செவ்வாய், 17 டிசம்பர், 2019

திருப்பாவை பாசுரம் - 2 பாடலும் பொருள் சிறப்புகளும்



திருப்பாவை  பாசுரம் -   2

வையத்து வாழ்வீர்காள் ! நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ ! பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடிபாடி  நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டு எழுதோம் - மலரிட்டு நாம் முடியோம் - செய்யாதது  செய்யோம்  தீக்குறளை சென்றா தோம் ! ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.


வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்






திருப்பாவை பாடலின் உள்ள பொருளின் சிறப்புகள்..


சிறப்பு - 1

மார்கழி மாத -பாவை நோன்பு விரத முறை கேட்டு அதன்படி நடக்க வேண்டும் என பொற்கொடியாள் ஆண்டாள் மிக அன்போடு தோழியர்க்கு  அழைப்பு விடுக்கின்றாள்..

கண்ணுக்கு இனியன் பரந்தாமனை அடைவதற்கு -உணவிலே மட்டுமன்றி மனதையும் கட்டிப்போட வேண்டும்.

இந்த மார்கழி மாதத்தில் சூரியன் உதிப்பதற்கு முன்பே குளிர்ந்த நீரால் நீராடி மனதாலும் உடலாலும் புனிதமாக வேண்டும்  -என்பதே நோன்புக்கு சிறப்பு என கூறி தோழியரை அழைக்கின்றாள்- நம் கோதை.

 சிறப்பு -2

பசு தரும் பாலின் சுவையோ- பால் தரும் நெய்யின் ‌சுவையோ விரதத்திற்கு பலன் தராது- என நாவின் சுவையை அடக்கி விரதம் இருந்தால் பரமனிடம் இருந்து  பலன் அனைத்தும் நாம் பெறலாம்- என கூறி தோழியரை அழைக்கின்றாள்  நம் கோதை .

சிறப்பு - 3

மனதிற்கு அலங்காரம்  தேவையன்று தீய செயல்களை மனதில் நினைக்காது -தீய சொற்களை பேசாது - தீய காட்சிகளை பார்க்காது பிறரைப் பற்றி தவறாக கோல் சொல்லாது நடத்தலே இயற்கையான நம் மனதிற்கு அழகன்றோ!

அதுபோன்று பரந்தாமனை கண்ணால் காணும் இந்த கண்களுக்கு  மை இடுவது தேவையென்று- கூந்தலிலே மலர் அலங்காரம் தேவையன்று..


புனிதமான உடலாலும்- ஆடம்பரம் அலங்காரம் எதுவுமின்றி பரந்தாமன் அடைவதற்கு நோன்பு இருக்க வாரீரோ - எனக்கு அழைப்பு விடுக்கின்றாள்.

 சிறப்பு -4 ‌
ஆடம்பரம் அலங்காரம் எதுவுமின்றி தூய  மனதோடு ஏழையர்க்கும் பக்தர்களுக்கும் தர்மம் செய்தலே  நோன்புக்கு மிக மிக சிறப்பு- எனக்கூறி தோழியர்க்கு   தம்மோடு நோன்பிருக்க வருமாறு அழைப்பு விடுக்கின்றாள்  நம் கோதை.

 சிறப்பு - 5

நல்ல நெஞ்சம் கொண்டு- நல்ல நினைவு கொண்டு -நல்ல சொற்கள் கொண்டு மார்கழி 30 நாட்களும் விரதம் இருந்தால் பரந்தாமன் நம் கைக்கெட்டும் தூரத்தில் வந்துவிடுவான்.


நம் மனதில் நிறைந்து இருப்பான் நினைக்கும் செயல் அனைத்தும் நிகழ்த்திடுவான். வாழ்க்கையில் மகிழ்ச்சி கொடுத்திடுவான்  என்பது திண்ணம்.  

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹

திங்கள், 16 டிசம்பர், 2019

திருப்பாவை பாசுரம் -1 பாடல்களும் விளக்கங்களும்

ஆண்டாள்

திருப்பாவை பாடல் - 1



 

மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளால் -நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் -சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்


பாடலில் உள்ள பொருளின்  சிறப்புகள் ..

சிறப்பு-1 ‌ மார்கழி மாதம் முழுமையான மிக அழகான நிலவின் ஒளி பேசுகின்ற சிறப்பான நன்னாள் இதுவே .

 சிறப்பு- 2  சிறப்பு மிகுந்த ஆயர்பாடியில் வசிக்கும் கன்னியர்களுக்கு செல்வ சிறுமிகளுக்கும்.. ஆண்டாளின் அன்போடு அழைக்க கூடிய அழைப்பு இதுவே.

 சிறப்பு- 3 கூர்மையான வேல்கொண்டு நம்மை அனைவரையும் பாதுகாத்துக் கொண்டிருக்கும் அரிதான தொழில் செய்யும் நந்தகோபன் -அழகிய கண்களை கொண்டவளாய் யசோதா பிராட்டி அவர்களின் சிங்கம் போன்ற வீர மகனாக- கரிய நிறம் கொண்டவரான -சிவந்த கண்களை உடையவனாக- சூரியனை போன்ற பிரகாசமான முகத்தை உடையவன் நாராயணனின் அம்சமாகிய கண்ணபிரான்  அருள்  தருவதற்காக காத்துக் கொண்டிருக்கின்றான் அவனை நாம் புகழ்ந்து பாடுகையில் இந்த உலகமே நம்மை வாழ்த்தும் என்பதை அறிந்து அனைவரும் எம்மோடு சேர்ந்து நோன்பிருக்க வாரீரோ -என ஆண்டாள் அன்போடு அனைவரையும் அழைக்கின்ற அழைப்பு இதுவே.

சிறப்பு -4 ‌பாவையே கேளீரே.. இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் நினைத்துகொண்டு பாடுகிறாள்.. 'நாராயணனே பறை தருவான் 'என்ற வாசகம் 108 திருப்பதிகளிலே   108வது திருப்பதியான வைகுண்டத்தில் வசிக்கக்கூடிய நாராயணனை நினைத்து  -நாம் இந்த மார்கழி மாதத்தில் புண்ணிய தினங்களாக இந்த 30 நாட்களும் நினைத்து வழிபட்டால் நாம் நினைத்த காரியங்கள் முயற்சித்து  கிடைக்கும் ‌

  சிறப்பு- 5
  தினமும் ஒரு  திருப்பாவை இந்த பாடலை பக்தியோடு படித்து நல்ல சிந்தனைகளை மனதில் வைத்து நல்ல பாதையிலே நடந்து சென்றால்- செயலாற்றினால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனோடு கலந்து முக்தியை அடையலாம் என்பது திண்ணமே.


செவ்வாய், 10 டிசம்பர், 2019

சொந்தமாக வீடு கட்டும் யோகம் பெறுவதற்கு செவ்வாய் பரிகார வழிபாடு


சொந்தமான மனையிலே வீடு கட்டி சிறுகுடிலும்-பெருங்குடிலாக
அதிலே மனைவி மக்கள் அனைவரும் ஒருசேர ஆனந்தமாய் அங்குமிங்கும் பரபரக்க- அதை கண்டு பெருமிதம் கொள்பவனே- வீட்டின் பெருமகன் சிறந்த தலைமகன் எனும் பேறு பெற்றவன் ஆகின்றான்.


ஒரு வீடு நமக்கு சொந்தமாக அமைந்து விட்டால் மனதிலே ஒரு நிம்மதி.

வாழ்வில் நாம் சாதித்து விட்டோம் என ஆனந்தம்

அடுத்தவர் சொல்லுக்கு ஆளாகிய துயர் நீங்கப் பெற்ற ஒரு மகிழ்ச்சி .

