு புலம்புகிறீர்களா ! அந்த புலம்பலை முதலில் தூக்கி எறியுங்கள். .நேர்மையான முறையில் எப்படி எல்லாம் சம்பாதிக்க முடியும் என்று  புலம்புவதற்கு பதிலாக யோசித்துப் பார்ப்போம்.

வயதாகிய பிறகு என்னால் சம்பாதிக்க முடியுமா? (Motivation After 40)




 


எனக்கு வயசு ஆயிடுச்சுப்பா!  நான் என்ன செய்ய முடியும்னு மட்டும் யாரும் சொல்லக்கூடாது.  வயது ஒரு தடையே இல்லைங்க.  60,  70 வயதுக்கு மேலே சம்பாதித்து முன்னுக்கு வந்து சாதனை கண்டவர்கள் நிறைய பேர் உண்டு.  நமக்குள்ள என்ன திறமை இருக்கு  என்பது நமக்குத் தெரியும் . அந்த திறமையை வைத்து வழி தேடுங்கள்.


வாழ்க்கை வாழ்வதற்கே!   (Self Confidence)






வயதைப் பற்றி யோசிக்காமல் என்ன செய்யலாம் என்று தன்னம்பிக்கையோடு யோசிக்க ஆரம்பியுங்கள் . தெய்வ நம்பிக்கையையும் கொஞ்சம் எடுத்துக் கொண்டால் சாதித்தவர்கள் பட்டியலில் நாமும்  நிச்சயம் இடம் பெறலாம் .

இப்பொழுது நாம் பாடப்போகும் பாடல் செலக்ட் செய்யலாமா?

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்ற என்ற பாடலை முதலில் பாடுவோம்.

 பணம் சம்பாதித்து முடித்ததும் பாடலை சற்றே மாற்றி விடலாம்.  பணம் என்னடா பணம் பணம் -  குணம் தானடா நிரந்தரம்


என்ற பாடலை பாடியவாறு அனைத்து துயரங்களையும் மறந்து சொந்த பந்தங்கள் அனைவரையும் கைகோர்த்து இணைத்து மகிழ்வோம்.

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா🌷


Copy rights @Balakshitha 


புதன், 15 அக்டோபர், 2025

மகிழ்ச்சியுடனும் பாதுகாப்புடனும் தீபாவளியை கொண்டாடுவோம் |Lets Celebrae Diwali with Joy and Safety

 

தீபாவளி அன்று பாதுகாப்பாகப் பட்டாசு வெடிப்போம் (Diwali Safety Tips)






தீப ஒளி  எனனும் பெயரே தீபாவளி (Diwali) என்று அழைக்கப்படுகிறது.  இந்த நாள் நம் மனதை தூய்மைப்படுத்தி உற்சாகம் , புத்துணர்ச்சி மற்றும் இனிய தொடக்கத்தை அளிக்கிறது.  இனிப்புகள், பட்டாசுகள் மற்றும் புன்னகைகள் நிறைந்த ஒரு மகிழ்ச்சிகரமான தீபாவளியை கொண்டாடுவோம்.



மகிழ்ச்சியுடனும் பாதுகாப்புடனும் தீபாவளியை கொண்டாடுவோம் |Lets Celebrate Diwali with Joy and Safety





குழந்தைகள் குதுகலிக்கும் இந்த திருநாளில் பட்டாசு (Crackers) வெடிக்கும் பொழுது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான பாதுகாப்பு குறிப்புகள் இதோ;

குடும்பத்தினருக்கான முக்கியமான பாதுகாப்பு வழிமுறைகள்  |Top &Safety Tips for Kids & Families


1. பாலிஸ்டர் ஆடைகள் தவிர்க்கவும்.

  பட்டாசு வெடிக்கும் பொழுது காட்டன் ஆடைகள் அணியுங்கள். இது பாதுகாப்பானது | Avoid Pollster Clothes 


2. பெற்றோர் கண்காணிப்பு அவசியம் | Supervision is Safely 

 அனைத்து வேலைகளையும் ஒதுக்கி வைத்து குழந்தைகளோடு சேர்ந்து பட்டாசு வெடிப்பது பாதுகாப்பானதும் மகிழ்ச்சியானதும் கூட என்பதை பெற்றோர்கள் உணருங்கள்.


3. காலில் செருப்பு அணியுங்கள் | Wear Footwear

வெடிக்கும் தீப்பொறிகள் காலில் விழாமல் இருக்க இது அவசியம் .


4. தண்ணீர் மணல் பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள் | Keep Water &Sand Nearby

ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் மண் தயார் நிலையில் இருக்கட்டும்.  ஏதாவது தீப்பற்றினால் உடனே அணைக்க உதவும். 


5. வெடித்த பட்டாசுகளை பாதுகாப்பாக அகற்றுங்கள் | Dispose Used Crackers Safely

 கம்பி ,மத்தாப்பு, சங்கு சக்கரம் போன்றவற்றை வெடித்து முடித்ததும் தண்ணீர் போட்டு அணைத்து விடுங்கள்.


6. நேருக்கு நேர் வெடிக்காதீர்கள் | Don't Face Crackers Directly 

 பட்டாசு வெடிக்கும் போது பக்கவாட்டில் நின்று வெடிக்கவும். இது முகம் மற்றும் கண்களுக்கு பாதுகாப்பானது.








7.  மின் ஒயர்கள் மற்றும் மருத்துவமனை அருகில் வெடிக்காதீர்கள் |Avoid Crowded & Electrical Areas 


தீப்பற்றும் ஆபத்துகள் தவிர்க்கப்படுகின்றன.


8. மற்றவர்களின் மகிழ்ச்சியையும் மதியுங்கள் | Respect Others 


அருகில் உள்ள முதியவர்கள், குழந்தைகள், விலங்குகள் ஆகியோருக்கு இடையூறு ஏற்படாதவாறு பொறுப்புடன் வெடிக்கவும் .


 9. வெடிக்கும் முன் அறிவுரை கொடுங்கள்| Teach Kids Before Burn

பட்டாசு வெடிக்கும் முறைகளை குழந்தைகளுக்கு முன்பே அறிவுரை அளிக்கவும்.  அவர்கள் மகிழ்ச்சியுடன் ஆனால் பாதுகாப்பாக தீபாவளி  கொண்டாடுவதற்கு பெற்றோர்களாகிய நமது கடமையை நிறைவாக செய்வோம்.


 பாதுகாப்பான தீப ஒளி திருநாளை கொண்டாடுவோம் |Let's Make This Diwali Safety, Bright & Beautiful 



நம் வீடுகளும் நம் மனங்களும் ஒலி பெறட்டும்.  மற்றவர்களின் மகிழ்ச்சியையும் மதித்து பாதுகாப்புடன் பட்டாசு வெடித்து இந்த தீபாவளியை இனிதாகவும் இனிமையாகவும் மாற்றுவோம்.


பார்க்கலாம்... நலபாகு லட்டு செய்ததற்கான தூர்தர்ஷன் லிங்க் இங்கே






 நன்றி 🙏 பாலாக்க்ஷிதா🌷



Copy rights @Balakshitha 




















செவ்வாய், 14 அக்டோபர், 2025

தீபாவளி ஸ்பெஷல் புதுவை தூர்தர்ஷனில் நான் செய்த லட்டு

 


தீபாவளி ஸ்பெஷல் - நலபாகு லட்டு (Diwali recipe)







 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ந்து கொண்டாடும்  பண்டிகை தீபாவளி. (happy Diwali)

 வண்ண வண்ண பட்டாசுகள், புத்தாடைகள், இனிப்பு காரங்கள் என வீடு முழுக்க உற்சாகம் நிறைந்திருக்கும் நேரம் இது.  அந்த உற்சாகத்தில் வீட்டிலேயே ஒரு இனிப்பு செய்வது ஒரு பழக்கம் மட்டுமல்ல ... ஒரு பாசமான நினைவுகளும் கூட.


நலபாகு  லட்டு - என்ன புதுமை! (Nalavagu Laddu)

  • பார்ப்பவர்களை கவரும் லட்டுவின் வண்ண வடிவம் ,
  •   சுவையும் தித்திக்கும் திகட்டாத இனிப்பு
  •  வீடு முழுக்க நெய் மணம் பரப்பும் நறுமணம் 
  • முந்திரி, பாதாம் , பிஸ்தா கலந்த ஆரோக்கிய சுவை
  • பச்சைப்பயிறு, கடலை மாவு, ரவை  ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட இந்த லட்டு இனிப்பு சுவையில் புதுமை உடலுக்கும் நன்மை தரக்கூடியது.




 

நலபாகு  லட்டு  செய்முறை  (Nalavagu Laddu Recipe )

லட்டு செய்ய தேவையான பொருட்கள் (ingredients)

  •  கடலை மாவு - ஒரு கப் 
  • சர்க்கரை - ஒரு கப்
  • பச்சை பயிறு - ஒரு டேபிள் ஸ்பூன்
  • ரவை -  ஒரு டீஸ்பூன்  ஸ்பூன் 
  • கான்பிளவர் மாவு  - ஒரு டீஸ்பூன்
  •  ஏலக்காய் பொடித்தது 
  • முந்திரி, பாதாம் , பிஸ்தா தலா ஒரு டேபிள்ஸ்பூன்  நறுக்கி வைத்தது
  •  நெய் ஒரு டேபிள் ஸ்பூன்


   செய்முறை ( Preparation)