நம் உழைப்பு வீண் போகவில்லை என ஏற்படும் இன்பம் .

நான் கட்டிய -எனது சொந்தமான- என் புதிய வீடு என சொல்வதில் ஒரு பெருமிதம் .


இப்படி என்னால் முடியுமா என யோசனை செய்யாது- முடியும் என நம்பிக்கையோடு நாம் செய்வதற்கான செவ்வாய் பரிகார வழிபாடு பற்றி அறியலாம் .

அதற்கு முன்பாக செவ்வாய் பலம் குறைந்து இருந்தால் வாழ்க்கையில் நடக்கக்கூடிய சில விஷயங்கள்..

சிலரது உழைப்பில் சேர்ந்த செல்வம் இருந்தும் -வீடு கட்டும் யோகம் தள்ளிப்போகும் .

சொந்தமாக மனை  இருந்தாலும் வீடு கட்ட முடியாது.பல தடங்கல்கள் ஏற்படும்.

 பூர்வீக சொத்து வரவேண்டியது கோர்ட்டில் நிலுவையில் இருக்கும்


அனைத்திற்கும் ஒரே காரணம -நம்முடைய ஜாதகத்தில் செவ்வாய் பலம்பெற்று இல்லாமல் இருப்பதே ..இதை பரிபூரணமாக நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளை அறியலாம்..


 செவ்வாய் பகவானுக்கு உகந்த கிழமை -செவ்வாய் கிழமை

செவ்வாய் பகவானுக்கு உகந்த மலர் செவ்வரளி -சிகப்பு வண்ண மலர்கள்.

 செவ்வாய் பகவானுக்கு உகந்த பழம் செவ்வாழை .

செவ்வாய் பகவானுக்கு உகந்த அதிதேவதை முருகப்பெருமான்.

 செவ்வாய் பகவானின் அருள்பெற உகந்த தலம் வைத்தீஸ்வரன் கோவில்.



 வழிபடும் முறைகள் ..
வழிபாடு-1
காலை 6-7 மணி -செவ்வாய் ஓரையில் விளக்கேற்றி செவ்வரளி மலர்களால் அலங்கரித்து-செவ்வாழை- கற்கண்டு பால் வைத்து 'ஓம் அங்காரகாய நமஹ 'எனும் ஸ்லோகம் 108 முறை பாராயணம் செய்ய வேண்டும் . 9 வாரங்கள் தொடர்ந்து வழிபாடு நடத்துவது சிறப்பு.

வழிபாடு- 2
செவ்வாயின் அதிதேவதை முருகன் என்பதால் -ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும்  முருகப்பெருமானின் கந்த சஷ்டி பாராயணம் - கந்தனின் புகழ் மாலைகள்  படிக்க வேண்டும்.

வழிபாடு - 3
 ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் முருகப்பெருமான் கோவிலுக்கு சென்று  முதல் அபிஷேக பூஜையில் கலந்துகொண்டு முருகப்பெருமானின் அலங்கார தரிசனத்தை காண்பது சிறப்பு.

வழிபாடு -4 ‌
செவ்வாய்க்கிழமை வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று சுயம்பு மூர்த்தியாக காட்சி தரும்  சிவபெருமான்

 வேண்டிய வரங்கள் அனைத்தும் கொடுப்பவன். ஓம் நமச்சிவாய எனும் மந்திரத்தை சொல்கையில் மனம் குளிர்பவன்- மனைவி என்பவள் தம்மோடு சரிபாதி என போதித்து- சிவ சக்தியாக காட்சி தருபவன் எம்பெருமானை  தரிசித்து-

தனிசன்னதியில் சிறப்புமிக்க செவ்வாய் பகவானுக்கு அபிஷேகம் செய்து சிகப்பு நிற ஆடை அணிவித்து செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து "சொந்தமாக மனையில் வீடு கட்டும் பாக்கியத்தை அருள வேண்டும்-தம்மால் முடிந்த செப்பு பாத்திரம் தானம் செய்கிறேன்"என மனமுருக வேண்டி ஒன்பது முறை அங்கார பகவானை வலம் வர வேண்டும்.

செவ்வாய் பகவானுக்கு மிகவும் பிடித்தமான அதிதேவதையாக விளங்கும் முருகன் பெருமான் அங்கே  முத்துக்குமாரசாமியாக காட்சி தருகிறார்.

முருகப்பெருமானையும் தரிசித்து வந்தால் நம்முடைய ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்று சொந்தமாக வீடு கட்டும் யோகம் உடனே கைகூடும் .


முருகன் அருளால் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் நீங்கி -செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தை நம் ஜாதகத்தில் பெற்று வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.

சொந்தமாக வீடு கட்ட நினைப்போர் வாழ்விலே அதற்கான சாதகமான பலன்கள் அமைந்து -பூமி பாக்கியம் சகல நன்மைகளும் பெற்று
கனவு நினைவாகி வாழ்க்கையில் சிறப்பாக வாழ்வதற்கான ஒரு பரிகாரமே -இந்த செவ்வாய் பரிகார வழிபாடு வழிபட்டு வாழ்க்கையில் சிறப்பை அடையலாம் .

திங்கள், 9 டிசம்பர், 2019

குழந்தை வரம் வேண்டி சஷ்டி வழிபாடு


குழந்தைை வரம் வேண்டி சஷ்டி வழிபாடு


1-6-2025  ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை சஷ்டி 


சட்டியில் இருந்தால் அகப்பையில் எனும் பழமொழியை நான் அடிக்கடி கேட்பது உண்டு..

'சஷ்டி திதியில் விரதம் இருந்தால் அகப்பையில்- அதாவது கருப்பையில் குழந்தை மலரும் 'என்பது பழங்காலத்தில் இருந்தே சொல்கின்ற ஒரு வாக்கு .அதுவும் மகா சஷ்டி அன்றைய தினத்திலே -தாமரை மலர் பூத்த தங்க முகத்தவனின்  அருளைப் பெற்றால் நிச்சயம் குழந்தை பிறக்கும். 

வைகாசி மாதம் வரக்கூடிய வளர்பிறை சஷ்டி அன்று கணவன் மனைவி இருவரும் ஒரே மனதோடு பயபக்தியோடு -உளம் உருகி குழந்தை வரம் கிடைக்க வேண்டி 'உமை போன்ற குழந்தை எமக்கு இல்லை எனில் -இந்த உலகத்தில் பிறந்து என்ன பயன் -முருகா! நினையே வேண்டி விரதம் இருந்து நின் அருளால்  பெறப் போகும் குழந்தையை  நீ குடி கொண்ட கோவிலாகிய திருச்செந்தூரில் குழந்தையின் முதல்முடியை காணிக்கையாக செலுத்துகிறேன்.. குமரா -கந்தா -கடம்பா -கதிர்வேலா வேலவா ' என முருகனின் பாதமே சாஷ்டாங்கமாக விழுந்து வேண்டி சரணடைந்தால்  -குழந்தை செல்வத்தைஉடனே  அருள்பவன் முருகப்பெருமான்.

குல தெய்வ கோவிலில் முதல் முடியை காணிக்கையாக கொடுப்பது -என்பது குல வழக்கம் என்றால் அதன்படியே செய்து அதற்கு அடுத்து முடிகாணிக்கை முருகனுக்கு அளிக்கலாம்.

விரதம் இருப்பதற்கான முறை...