  1. பச்சைப்பயிறு குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  1.  கடலைமாவை சலித்து அதில் தண்ணீர் கேசரி பவுடர் சிறிது சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைக்கவும்.
  1. வாணலியில் எண்ணெயில் காயவைத்து பூந்தி கரண்டி  மூலம் பூந்தி போல பொரித்துக் கொள்ளவும் .
  1. வானலில் ரவையை வறுத்து எடுத்து வைக்கவும்..
  1.  முந்திரிப் பருப்பை நெய்யில் வறுக்கவும.
  1.  சர்க்கரை பாகு தயாரிக்கும் முறை -   ஒரு கப் சர்க்கரை அரை கப் தண்ணீர் கேசரி பவுடர் சேர்த்து கொதிக்க விடவும்.. 
  1. அதில் பூந்தி ரவை வேக வைத்த பச்சைப்பயிறு சேர்த்து சுண்டியதும் நெய் சேர்க்கவும்.
  1.  ஆறியதும் வறுத்த முந்திரிப் பருப்பு பாதாம் பிஸ்தா சேர்த்து உருண்டை பிடிக்கவும். 

இதோ சுவையான நலபாகு லட்டு தயார்

 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுவைத்து மகிழலாம்.

புதுச்சேரி தூர்தர்ஷன் நிலையத்தின் சிறப்பு விருந்தினராக நான்... 




 புதுச்சேரி தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் தீபாவளி ஸ்பெஷலுக்காக என்னை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். மறக்க முடியாத அனுபவம் ஆக அந்த நிகழ்வு அமைந்திருந்தது.  மகிழ்ச்சியும் பெருமையும் தந்த தூர்தர்ஷன் நிலையத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள் .

பார்க்கலாம்... நலபாகு லட்டு செய்ததற்கான தூர்தர்ஷன் லிங்க் இங்கே





நன்றி 🙏 பாலாக்க்ஷிதா🌷


Copy rights at Balakshitha 

புதன், 8 அக்டோபர், 2025

தீபாவளி ஒளியின் திருநாள்

 

தீபாவளி ஒளி பறக்கும் ஆனந்த பண்டிகை (Diwali 2025)




 தீபாவளி என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஒளியின் பண்டிகையாகும். வீடுகள் முழுவதும் விளக்குகள் ஏற்றப்பட்டு இருளை அகற்றி ஒளியை வரவேற்கும் அற்புதமான  நாளாகும் . புதிய பட்டாடைகள் அணிந்து இனிப்பு காரங்கள் சுவைத்து வண்ண வண்ண பட்டாசுகள் வெடித்து மனம் நிறைந்த மகிழ்ச்சியில் மக்கள் ஒன்றினைகின்றனர் .

தீபாவளி சக்தி வாய்ந்த பண்டிகையா? (Festival diwali celebration)




ஆம் தீபாவளி சக்தி வாய்ந்த பண்டிகையே. இந்த நாளில் வீட்டை சுத்தம் செய்து அழகாக அலங்கரிப்பது,  குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக கூடி சிரிப்பும  பாசமும் பகிர்வது ஆகியவை தீபாவளியின் உண்மையான அழகை வெளிப்படுத்துகின்றன. இது புதிய தொடக்கத்திற்கான நாள்.  நம்முடைய வாழ்வில் நேர்மையும் நம்பிக்கையும் வளர்க்கும் சக்தி வாய்ந்த பண்டிகை.

தீபாவளி என்பது உள்ளத்திற்கும் ஒளி தரும் (Festival of Lights)





 தீபாவளி நமக்கு ஒளி (Lights) என்றால் வெளிச்சம் மட்டுமல்ல... உள்ளத்தின் வெளிச்சம் என்றும் உணர்த்துகிறது.  மகிழ்ச்சி ,அன்பு ,சமரசம் நம்பிக்கை இவை அனைத்தும் நம் மனங்களில் பரப்புவதே தீபாவளியின் மெய்ப்பொருள்.


மேலும் பதிவினை படித்து மன நிறைவுடன் தீபாவளியை கொண்டாடுக🙏🌷(Traditional Celebration)




  1. வீடுதோறும் தீபங்கள் ஏற்றி வைப்போம்
  2. வண்ணமயமான விளக்குகள் அழகான அலங்காரங்கள் என மகிழ்வினில் நிறைவு காண்போம்.
  3.  இருளை அகற்றி ஒளியை வரவேற்போம்.
  4. தீமையை வென்று வெற்றியை நாம் காண்போம்.
  5.  மனதில் ஒளியேற்றி ஆனந்தம் நாம் பெறுவோம்.
  6. குடும்பம் , நண்பர்கள் , பாசம் ஒற்றுமை அனைத்தும் நிறைந்த பண்டிகையாகக் கொண்டாடுவோம்.(IndianCulture)
  7. புதிய புத்தாடை அணிந்து சிரித்து குழந்தைகள்  குதூகளிக்க அதைக் கண்டு நாம் பூரிப்போம்.(Happiness)
  8.  பட்டாசுகள் மின்ன  வானம் சிரிக்க நேரத்தினை அழகாகச் செலவழிப்போம்.
  9.  இனிப்பு வாசம் வீச என்றென்றும்  இவ்வாசம் நிறையட்டும் என இறைவனை பிரார்த்திப்போம் .

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் (HappyDiwali)


புதுவை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக நான் செய்த நலபாகு லட்டு லிங்க் 👇




நன்றி 🙏பாலாக்க்ஷிதா🌷

Copy rights @ Balakshitha 

புதன், 24 செப்டம்பர், 2025

பாலாக்க்ஷிதா இன்டர்நேஷனல் அகாடமி நவராத்திரி விழா

நவராத்திரி விழா சிறப்பு – குழந்தைகளின் அறிவுத்திறனை மேம்படுத்தும் பாலாக்க்ஷிதா இன்டர்நேஷனல் அகாடமி முயற்சி

Navratri Celebration Special – A Unique Initiative by Balakshitha International Academy




Balakshitha International Academy உலகளாவிய அளவில் தமிழ், ஆன்மீகம், கலாச்சாரம் மற்றும் கல்வியை குழந்தைகளுக்கு வழங்கும் முன்னணி ஆன்லைன் கல்வி நிறுவனம்.
This academy is dedicated to enhancing children’s knowledge, cultural awareness, and spiritual learning through innovative programs and celebrations.

🌸 நவராத்திரி விழாவின் சிறப்பு | Significance of Navratri Festival

நவராத்திரி என்பது வெறும் பண்டிகை மட்டுமல்ல. இது அறிவின் வளர்ச்சி, ஆன்மீக விழிப்புணர்ச்சி, பண்பாட்டு பரம்பரை பரிமாற்றம் ஆகியவற்றை குழந்தைகள் அறிந்து கொள்ளும் அற்புதமான வாய்ப்பு.
Navratri is not just a festival – it is a chance for children to grow in wisdom, learn spirituality, and connect with their rich cultural heritage.

🎥 மாணவர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்பு | Learning Opportunity for Students

  • நமது சாம்பியா நாட்டைச் சேர்ந்த மாணவி ஃபர்ஹத் நவராத்திரி விழா பற்றிய வீடியோவை பதிவு செய்துள்ளார்.
  • Based on this video, questions will be asked in class.
  • Correct answers will earn students a Certificate + 50 Points.

Watch the Navratri Video:

📲 WhatsApp குழுவில் இணையுங்கள் | Join our WhatsApp Group

நவராத்திரி விழா பற்றிய சிறப்பு கேள்வி–பதில் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், மேலும் தகவல்களைப் பெறவும் WhatsApp குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.
To receive updates and join our special Navratri activities, click below:

Join WhatsApp Group

🌟 ஏன் உங்கள் குழந்தைகளை எங்களிடம் சேர்க்க வேண்டும்? | Why Choose Balakshitha International Academy for Your Child?

  • அறிவுத்திறன் வளர்ச்சி | Knowledge Enhancement – Subjects + Cultural wisdom.
  • பண்பாடு & கலாச்சாரம் | Culture & Tradition – Children learn the essence of festivals.
  • சர்வதேச மாணவர்கள் | International Students – Kids from across the globe learn together.
  • சான்றிதழ்கள் & மதிப்பெண்கள் | Certificates & Rewards – Encourages consistent growth

Navratri for kids, Kids Navratri activities online, Balakshitha International Academy, Tamil online classes for kids, நவராத்திரி விழா குழந்தைகளுக்காக, Tamil culture classes online, Kids certificate program Navratri

திங்கள், 25 ஆகஸ்ட், 2025

திருமூலரின் திருமந்திரம்

 


பிள்ளையார் சதுர்த்தி அன்று மிகவும் முக்கியமாக  சொல்ல கூடிய திருமூலரின் திருமந்திரம்




மேலே குறிப்பிடப்பட்டுள்ள திருமூலரின் திருமந்திரமான விநாயகப் பெருமானின் ஐந்து கரத்தினை...  பாடலை அனைவரும் படித்து மனதில் பதிந்து, விரத தினங்களில் பாடும் பொழுது விநாயகர் பெருமானின் பரிபூரணமான அருளை நிச்சயமாக பெறுவீர்கள்.








திருமூலரின் திருமந்திரப் பாடலைப் பாடுவதற்கு முன்பாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள பாடலுக்கான விளக்கத்தையும் படித்து அறிந்த பிறகு விநாயகப் பெருமானின் ஐந்து கரத்தனை ...  பாடலை மனதில் பதியுங்கள். அவ்வாறு படிக்கும்போது  ஆத்மார்த்தமாக விநாயகப் பெருமானை வணங்கிய பலன் அனைவருக்கும் முழுமையாகக் கிடைக்கும்.