 இருவரும் சேர்ந்து காலையில் இருந்து  மாலை வரை- பழம் பால் தண்ணீர் மட்டுமே ஆகாரமாக எடுத்துக் கொண்டு உள்ளம் உருகி வழிபட்டால் கேட்ட வரத்தை அளிப்பான் கந்தன் அவன்

 காலையும் மாலையும் விளக்கேற்றி கணவனும் மனைவியும் ஒருசேர அமர்ந்து கந்த சஷ்டி கவசம் படித்து முருகனை வழிபட்டால்

அழகுக் குழந்தையாக -அறிவுஜீவியாக இளமை வளமாக - நீண்ட ஆயுள் கடாட்சத்தை பெற்ற ஒரு தெய்வீக குழந்தையாக நம்மிடத்தில் அளிப்பான் கார்த்திகேயன்.



அன்றைய தினத்தில் காலை அல்லது மாலையில் ஒரு முறையாவது கோவிலுக்குச் சென்று முருகப்பெருமானை தரிசித்து முறையான விரதத்தை கடைபிடித்தால் அடுத்த சஷ்டியிலே அழகான மழலையை  மடியிலே தவழ செய்வான் ஆறுமுகன்.

 வருத்தத்தை நீக்கி -துன்பத்தை போக்கி -துயர் துடைத்து மழலைச் செல்வத்தை அளிப்பான் வேலன் அவன்.

இதே விரதத்தை  ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய வளர்பிறை  சஷ்டி அன்றும் மேற்கொண்டு குழந்தை செல்வத்தை முருகப்பெருமானின் அருளால் பெறலாம்.


 வாழ்க்கையில் சின்னச் சின்ன துன்பங்கள் கூட ஏற்றுக்கொள்ள முடியாத மென்மையான மனம்  படைத்தவர்களாக நாம் இருக்க சோதனைகளை  மலையளவு கொடுத்து சோதித்துப் பார்ப்பதில் ஏனோ ஒரு ஆனந்தம் ‌‌‌ இறைவனுக்கு...




இந்த சஷ்டி  அன்று விரதமிருந்து உள்ளம் உருகி முருகப் பெருமானை வேண்டி வழிபடுவோருக்கு.. 
நம்முடைய துன்பங்கள் அனைத்தும் விலகி  நம்முடைய சோதனைகள் அனைத்தும் தவிடு பொடியாக்கி பனிபோல் விலகச் செய்து அருள்பாலிக்கின்றார்  வேல் கொண்டு வீற்றிருக்கும்  எம்பெருமான் முருகன் அவன்.

தொடர்ந்து ஐந்து சஷ்டிக்கு தம்பதிகள் சேர்ந்து காலையும் மாலையும் விளக்கேற்றி கந்தர் சஷ்டி  பாராயணம் செய்து விரதம் இருந்தால் - அதற்குள் முருகப் பெருமானின் அருளால் குழந்தை வரம் நிச்சயம் கிடைக்கும்.


இந்த குறை மட்டுமல்லாது வாழ்வில் எந்த குறை இருந்தாலும் முருகா சரணம் என்போர்க்கு சிந்தையில் தித்திக்கும் செய்தி பல அளித்து குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ செய்திடுவான் எம்பெருமான் குகன் என்பதால்
இந்த கந்த சஷ்டி அன்று -முறையாக விரதம் இருந்து -முருகப் பெருமானின் அருளை  பெற்று வாழ்க்கையில் சிறப்பை அடையலாம்.

சிறப்பான வாழ்க்கை பெறுவதற்கு கல்லுப்பு பரிகாரம் 🌹🍀🌹👇👇👇

https://balakshitha.blogspot.com/2020/01/blog-post_7.html


சொந்தமாக மனை வாங்கி ,வீடு கட்டும் யோகம் பெறுவதற்கு பத்துவிதமான தெய்வீக வழிபாட்டு முறைகள் அமேசானில் மிண்னனு  புத்தகமாக படித்து பயன்பெறுங்கள்🙏🌹👇👇👇

https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC



'இனிது இனிது வாழ்க்கை இனிது அன்றோ 'புத்தகம்
64 பக்கங்கள் கொண்டு... தம்பதியர்கள் சிறப்பாக வாழக்கூடிய 16 வழிமுறைகள் கொண்ட கைக்கு அடக்கமான அழகிய கவிதை தொகுப்பு புத்தகம்
திருமணம் சுப நிகழ்ச்சிகளுக்கு வரும் சொந்த பந்தங்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க ஏற்ற புத்தகம்.

புத்தகங்கள் வாங்கி வைத்துக்கொண்டு , திருமண நிகழ்ச்சியில் அன்பளிப்பாக பூங்கொத்துடன் ஒரு புத்தகம் வைத்து திருமண தம்பதியர்களுக்கு கொடுத்தால்
நிச்சயம் மனம் கனிநத ஒரு மகிழ்ச்சி உங்களுக்கு பிறக்கும்.


📞‌அணுகவும் 8124152666

💐 என் புத்தகத்தை அமேசானில் படிக்க. இந்த link click செய்யுங்கள் 💐

https://read.amazon.in/kp/kshare?asin=B08GJGL2C7&id=6jyb424mevh3tn3csp2ds

Copy rights at Balakshitha

புதன், 4 டிசம்பர், 2019

திருமணம் விரைவில் கைகூட பெருமாளின் அங்கவஸ்திரம் வழிபாடு



பெருமாளின் பட்டு வேஷ்டி அங்கவஸ்திரம் பரிகார வழிபாடு


 திருமணம் இளம் வயதில் நடக்கக்கூடிய ஒரு இனிதான வைபோகம்.. அது பல பேருக்கு சில தடைகள் காரணமாக தள்ளிக்கொண்டே போகும்.

 இதனால் மனமுடைந்து வாழ்க்கையில் விரக்தி அடைவோர் பலர்  உண்டு. அ


அனைவரும் எளிதில் செய்யக்கூடிய ஒருநாள் பரிகாரமே பெருமாளின் பட்டு வேஷ்டி அங்கவஸ்திரம் வழிபாடு

 ஜாதக கோளாறுகளை சரிசெய்து தெய்வத்தின் திருவருளை பெற்று  அடுத்த ஓரிரு மாதங்களில் இனிதே திருமணம் நிச்சயம் முடிந்து மனதில் மகிழ்ச்சி பிறக்கும்.


சொந்த வீடு மழை வாங்குவதற்கான 10 தெய்வீக வழிபாட்டு முறைகள் புத்தகமாக அமேசானில் படித்து பயன் பெறுக 🌹🌹🍀🌹🍀🌹👇👇👇👇👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC

 அதற்கான வழிமுறை..

சிறப்பு 1  பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு சாற்றகூடிய - பட்டு வேஷ்டி துண்டு ஐயரிடம் முன்பே சொல்லி வைத்து ...

தட்சணை கொடுத்து வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் வைக்க வேண்டும் .


வெள்ளிக்கிழமை நல்ல சுப நாளில்
 'தன் மகனுக்குதிருமணம் இனிதே ஆக வேண்டும் 'என மனதார பெற்றோர் வேண்டிக்கொண்டு -

பூஜைஅறையில் ஐந்து முக விளக்கேற்றி பட்டு வேஷ்டி அங்கவஸ்திரத்தை வைத்து- நன்றாக வேண்டிக்கொண்டு வாழ்த்தி மகனிடம் கொடுக்க-பெருமாளின் மேனியில் சாற்றிய
அங்க வஸ்திரத்தை அணிந்துகொண்டு மணமகன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்வது மிக சிறப்பு .


அர்ச்சனை செய்வதற்கான பொருள்கள்


தேங்காய்-வெற்றிலை பாக்கு வாழைப்பழம்- துளசி மாலை
புஷ்பத்தில்‌  ஏலக்காய் சேர்த்து கட்டிய
பூமாலை (நம்முடைய கையால் பூக்களை தொடுத்து ஏலக்காய் இடையிடையே ஊசியால்  கோர்த்து கட்டுவது மிக விசேஷம்)

ஏனென்றால் ஏலக்காய் மகாலட்சுமிக்கு மிகவும் உகந்த பொருள் -என்பதால் ஏலக்காய் சேர்ந்த புஷ்பத்தை பெருமாளுக்கு சாற்றும்பொழுது-பெருமாளின் மார்பினிலே வாசம் செய்யும் மகாலட்சுமியும்
அளவில்லாத ஆனந்தம் கொண்டு நாம் வேண்டும் வேண்டுதலை- மனம் குளிர நிறைவேற்றுவாள்-என்பது ஐதீகம்

 மூன்று பெருமாள் சன்னதிக்கு சென்று வருவது மிகவும் சிறப்பு.

பிறகு வீட்டிற்கு வந்தபிறகு அந்த பட்டு வேஷ்டி அங்கவஸ்திரத்தை மடித்து பத்திரமாக பூஜை அறையில் வைக்கலாம்.


இந்த வழிபாடு தொன்றுதொட்டு பெரியவர்கள் சொல்லுகின்ற மங்கள வழிபாடு .

இன்று வரை நடைமுறையில் இருந்து வரும் ஒரு வழிபாடு .



பெருமாளின் திருமேனியில் சாற்றிய  -பட்டு வேஷ்டி அங்கவஸ்திரம் மணமகன் அணிய -அந்த வஸ்திரத்தின் புனிதம் பட்டு தோஷங்கள் தடைகள் விலக திருமணம் விரைவில் கூடும்

இந்த பரிகாரத்தை சிறப்பான முறையில் செய்தால் அடுத்து உடனே திருமணம் நல்ல இடத்தில் நினைத்த இடத்தில் உடனே கைகூடும் .

 பெருமாளின் அருளால் திருமணம் இனிதாக நடந்து முடிந்த பிறகு
பெருமாளுக்கும் பத்மாவதி தாயாருக்கும் பட்டுடடை சாற்றி அதேமுறையில்அர்ச்சனை செய்து வேண்டுதலை நிறைவேற்றலாம்.

வாழ்க்கையில் விரக்தி நீங்கி மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை கிடைப்பதற்கு -அருமையான பரிகாரம் இந்த பட்டு வேஷ்டி அங்கவஸ்திரம் வழிபாடு.

 இதே முறையில் பெண்களுக்கும் திருமணம் கை கூட ..

பெருமாள் கோவிலுக்கு சென்று மகாலட்சுமியின் திருமேனியில் சாற்றிய புடவையை அய்யரிடம் தட்சணை கொடுத்து வாங்கிவந்து இதே முறையில் வழிபாடு செய்தால் பெண்களுக்கும் விரைவில் திருமணம் நடக்கும்.

சுப மாதங்களில் சுப நாளில் சுப நேரத்தில்  இந்த வேண்டுதலை நிறைவேற்றுவது உத்தமம்.

பெருமாளின் அனுக்கிரகத்தால் திருமண வைபோகம் சுபமாக வீட்டினில் நடந்தேற- அளவிலாத மகிழ்ச்சி குடும்பத்தில் அனைவரின் முகத்திலும் நிறைந்திட -ஆனந்தம் பெற்று சிறப்புடன் வாழ்ந்து வாழ்வின் பயனை அடைவோம்.

 Copy rights at balakshitha

செவ்வாய், 3 டிசம்பர், 2019

வீடு புதிதாக குடி போகும் போது தேவையான பொருட்கள்

வீடு கிரகப்பிரவேசம் செய்வதற்கு  தேவையான பொருட்கள்..

மஞ்சள்
குங்குமம்
நல்லெண்ணெய்
நெய்
விளக்குத்திரி
சந்தனம்
விபூதி
 வத்தி
கற்பூரம்
வத்தி பெட்டி

வெற்றிலை பாக்கு
வாழைப்பழம்
தேங்காய்

மல்லிகை  பூ
ரோஜா பூ
 மலர்மாலைகள்
 மாவிலை தோரணம்

புதிய நம்முடைய இஷ்ட
தெய்வத்தின் படம்
5 பல்லா(சின்ன சட்டி )
அரிசி
பருப்பு
சர்க்கரை
புளி
கல்லுப்பு
புதிய  தண்ணீர் குடம்
புதிய பால் காய்ச்சும் பாத்திரம்  9-புதிய செங்கல் (அடுப்பு வைக்க)

முன்பே ஏற்பாடு செய்ய வேண்டியவை


நல்ல நாள் பார்த்து பத்திரிக்கை அடித்தல்

கிரகப்பிரவேச பூஜைக்கு ஐயருக்கு அழைப்பு விடுத்தல்

சீரியல் செட்

மேளதாளம் ஏற்பாடு

தெரு வாசலில் இருபுறமும்
கட்டுவதற்கு -குலையோடு சேர்த்து
நான்கு வாழை மரங்கள்


வீட்டில் அமர்வதற்கு தேவையான
பாய் விரிப்பு -ஜமுக்காளம் நாற்காலிகள்

காலை டிபன் ஏற்பாடு

கோவிலை திறக்க  அய்யரிடம் சொல்லி வைத்தல்

மாடு கன்று உரியவரிடம் முன்பே சொல்லி வைத்தல்

வருபவர்களுக்கு  தாம்புலம் ஏற்பாடு

அய்யர் கொடுக்கும் லிஸ்ட் பொருளை வாங்கி வைத்தல்

எதையும் மறக்காமல் இருக்க குறித்து வைப்பதற்கு
கையில் ஒரு சிறிய டைரி -பேனா.

Copy rights at balakshitha



திங்கள், 2 டிசம்பர், 2019

புதுமனை குடிபோகும் போது கவனிக்க வேண்டியவை

    கிரகபப்பிரவேசம்ரை ஒருவர் அனுசரித்து புதிய வீட்டை கோவிலாக பாவித்து வாழ்க்கையில் அனைவரும் ஒற்றுமையாக பாசப்பிணைப்பு வாழவேண்டும் என உறுதிகொண்டு புதிய வீடு கிரகப்பிரவேசம் செய்வது உத்தமம் .
வீடு குடிபோகும் போது கவனிக்க வேண்டியவை..
சிறப்பு -1 குடி போவதற்கு ஏற்ற மாதங்கள்..
சித்திரை -வைகாசி- ஆவணி

ஐப்பசி -கார்த்திகை -தை போன்ற மாதங்களில் கிரகப்பிரவேசம் செய்தால்  குடும்பம் சுபிட்சம் பெறும்.

குடி போவதற்குஏற்ற நாள் ..

திங்கள் -புதன் -வியாழன்
வெள்ளி- ஞாயிறு

ஐயரிடம் சென்று நாள் பார்த்து வளர்பிறை நாள் பார்த்து தேதி குறித்து ஒரு புதிய வீட்டில் கிரகப்பிரவேசம் செய்வது மிக மிக உத்தமம் .


சிறப்பு -2  குடும்பத்தில் கிரகப்பிரவேசம் செய்வதற்கு முன்பு அனைவரும் ஒருமனதாக முடிவு எடுக்க வேண்டிய ஒரு விஷயம் ..

குடும்பம் ஒரு கோவில் போன்றது. புது வீடு ஒரு கோவிலாக கருதி- இனிவரும் காலம் ஒருவரை ஒருவர் அனுசரித்து- புதிய வீட்டு கோவிலாக பாவித்து வாழ்க்கையில் அனைவரும் ஒற்றுமையாக பாசப்பிணைப்போடு வாழவேண்டும்-என உறுதி கொள்க.

சிறப்பு-3 ‌கிரகப்பிரவேசம் போவதற்கு முன்பு அறிந்து கொள்ள வேண்டிய மிக அவசியம் ..

யாரும் நடமாட்டம் இல்லாத புது வீடு என்பதால் தெய்வீக சக்தி இருக்காது. பல தீயசக்திகள்-திருஷ்டிகள் ஆன்மாக்கள் சுற்றிக்கொண்டு இருக்கும்.