விநாயகப் பெருமானுக்கு ஐந்து கைகள் உண்டு. ஐந்து கைகளிலும் வைத்திருக்கும் பொருளுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் உண்டு. அந்தச் சிறப்புகளை அறிந்து கொள்ளுங்கள்.  மேலும் அனைவருக்கும் எடுத்துச் சொல்வது நம்முடைய பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுப்பது அனைத்தும் நம்முடைய வாழ்க்கைக்கு முன்னேற்றங்கள் கொடுக்கும் என்பதால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள ' ஐந்து கைகளின் மகத்துவம் ' என்ன என்பதை படியுங்கள்.





வருடத்தில் வரக்கூடிய வளர்பிறை சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியாக அனைவரும் வழிபடுகின்றோம்.  விநாயகர் சதுர்த்தி அன்று களிமண் பிள்ளையார் வைத்து வணங்குவதற்கான காரணம் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. 'களிமண் பிள்ளையாருக்கான தத்துவம்' படித்து நம்முடைய ஆணவம் அகங்காரம் அனைத்தும் மறைந்து மனித பிறவியின் பயன்தனை அறியுங்கள். வாழ்வினில் நிச்சயம் சிறப்பு பெறுவீர்கள்.








 நம்முடைய வாழ்க்கையில் நாம் எவ்வாறு நடந்தால் விநாயகப் பெருமான் நமக்கு மோட்சத்தை தருவான் என்பதை மேலே குறிப்பிட்டுள்ள 'மோட்சத்தை பெறுவதற்கான வழி நெறிகள்' சொல்கிறது.  படித்துப் பாருங்கள் அதன்படி நடக்க வேண்டும் என்பதில் உறுதி கொள்ளுங்கள். விநாயகர் பெருமானின் பரிபூரணமான அருள் அனைவருக்கும் நிச்சயம் கிடைக்கும்.
























வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

வரலட்சுமி விரதம்


வரலட்சுமி நோன்பு



 

வரலட்சுமி விரதம் அன்று சொல்லக்கூடிய முக்கியமான ஸ்லோகம் 

மனைவி என்பவள் ஆகாயத்தில் உள்ள நட்சத்திரங்களைவிட சிறந்தவள் ஆவாள்  என்று காயத்ரி மந்திரம் கூறுகின்றது. அவளுடைய கழுத்தில் இருக்கும் மாங்கல்யம் 9 இழைகளைக் கொண்டதாக அமைகின்றது .

அந்த ஒவ்வொரு இழையுமே   நமக்கு ஒரு கருத்தைச் சொல்கின்றது.

இழை (1) வாழ்க்கையை புரிந்து கொள்ள வேண்டும் .

(2 ) மேன்மை உடையவளாய் திகழ வேண்டும்.

(3) ஆற்றல் மிக்கவளாய் சிறக்க வேண்டும்.

(4) ‌ தூய்மை கொண்டவளாய் இருக்க வேண்டும்.

(5) ‌ தெய்வீக பக்தியோடு

(6) ‌ உத்தம குணங்களோடு

 (7) ‌விவேகத்தோடு

(8) ‌தன்னடக்கத்தோடு

 (9) ‌பொறுமையோடும்  ஒரு பெண்

திகழ வேண்டும் என்பதே  மாங்கல்யத்தின் இலக்கணம் ஆகும். அந்த மாங்கல்யமே மங்களத்தின் அடையாளமாகத் திகழ்கின்றது.






ஒவ்வொரு பெண்ணும் வரலட்சுமி நோன்பு அன்று  உச்சரிக்கக் கூடிய மந்திரமாக விளங்குவது 

மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன ஹேதுநா
 கண்டே பத்நாமி ஸுபகே
சஞ்சீவ சரதம் சதம்.

மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நிற்பதற்கு செல்வ  செழிப்பு  பெருகுவதற்கு

 ஆரோக்கியம் நலம் தருவதற்கு

 நிம்மதியான வாழ்வு கொடுத்து வாழ்வில் வளம் பெறுவதற்கு சுமங்கலி பெண்கள் அனைவரும்  வரலட்சுமி நோன்பான இந்தச் சிறப்பு தினத்தில் 27 ,  54  அல்லது 108 முறையென முடிந்தவரை சொல்லவே. தெய்வீக ஒளி இல்லத்தில்  நிறைந்து வாழ்வில் இனிது காண்கவே.

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌷

ஆன்மீக கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் இருந்தால் கமெண்ட் இல் பகிரவும் அதற்கான பதிலை அடுத்த பதிவில் அளிக்கிறேன்




புதன், 25 ஜூன், 2025

ஆடி மாதம் பிறந்தாச்சு!