அவை அனைத்தும் விலக கிரகப்பிரவேசத்திற்கு முதல்நாள் கொடும்பாவி என சொல்லக்கூடிய திருஷ்டி பொம்மையை வீடு கட்டும்போதே வைக்க வேண்டும்.. 


அப்பொழுதுதான் கண்திருஷ்டி என்று சொல்லக்கூடிய ஓமல்- தீய சக்திகள் அனைத்தும் அந்த திருஷ்டி பொம்மை கிரகித்துக்கொள்ளும்.

கிரகப்பிரவேசத்திற்கு முதல்நாள் மறக்காது அந்த பொம்மையை எடுத்து வீட்டை வலம் வந்து அந்த பொம்மையை எரிக்க வேண்டும்.
அடுத்த நிமிடமே வீட்டில் தெய்வீக சக்தி உள் நுழைவதற்கான புத்தம்புதிய பொலிவாக வீடு முழுமையாக சிறப்பு பெறும்.


சிறப்பு -4  வீடு முழுவதும் சுத்தம் செய்து வாசலில் மஞ்சள்- குங்குமம் பூக்கள் -மாவிலை தோரணங்கள் வைத்து - பச்சரிசி மாவு கோலம் மற்றும் வண்ணக்கோலங்கள் வீட்டை அழகு படுத்த வேண்டும்.

வாழைமரம் குலையோடு  சேர்த்து வீட்டின் வாசலில் இருபுறமும் கட்டுவது தெய்வீக தன்மையை அதிகப்படுத்தும்.


சிறப்பு -5  ‌ அதிகாலை பிரம்ம முகூர்த்தமான 4/30 மணியிலிருந்து6 மணிக்குள் கிரகப்பிரவேசம் செய்வது என்பது மிக மிக உத்தமம்.

சிறப்பு-6  அனைவரும் கங்கா ஸ்நானம் செய்து புத்தம் புது பொலிவுடன்

5 பல்லா (சிறிய மண்ணால் செய்யப்பட்ட சட்டி முன்பே வாங்கி வைக்கவும்) அதில்
கழுத்து பாகத்தில் மல்லிகைப்பூவை சுற்றி மஞ்சள் -குங்குமம் இட்டு அரிசி- பருப்பு- புளி -கல்உப்பு -சர்க்கரை நிரப்பி -ஒரு குடம் தண்ணிர்- சுவாமி படம் எடுத்துக்கொண்டு புது வீட்டு அருகாமையில் உள்ள கோவிலுக்கு (முதல்நாளே -அய்யரிடம்  கோவிலை திறந்து வைக்குமாறு சொல்லி வைக்கலாம் .

அங்கிருந்து காமாட்சி அம்மன் விளக்கு தீபமேற்றி மேளதாளம் முழங்க தம்பதியர் சொந்த பந்தங்களோடு வருவது மிக மிக உத்தமம்.

சிறப்பு-7 ‌பசுமாடு கன்று(முன்பே ஏற்பாடு செய்து கொள்ளவும்) வீட்டு வாசலிலேயே நிற்க வைத்து- ஐயர் மந்திரம் சொல்ல கணவன் -மனைவி இருவருமாக சேர்ந்து அந்த பசுவை மகாலட்சுமியாக மனதிலே நினைத்து மிக பயபக்தியோடு- மஞ்சளிட்டு குங்குமபொட்டு வைத்து வணங்க வேண்டும்.வீட்டிற்கு மங்களத்தை கொடுக்கும் .

பூஜை அறையில் ஐந்துமுக விளக்கேற்றி தெய்வீக மணம் கமழ -ஊதுபத்தி நறுமணத்தில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து குலதெய்வத்தை பயபக்தியோடு வேண்டிக்கொண்டு இந்த விசேஷத்தை நடத்துதல் மிக மிக உத்தமம்.

சிறப்பு -8   தாய்வீட்டு சீதனமாக (அவரவர் வசதிக்கு ஏற்றவாறு ) பழவரிசை தட்டுகள் -பெண்ணுக்கு பட்டுப்புடவை -மாப்பிள்ளைக்கு பட்டு வேஷ்டி வைத்து கொடுக்க -

தம்பதியர் ஆசீர்வாதம் பெற்று அதனை வாங்கி கட்டிக் கொண்டு வந்து மனையிலே அமர்ந்து ஐயர் ஹோமம்  வளர்த்தி மந்திரம் சொல்ல -கிரகப் பிரவேசம் செய்வது என்பது வாழ்க்கையில் என்றென்றும் கண்ணுக்கினிய பேரின்பம் கிடைக்கும். மங்கலம் கிடைக்கும்.


சிறப்பு- 9 சொந்த பந்தங்கள் புடைசூழ கிரகப்பிரவேசம் இனிதாக நடந்தேற பால்காய்ச்சும் வைபோகம் இனிதாக நடந்தேற..

மஞ்சள் குங்குமம் வைத்த ஒன்பது செங்கற்கள் அடுக்கி வைத்து -அதில் புத்தம்புது  பாத்திரத்தில் பால் காய்ச்சி ஏலக்காய் சர்க்கரை சேர்த்து பொங்கியதும் நன்கு காய்ச்சி குடும்பத்தில் உள்ள அனைவரும் குடிக்க வேண்டும்.

சிறப்பு -10  கிரகப்பிரவேசம் செய்த வீட்டில் -அன்று முழுவதும் பூஜை அறையில் ஏற்றி வைத்த தீபம் மலர்ந்து இருக்க வேண்டும் .

சொந்த வீடு மனை அமையும் செவ்வாய்கிரக வழிபாடு🙏🌹🍀👇👇👇
http://balakshitha.blogspot.com/2019/12/blog-post_10.html

கிரகப்பிரவேசம் செய்யும்போது தேவையான பொருட்கள் 🌹🍀🌹👇👇👇
http://balakshitha.blogspot.com/2019/12/blog-post_3.html


இரவு குடும்பத்தார் வீட்டில் தங்க வேண்டும் கதவை பூட்ட கூடாது.
இந்த  சம்பிரதாயத்தோடு நாம் கிரகப்பிரவேசம் செய்து வீட்டில் குடியேறினால் அனைத்து சுபிட்சமும் பெற்று மங்கலங்கள்- சுப நிகழ்ச்சிகள்

அனைத்தும் நடந்தேறும் .

புதிய இல்லம் குடிபுகுந்து -என்றும் தீபம் ஒளிர்ந்துகொண்டு இருக்க -தெய்வீக மணம் வீசிக் கொண்டிருக்க நல்ல எண்ணங்கள் மலர்ந்து கொண்டு இருக்க -சுபநிகழ்ச்சிகள் அடிக்கடி நடந்து கொண்டிருக்க- மனதில் ஆனந்தம் என்றும் குடிகொண்டிருக்க-இனிதாக வாழ்ந்து தெய்வத்தின் அருளைப் பெற்று சிறப்பான வாழ்க்கை வாழ்ந்து மகிழ்வோம்.

என்பதால் இனிதான வாழ்க்கை வாழ்ந்து சிறப்பை அடையலாம்.

Copyrights at balakshitha

வியாழன், 28 நவம்பர், 2019

ஐயப்பன் வரலாறு

ஐயப்பன் வரலாறு


மகிஷி  என்னும் அரக்கி அனைவரையும் நடுங்க வைத்து துன்புறுத்தவே -அவளை அழிப்பதற்கு ..

மோகினி அவதாரத்தில் விஷ்ணு சிவனோடு ஐக்கியமாகி பிறக்கின்றான் மணிகண்டன்.


பால் வதன நெற்றியிலே திலகம் கொண்டு கன்னங்கள்  இரண்டும் வெண்ணை உருண்டை களாக ..

இதழ்களோ சிவந்த மாதுளை முத்துக்களாக  -கழுத்திலே அழகிய மணியோடு பிறக்கின்றான் மணிகண்டன்.

அழுகுரல் கேட்டு கேரள பந்தள மகாராஜா- ஓடிவந்து அந்த அழகிய மழலையை அள்ளி தூக்கி மகிழ்கின்றார். 

கை கால்கள் துள்ள  மகாராஜா குழந்தையை அள்ளி அணைத்ததும் அழுத குழந்தை சிரிக்கின்றான் . அவன் கழுத்தில் இருந்த மணியும் அந்த நேரத்தில் மிக அழகாய் ஒளிர்ந்தது கண்டு பரவசப்பட்டு ராஜன் , மணிகண்டன் என்று அவனுக்கு பெயர் சூட்டுகிறாகின்றார்


 மகனாக அன்போடு வளர்க்கின்றார்  அடுத்துஅரசிக்கு ஒரு மழலை பிறக்க மழலையின் பாசமோ அரசியின்  கண்களைம றைக்கமணிகண்டன்
 எங்கே  ராஜ்ஜியத்தில் பங்கு கேட்பானோ -என பயந்து மனதில் நஞ்சு கொண்டு வஞ்சக செயல் புரிகின்றாள்.

தமக்குவயிற்றுவலி போல் பாசாங்கு செய்து- புலிப்பால் கொண்டு வர- அதை பருகினால்  வலி குணமாகும் என்று பொய்யுரை உரைக்கின்றாள்.


தன் வளர்ப்பு தாயின் பொய்யுரை நாடகநோய்  தீர்க்க -வீரம் பெற்ற புலி சுரந்த பால் தனை பெறுவதற்கு ஐயப்பன் செல்கின்றான்.

தவறுசெய்யும் நெஞ்சந்தனை  நல்வழி பாதையில் -தன் வழிபடுத்தவே- காடு மலை நோக்கி விஷ்ணு மைந்தன் செல்கின்றான்.


வஞ்சம் நினைப்போர் நெஞ்சத்திலே பாசம் எனும் நெய்யூற்றி எமையே தஞ்சம் பெற வேண்டுமென சபரிநாதன் செல்கின்றான்.

"ஆபத்துணராது -தான் புலிப்பார்வை கொண்டுவர சம்மதம் என உரைத்த தன் மகன் நலமாய் திரும்பி வர வேண்டும் "என கலக்கமுற்ற தந்தையின் கைகளை தன் நெஞ்சுதனில் வைத்து தைரியம் கூறிவிட்டு மலர்வனம் புன்னகைக்க சபரிநாதன் செல்கின்றான் .

ஒருபருத்தி துணி எடுத்து இரு வகைகளாய்  பிரித்து -ஒரு பகுதி
சிவ அம்சம் உடைய முக்கண் தேங்காயில் ஒரு கண் துளையிட்டு நீர் அகற்றி -சுத்தமான பசும் நெய் தனை ஊற்றி அடைத்து நெய்தேங்காய், மஞ்சள்- குங்குமம் -நெய் -பொறி அவல் - திரி வைத்து

இருமுடியிலே  அடுத்த பகுதியில் -காடு மலையில் பசியாற பருப்பு அரிசி சில உணவுப் பொருட்களும் சமைப்பதற்கு வைத்து
என்றும் சிவன் உனக்கு துணை இருப்பான் என் மகனே போய் வா- என கண்ணீர் மல்க அனுப்பிவைத்த தந்தையின் துயர் நீக்க -நலமோடு திரும்புவேன் என சபதம் கொண்டு சிவ விஷ்ணு அம்சத்துடன் புன்னகை பூக்க செல்கின்றான்.

தீய சக்திகள் நம்மை சூழ்ந்தாலும்  நல்மனம் கொண்டு -இரு முடி  அணிந்து கல்லும் முள்ளும் தைத்தாலும் எமைப் போல் தாங்களும் காடு மலை கடந்து வந்து எமை தரிசித்தால் 'உன் குடும்பம் சிறப்போடு வாழ்வதற்கு யாம் அருள் புரிவோம்' என எடுத்துக் காட்டவே
திருமுடி அணிந்தவனே காடு மலை நோக்கி செல்கின்றான்.


மனித இனத்தவன் நம்மை தேடி வருகிறான் -என்றுணர்ந்த புலியோ சீற்றம் கொண்டு -சீறிப்பாய்ந்து ஓடிவர -ஐயப்பன் முகம் கண்டு

அடங்கி -ஒடுங்கி அமர்கையில் அதன் மீதேறி ஐயப்பன் நகருக்கு திரும்புகின்றான்.

புலியின் மீது புவிமைந்தன் அமர்ந்து வர -அங்கமெல்லாம் மலர்ந்தவனாய் வானமோ வரவேற்க ..

சூரியன்சந்திரரோ- சிவப்பான இதழ் விரித்து சிரித்தவாறு வரவேற்க ..
காடு மலை யாவும் -பசுமையான பாய் விரித்து வரவேற்க..

பறவைக் கூட்டங்களோ- பவளவாய்

திறந்து கானம் பாடி ஆர்ப்பரிக்க..
விலங்கு கூட்டங்களோ கூடி நின்று குதுகலமாய் வரவேற்க..

நீரோடைகள்- ஆரவாரத்தோடு ஆனந்தமாய் வரவேற்க..

 சிந்தை குளிர்ந்தவனாய்- சிரிப்பு உதிர்த்தவனாய் - சிங்கார அழகன் அவன் நகரத்துக்குள்  நுழைகிறான்.

புலியின்மீதேறி புவனேஸ்வரன் வருகின்றான்.அந்த அற்புதக் காட்சியை அதிசயம் மேலோங்க ஊர்மக்கள் பார்த்திடவே- ஓடிவந்த அரசியோ தன் செயல் கண்டு வெட்கி தலைகுனிந்து  மன்னிப்பு கேட்கின்றாள்.

தாயை அரவணைத்து -தந்தையின் ஆசி பெற்று தவக்கோலம் பூண்டவனாய் சபரிமலை செல்கின்றான். எம்மெயப்பன் மலைமேலே அமர்கின்றான்.

கண் திருஷ்டி தோஷம் அனைத்தும் விலகி வாழ்வில் சுபிட்சம் பெற கல்லுப்பு பரிகாரம் 🌹🍀🌹👇👇👇👇





பாவத்தைநீக்கும் நதியான பம்பை நதி அருகே ..

மகிஷ முனிவரின் மேல் பகவான் நர்த்தனம் ஆடி தன் வெற்றிக்களிப்பு சூடிய -அற்புத காட்சி தனை காண வந்த சிவபெருமான்- தன் காளையை கட்டிவைத்த இடமான காளைகட்டி  கடந்து 

அழகா நதியின் வழி சென்று சபரிமலையிலே  சாந்தமாய் அமர்கின்றான். 

அன்று அமர்ந்தவன் இன்றுவரை தமை பார்க்க வரும் பக்த கோடிகளை ஆனந்தமாய் வரவேற்று அருள்தனை புரிகின்றான்.

ஐயப்பனை தரிசனம் காண்போர் வாழ்வில் -சங்கடங்கள் தீருமே.

சாமி சரணம் என்போர் வாழ்வில் அனுதினமும் சுபதினமே.

இருமுடி அணிவோர்

மனதில் நீங்காத துயர் தீருமே.

கல்லும் முள்ளும் கடந்து வருவோர் வாழ்வில் வசந்தம் கூடுமே.