 

ஆடி மாதம் பிறந்தாச்சு!




ஆடி மாதத்தின் சிறப்புகளை முன் கூட்டியே தெரிந்து கொண்டோம் என்றால் அதற்கேற்ப விரத முறைகளை முன்னேற்பாடாக செய்து கொள்வது நிறைய நன்மைகள் தரும்.

நம் கண்ணெதிரே தெய்வீக பலன் கிடைக்க பல வழிகள் இருந்தாலும் அதை காணாது மனம் தளர்வதும் துன்பத்தில் துவண்டு விழுவதும் இயல்பு . தெய்வீக வழிபாடு செய்து வழிபட்டால் நிச்சயம் துன்பத்தில் இருந்து விடுபடலாம்.

 அப்படிப்பட்ட தெய்வ வழிபாடுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆடி மாதத்தில் வரக்கூடிய அம்மன் வழிபாடு. 

ஆடி மாதத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன? 




அம்மனை நினைத்து விரதங்கள் இருந்து அவளுடைய மகிமைகளை படிப்பது, சுலோகங்கள் படிப்பது,  நிறைய நேரங்களை தெய்வத்திற்காக செலவிடுவது என ஆடி மாதத்தில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க . 

நினைத்த காரியங்கள் அனைத்தும் அடுத்து வரும் சுபா முகூர்த்த ஆவணி மாதத்தில் நிச்சயம் நடைபெறும் என்பதிலும் உறுதிகொள்க .

ஆடி மாதத்திற்குரிய சிறப்புகள் என்ன? 




ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு சிறப்புக்குறிய மாதம் ஆகும். அம்மனுக்கு பிடித்தமான வேப்பிலையை வீடு முழுக்க கமழ  செய்வது ஆடி மாதத்திற்குரிய சிறப்பாகும் . அம்மனுடைய அருள் பூரணமாக நிறைந்து வீட்டினில் சுபிட்சம் நிலவ நாம் எடுத்துக் கொள்ளக்கூடிய முதல் பதிவாக தங்களுக்கு எழுதுகிறேன்.

நம்முடைய வீட்டில் அம்மனை வருக வருக என  வரவேற்று நம் இல்லத்தில் தெய்வீக மணம் மணப்பதற்கான தேடல்தான் தெய்வீக மணம் கொண்ட வேப்பிலை ஆகும்.

வேப்பிலை மரம் உங்கள் வீட்டின் அருகில் இருக்கின்றதா ?




வேப்பிலை மரம் உங்கள் வீட்டின் அருகில் இருக்கின்றதா!  என்பதை தெரிந்து கொள்ளுங்கள் அல்லது வேப்பிலை மரக்கன்றுகள் நீங்கள் போகும் வழியில் கிராமத்து பக்கங்களில் நிறைய சாலை இரு புறங்களிலும் வளர்ந்து இருக்கும்.


 சாலையின் ஓரங்களில் வளர்ந்து  இருக்கும் வேப்ப மரத்தின் கன்றுகளை வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வரவும் . வீட்டில் ஒரு தொட்டியில் மணல் இட்டு வேப்பங்கன்றை நட்டு வைக்கவும்.  முதலில் நாம் செய்யக்கூடிய வேப்பங்கன்று நடுதல் என்னும் இந்த செயல் நமது வாழ்வினில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் .

 நம்முடைய அகமும் புறமும் தூய்மையாகும். எதிர்மறை எண்ணங்கள் நம்மை விட்டு விலகும். எப்போதும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிலவுவதற்கான தொடக்கமாக ஆடி மாதம் அனைவருக்கும் கண்டிப்பாக அமையும்.


 அம்மனுக்கு பிடித்தமான வேப்பிலை




 வேப்பிலையின் வாசம் இருந்தால் போதும் அம்மனவள் ஆனந்தமாய் வந்து நம் வீட்டில் குடி புகுவாள் . இந்த ஆடி மாதம் முழுவதும் நம்மால் முடிந்த அளவு வேப்பிலை தோரணங்கள் வாசலில் கட்டுங்கள்.  பூஜை அறையில் வேப்பிலை வழிபாடு , அம்மனுக்கு வேப்பிலை மாலை என வேப்பிலையில் மணம்( மனம்) காணுங்கள் . 

 வேப்பிலை தோரணங்கள் கட்டுவதால் என்ன பயன் கிடைக்கும்?





ஆங்கில மருத்துவம் காணாத அன்று மக்கள் அறிந்த பெரும் மருத்துவமே வேப்பிலையாகும். அம்மனின் தெய்வீக அம்சமாக நோய் கண்ட மருந்தாக திகழ்கின்ற அற்புத மூலிகைதான் வேப்பிலை.