ஐயப்பன்நம்மை வாழ வைப்பான் வளர வைப்பான்-சிந்தை குளிர வைப்பான்- சிறந்த வாழ்வளிப்பான் புண்ணியம் கூட வைப்பான் சொர்க்கத்திலே நமக்கு இடம் அளிப்பான்


சபரிநாதனே நின் பாதமே சரணம் சரணம்

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹



சொந்தமாக வீடு மனை வாங்க அதற்கான பரிகாரங்கள் 🍀🌹👇

https://balakshitha.blogspot.com/2020/09/blog-post_27.html

வீடு மனை அமைவதற்கான 10 தெய்வீக வழிபாட்டு புத்தகத்தை Amazon Kindle app டவுன்லோட் செய்து படித்துப்பயன் பெறலாம்🌹🍀👇👇👇

https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=


Copy rights at balakshitha

செவ்வாய், 26 நவம்பர், 2019

குலதெய்வத்தை தெரிந்துகொள்வது எப்படி

வழிவழியாக நம் முன்னோர் காலத்தில் இருந்து வணங்கக்கூடிய தெய்வமே -நம்முடைய குல தெய்வம்.


நம்முடையமுன்னோர்கள் ஆசி கிடைக்க -நம்முடைய வம்சம் தழைக்க ஒரு காரியம் ஜெயமாக- வருடத்திற்கு ஒரு முறையாவது  குலதெய்வ கோவிலுக்கு சென்று  பொங்கல் வைத்து கும்பிட்டு வரவேண்டும்.

அந்த குல தெய்வம் நம்மை நம்முடைய குடும்பத்தை- நம் வம்சத்தை ஏழு ஏழு ஜென்மங்களுக்கு காப்பாற்றும்.
குல தெய்வம் தெரியாது வணங்காது விட்டுவிட்டால் வரக்கூடிய இன்னல்கள் அறிவதும் மிக மிக அவசியம் ..

1--நம்முடைய முன்னோர்கள் ஆசி  நமக்கு கிடைக்காது போகலாம்.

2--வீட்டில் பிறந்த குழந்தைக்கு அகால மரணம் நேரிடலாம் .

3- அடிக்கடி விபத்து ஏற்படலாம்.

4- ‌ கெட்ட கனவுகள் மனதில் தேவையில்லாத பயம் ஏற்படுத்தலாம்.

5-  நோய்நொடி என அடிக்கடி 
படுக்கையில் விழ நேரிடலாம் 6-திருமண வாழ்க்கையில் வெறுப்பு வரலாம்.தம்பதி இடையே மனகசப்பு ஏற்பட்டு வாழ்க்கையில் வெறுப்பு வரலாம்.

அனைத்து இந்த நிகழ்வுகள் துன்பங்கள் விலகுவதற்கு இந்த நிமிடமே உறுதி கொண்டு அதற்கான பரிகாரத்தை வழிமுறையை புரிந்து கொண்டால் வாழ்க்கை என்றும் இனிதாக அமையும் .

குலதெய்வ வழிபாடு என்றால்
 என்ன part -1🌹🍀🌹🙏🙏👇👇👇👇
http://balakshitha.blogspot.com/2019/11/part-1.html

குல தெய்வ கோவிலில் செய்ய வேண்டிய வழிமுறைகள் 🌹🌹🌹👇👇
http://balakshitha.blogspot.com/2019/03/blog-post_25.html



ஒருசிலருக்குதம்முடைய குல தெய்வம் யாரென்று தெரியாது இருக்கலாம் ..அவர்கள் வழிவந்த முன்னோர்களும் இது பற்றி அறியாது இருக்கலாம் .அந்த பட்சத்தில் நாம் நம்முடைய குலதெய்வத்தை தெரிந்துகொண்டு வணங்குவதற்கான  வழிமுறைகளை பற்றி பார்க்கலாம்..

நம்முடையகணவன்
வழி முன்னோர்கள் தாத்தா பாட்டி பூர்வீக இடம் இருந்தால்- அதற்கு அருகாமையில் கண்டிப்பாக ஒரு நதியோ அல்லது ஆறோ  ஓடி கொண்டிருக்கும்

வரப்போகும் தை மாதம் அல்லது சித்திரை மாதம் ஆவணி மாதம் கார்த்திகை மாதம் போன்ற சிறப்பான மாதங்களில் வளர்பிறை நாள் பார்த்து -அந்த பூர்விக இடமான ஊருக்கு செல்ல வேண்டும் .

அருகாமையில் உள்ள நதியோ அல்லது ஆற்றிலோ ஜலம் எடுத்து தலையிலிருந்து கங்கா ஸ்னானம் செய்துகொள்ளவேண்டும்.ஆற்றின் ஓரத்தில் இருக்கும்  களிமண்ணை இரண்டு கைகளாலும் ஒரு சேர பிடித்த அளவிற்கு பிடித்து வீட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

அந்தக களிமண்ணால் பிள்ளையார் பிடிப்பது போன்று ஒரு பொம்மை செய்து வீட்டிலே பூஜை அறையில் வைக்க வேண்டும் .

நதியின் அருகே உள்ள மணலுக்கு மிகப்பெரிய சக்தி உண்டு.. அதனால்தான் மாசிமகம் அன்று கடலோரத்தில் அத்தனை தெய்வங்களும் சங்கமித்து ஆற்றில் நீராடி -நீரையும் அதை சார்ந்த மணலையும் புனித படுத்துகின்றனர் .
அந்த காலத்தில் தெய்வங்கள் சித்தர்கள்- முனிவர்கள் அனைவருமே எந்தவித பூஜை செய்தாலும் நதிக்கரையின் ஓரத்தில் மணலை பிள்ளையார் பிடித்து வைத்து பூஜைகள் நடத்துவர் . அப்படிப்பட்ட புனிதமான மண்ணையே -நாம் குல தெய்வமாக நினைத்து பிள்ளையார் பிடித்து வைக்கின்றோம்.

விசேஷ நாட்களில் எப்படி பூஜையறையை அலங்கரித்து மிக அழகாக படைக்கின்றோம் அதுபோன்றே - பொங்கல் வைத்து குலதெய்வத்திற்கு படைக்க வேண்டும். களி மண் பொம்மையை குல தெய்வமாக நினைத்து பக்தியோடு வணங்கவேண்டும். மாவிளக்கு ஏற்றி" எங்கள் குல தெய்வமாக உன்னை நினைத்து பூஜை செய்கின்றோம்- 

எங்கள் குலதெய்வமே ..எங்களுடைய குடும்பத்தை வம்சத்தை நல்லபடியாக நீயே வைக்க வேண்டும்" என வேண்டி பொங்கல் வைத்து படைக்கவேண்டும்.

சந்தனம் விபூதி -மஞ்சள் குங்குமம் குல தெய்வமாக நாம் நினைத்து வழிபடக்கூடிய -அந்த களிமண் பொம்மையின் மேல் தூவ வேண்டும்
நாம் அவ்வாறு படைப்பதற்கான காரணம் -நம்முடைய குல தெய்வம் ஆணா பெண்ணா என்பது நமக்கு தெரியாது .சந்தனம் விபூதியும் ஆணாக இருக்கும் பட்சத்தில் குலதெய்வத்திற்கு ஏற்றுக்கொள்ளும். குலதெய்வம் பெண்ணாக இருந்தால் மஞ்சள் குங்குமத்தை தெய்வம் ஏற்றுக்கொள்ளும் .

நம்முடையகுல தெய்வத்திற்கு  உயிர்சக்தி கிடைப்பதற்காகத்தான் இந்த வழிபாடு .

அந்த குலதெய்வ பொம்மை உடையாது பத்திரமாக பாதுகாக்க வேண்டும்.  ஒரு பேழையிலோ அல்லது மரப்பெட்டியிலோ  மூடி வைத்து தினமும் மலர் வைத்து மனதார பூஜை செய்து கொண்டு வரலாம்.