வேப்பிலை பல நோய்களை தீர்க்கும்.  மனவேதனையை மாற்றும் . மங்கல மணம் வீசும் . பசுமையான வாழ்க்கையைத் தரும்.

வேப்பிலை மரம் வீட்டில் இருந்தால் அந்த வீடு சுபிட்சம் பெறும்.  வெள்ளிதோறும் சுமங்கலி பெண்கள் வேப்பிலை மரத்தை மஞ்சள் குங்குமம் இட்டு அம்மனாக வழிபடும் அற்புதமான தமிழ் கலாச்சாரம் இன்றும் கிராமத்து புறங்களில் பார்த்து மகிழலாம் .

மரம் அமைக்க வசதி இல்லாது இருந்தாலும் ஒரு தொட்டியில் வேப்பிலை ஒன்றினை  வைத்து வழிபட,  நம்முடைய வாழ்க்கையும் படிப்படியாக வளம் பெற்று வாழ்வினில் சிறப்பு பெறுவதை பார்க்கலாம்

 அம்மனுக்கு உகந்த வேப்பிலையின் புகழை இந்த ஆடி மாதத்தில் நாம் படிப்பதே நாம் செய்த பாக்கியம் ஆகும் .

நன்றி பாலாக்க்ஷிதா 🙏🌷

Copy rights of balakshitha 









திங்கள், 16 ஜூன், 2025

முருகப்பெருமானின் அறுபடை வீடுகள்

 


முருகப்பெருமானின் அறுபடை வீடுகள்

திருப்பரங்குன்றம் 

 



முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு

என மிகவும் புகழ்பெற்ற திருத்தலம் திருப்பரங்குன்றம் 

அந்தத் திருத்தலத்தில் தான் முருகன் தெய்வானையை

மணந்து திருமண கோலத்தில் காட்சி தருகிறார்.

முருகன் என்றால் அழகு.  அழகு என்றால் முருகன். 

அவருக்குத் துணையாய் மனைவியாய் தெய்வானையோடு

பக்தர்களுக்கு அருள் பாவிக்கின்றார். 


முருகன் தெய்வானையை ஏன் திருமணம் புரிந்தார்?

 தேவர்கள் அசுரர்களிடம் சிறை பட்டுத் துன்புற்றபோது

முருகப்பெருமான் சூரசம்ஹாரம் புரிந்த தேவர்களை

காப்பாற்றுகிறார்.  அதனால் மகிழ்ச்சியுற்று,  இந்திரன்

தன் மகளாகிய தெய்வானையை முருகப்பெருமானுக்கு

நிச்சயம் செய்கிறார். திருப்பரங்குன்றத்திலே மிகவும்

கோலாகலமாய் முருகப்பெருமானுக்கும் தெய்வானைக்கும்

திருமணம் நடைபெறுகிறது அப்படிப்பட்ட புகழ்பெற்ற

திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில்

முதல் படை வீடாகப் புகழ்பெற்று விளங்குகிறது. 

.


 

ஞாயிறு, 8 ஜூன், 2025

முருகனை நினைத்து முறையாக விரதம் இருக்கும் முறை


 முருகப்பெருமானை நினைத்து முறையாக விரதம் இருக்கும் முறை (Murugan Devotion)





அழகிய அரைஞான் ஆட 

மார்பினில் உள்ள பூணூல் ஆட-

மணம்  நிரம்பிய கடம்ப மாலை  ஆட

 இடையாட தோள் வளையாட

விளங்கும்  குழை ஆட  

பன்னிரு  கைகளும் ஆட  

 தாமரை மலர் போன்ற பன்னிரு  விழிகளோடு...

 நெற்றிக்கண்  ஆறும் சேர்ந்தாட 

மலர்ந்த  அழகிய வாய்இதழ்  ஆட

வேலாட  மயிலாட  நான்கு வேதங்களும் ஆட  அதைக்கண்டு நம்மையும் ஆட வைக்கும் முருகனின்  அழகுக்கு ஈடு இணை ஏது!

குமரகுருபரர்


முருகனுக்கு விரதம் இருப்பது எப்படி (How to observe Murugan viratham in Tamil)

 








தமிழரின் வாழ்வில் ஆன்மீகத்துக்கும் தெய்வ நம்பிக்கைக்கும் பிரதானமான இடத்தை பெறுபவர் முருகப்பெருமான். அவனை மனமார்ந்த நம்பிக்கையுடன் வணங்கினால் வாழ்க்கையின் அனைத்து  கவலைகளும் துன்பங்களும் நீங்கி மனநிம்மதியையும் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.


மாதம் மற்றும் ஆண்டுதோறும் வரக்கூடிய வைகாசி விசாகம் , கிருத்திகை , சஷ்டி (Kiruthikai, Sashti, Vaigasiviratham)







 மாதந்தோறும் வரக்கூடிய கிருத்திகை நட்சத்திரம்  சஷ்டி மற்றும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் வைகாசி விசாகம் , கந்த சஷ்டி  , சூரசம்ஹாரம் போன்ற தினங்கள் முருகப் பெருமானுக்குரிய தெய்வீக நாள்களாகக் கருதப்படுகிறது.

விரதம் இருப்பதால் ஏற்படக்கூடிய பலன் என்ன? ( Benefits of observing  Virat (Fasting ) for Lord Murugan)








 முருகப்பெருமானை வணங்கும் நாள்களில் விரதம் இருப்பது என்பது உடல், மனம் , ஆன்மா என மூன்றையும் தூய்மைப்படுத்தும் ஒரு ஆன்மீக சாதனை மற்றும் உணவைத் தவிர்ப்பது மட்டுமல்ல அது மனக்கட்டுப்பாடு. நற்சிந்தனை  ஆகியவற்றை வளர்க்கும் ஒரு வழியாகவும் அமைகின்றது.

முருகப்பெருமானுக்குரிய அந்த சிறப்பு தினங்களில்
நாம் எவ்வாறு விரத முறைகளைக் கடைப்பிடிக்கலாம் என்பதை பற்றி பதிவினில் அறிந்து கொள்வோம்.



முருகனுக்கு விரதம் இருக்கும் முறை (Murugan viratham Guide)

  1. விடியற்காலை எழுந்து வழிபாடு செய்தல்


 முருகனின் அருளைப் பெற விரும்புவோர் அந்த நாளில் விடிகாலை எழுந்து ஸ்நானம் செய்து லயத்திற்கு சென்று அர்ச்சனை செய்தல் மிகவும் சிறப்பு .

நமது காரியங்கள் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் முருகப் பெருமானை மனமார வேண்டி விரதத்தை கடைபிடித்தால் அதற்கான பலன் முருகன் கொடுப்பார். 

2. விநாயகர் பெருமானை முதலில் வணங்குதல் 







எந்த வழிபாடும் தொடங்கும் முன்பாக விநாயகப் பெருமானை வணங்குவது நமது பாரம்பரியத்தில் மிகவும் முக்கியமானது . விநாயகரை வேண்டியபிறகு முருகனிடம் விரதத்தை தொடங்குவது ஆன்மீக ரீதியாகவும் தத்துவ ரீதியாகவும் சிறப்பினை தரும்.


3. நெற்றியில் தெய்வீகத் திலகம்


 விரத நாட்களில் நெற்றியில் குங்குமம் 
 விபூதி அல்லது சந்தனம் இட்டிருப்பது தெய்வீக ஆற்றலை ஈர்க்கும்  ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது.  இது மனத்தையும் உடலையும்  குளிர்ச்சியுடன் நிலைப்படுத்தும் சக்தி மிக்கது.

 4   முருக பெருமானின் ஸ்லோகங்கள் விரத தினத்தில் படிக்க வேண்டுமா!

 காலை மற்றும் மாலை நேரங்களில் விளக்கேற்றி கந்தபுராணம், கந்த சஷ்டி, கவசம் அல்லது சுப்பிரமணிய சுவாமியின்   108 நாமங்கள் சொல்வது  சிறப்பு . மேலும் முருகன் ஸ்லோகங்கள்  நம் மனதில் உள்ள இருளை அகற்றி ஒளியை உருவாக்கும் சக்தி கொண்டது. அதனால் விரத நாட்களில் முருகனின் ஸ்லோகங்கள் படியுங்கள்.












இப்படி முறையாக முருகப் பெருமானுக்குரிய சிறப்பு தினத்தில் முருகனை நினைத்து விரதத்தை முறையாக எடுத்துக்கொண்டு , நாம் ஒரு வேண்டுதலை இறைவனிடம் வைத்தால் அளவில்லாத ஆனந்தம் கொண்டு கந்தன் கடம்பன் கதிர்வேலன் முருகன் என அன்போடு அழைக்கப்படும் மயில் மீது அமர்ந்திருக்கும் எம்பெருமான் குமரனவன் பலனை இனிதே நிறைவேற்றி வாழ்க்கையில் ஒளியேற்றி கவலையெல்லாம் நீக்கி அருள்புரிவான்.





விரத தினத்தன்று முருகனையே நினைத்து ‌மனதை ஒரு நிலைப்படுத்தி,  உபவாசம் இருந்து,  சிந்தை தெளிவாகி ஒழுக்க அறநெறிகள் தான் கொண்டு வாழ்வோம். இம்மை மறுமையிலும் இறை அருள் பெற்று இனிதாக வாழ்ந்து நம்முடைய வாழ்வின் பிறவிப்பயனை இனிதே பூர்த்தி செய்து நிறைவு காண்போம்.


நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