 வருடத்திற்கு ஒருமுறை பொங்கல் வைப்பதற்கு எடுக்கலாம் ஆனால் பூஜையறையில் நம் கண்காணிப்பில் இருக்கவேண்டும் 

இப்படி நாம் திருப்தியாக முழுமனதோடு இந்த பூஜையை செய்ய வேண்டும் .
அடுத்த சில மாதங்களுக்குள் கண்டிப்பாக நம்முடைய குலதெய்வம் யார் என்று நமக்கு அந்த தெய்வம் அறிவுறுத்தும்.

மற்றவரின் மூலமாகவோ அல்லது கனவில்கூட கண்டிப்பாக நம்முடைய குல தெய்வம் யாரென்று நமக்குத் தெரியவரும். அவ்வளவு சக்தி வாய்ந்த தெய்வமே நம்முடைய குலதெய்வம்.

அவ்வாறு தெரிந்து கொண்டால் குலதெய்வ கோவிலுக்கு சென்று வருடத்திற்கு ஒருமுறை பொங்கல் வைத்து படைத்து விட்டு வரலாம்

அந்த குலதெய்வ பொம்மையை பத்திரமாக வைத்திருந்து நதியில் அல்லது குலதெய்வ கோவிலில் விருட்ச மரத்தின் அடியிலோ வைத்துவிடலாம்.

அனைத்து நலன்களும் செல்வமும் நிலைபெற்று வாழ்க்கை சிறந்திடவே தெய்வ வழிபாடு செய்கின்ற போதிலும் -அவை அனைத்தும் நிலைபெற்று வம்சம் விருத்தி பெற்றிடவே குலதெய்வ வழிபாடு அவசியம்- என அறிந்து குலதெய்வத்தினை வணங்கி போற்றி வாழ்க்கையில் சிறப்பை அடையலாம்.

Copyrights at balakshitha

திங்கள், 25 நவம்பர், 2019

தியாகம்




தியாகம் கொண்ட வாழ்க்கையை ஏற்று அந்த  வாழ்க்கையும் அர்த்தமுள்ள வாழ்க்கையாக அமைத்துவிட்டால் -வாழ்க்கை என்றும் இனி தன்றோ!


மனம் இனிது- கடமை இனிது
 நேர்மை இனிது -உண்மை இனிது தியாகம் இனிது என அறிந்து வாழ்வின் சுவையை அறிந்து வாழ்வில் இனிது காண்போமே..


 பிறந்தேன் -வளர்ந்தேன் -வாழ்ந்தேன் என்பது தான் வாழ்க்கை என்றால்
 ஒரு சிலர் வேண்டுமானால்- இனிமை எனலாம்.

தியாகம் செய்த நெஞ்சு கனமான சுமைதான்- எனினும் அதில் இனிமை காணும் இதயம் சொல்லுமே ..எதில் இனிமை என்று.

ராமாயணத்தில் மனம் கனம் எனினும் நாட்டுக்காக -அன்புமனைவி சீதாதேவியை தனிமைப்படுத்திய ராமன் செய்தது தியாகமா!


மகாபாரதத்தில் சொந்த பந்த பாசத்தில் சிக்குண்டு-  ஆனாலும் சத்திரிய குல வழக்கத்திற்காக- மனம் கனம் எனினும் -பீஷ்மரையே
அம்பு படுக்கையில் படுக்க வைத்தானே-அர்ஜுனன் அன்று அவன்செய்தது தியாகமா !



அந்த நெஞ்சங்கள் சுமைதாங்கியாய் மனம் கனத்து- விதி பயனை அனுபவித்து வாழ்ந்ததால் தான் இன்றும் காவியம் கதை பேசுகின்றதோ!

 மகிழ்ச்சியோடு வாழ்ந்து முடிந்த கதை என்பது பாரதத்தில் கண்டதும் தான் உண்டோ!

 காவியம் ஆகட்டும்- பாரதம் ஆகட்டும் அனைத்தும் என்றென்றும் கதை சொல்லும் -தியாகம் கொண்ட நெஞ்சையே-யன்று  கடமையிலாது வாழ்ந்த மனிதனினை  ஏறெடுத்தும் பார்க்குமோ!

இனிது இனிது வாழ்க்கை
 இனிது அன்றோ part 5🌹🍀🌹👇👇👇👇
http://balakshitha.blogspot.com/2020/03/part-4.html

குடும்பத்துக்காக நான் செய்த தியாகம் இனிமை தருமோ! மனைவிக்காக செய்த தியாகம்.. இல்லை- கணவனுக்காக நான் செய்த தியாகம் !

இல்லையன்று- காதலிக்காக நான் செய்த தியாகம் ..அன்றன்று நண்பனுக்காக நான் செய்த தியாகம்! தியாகத்தில் இத்தனை வகை உண்டோ!
ஏதோ ஒரு வகையில் நாம் அனைவரும் தியாக நெஞ்சம் கொண்டு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இதுவன்றோ வாழ்க்கை *மனம் கனம் எனின்- கடமை இனி வேண்டேன் என சொல்வார் எவருண்டு!


வாழ்க்கை எனும் சுழற்சியில் உழன்று உழன்று- கீழிறங்கி மேலெழும்பி இன்பம் -துன்பம் என சுழன்று சுழன்று எதுவாயினும்'நின்மீது நான் பிடித்த என் பிடியை தளர்த்தி விட மாட்டேன் என் பெருமானே நின் பாதமே சரணம் சரணம் -சரணம் .

Copy rights at balakshitha

சனி, 23 நவம்பர், 2019

குல தெய்வ வழிபாடு part -1


குலதெய்வ வழிபாடு திருமணம்




என்னுடைய வழி வந்த சொந்த பந்தங்கள் முன்னோர்கள் கருத்து தனை உள்வாங்கி எழுதுகின்ற எழுத்து என்றும் புனிதமே .

எமை எழுத வைத்த என் குலதெய்வம் பச்சை வாழை அம்மனுக்கு கோடானு கோடி நமஸ்காரங்கள்.

வழிவழியாக நம்முடைய முன்னோர் காலத்தில் இருந்தே-

குலதெய்வத்தை வழிபடுவது என்பது வழக்கமாக நடந்து கொண்டு வருகின்ற ஒரு சம்பிரதாயம்்.

நம்முடைய குலதெய்வத்தைப் பற்றிநாம் வழிபடுவது எதற்காக என்பதன் முழு விளக்கத்தையும் நாம் காண்போம்..

ஏழேழு ஜென்மங்களுக்கும் குலதெய்வம் நம்மை காப்பாற்றும் என்பது ஏட்டில் எழுத்தில் எழுதப்பட்ட உண்மை . 

ஒரு மனிதனுக்கு ஏழு பிறப்பு உண்டு 

பிறக்கும் சன்னதிக்கும் அதே ஏழு பிறப்பு உண்டு.

 7 சந்ததிகள் கொண்டது ஒரு வம்சம் இந்த வம்சம் நலமாக வளமாக வாழ்ந்து முடிவடைய வேண்டும் என்பதே குலதெய்வ வழிபாடு.

 ஏழு பிறவி- ஏழு சந்ததியோடு பெருக்கினால் 49 ஜென்ம ஆண்டுகள். 

4+9 =13 இந்த கூட்டுத்தொகை கணக்கில் கொண்டு- ஒரு மனிதன் இறந்தால் உடலை விட்டு வெளியேறும் ஆத்மா -அமைதி பெற்று சொர்க்கத்தை அடைய வேண்டும் என்பதற்காகத்தான் -ஒரு மனிதன் இறந்தால் பதிமூன்றாம் நாள் கர்ம காரியங்கள் செய்கின்றோம். 

நம் முன்னோர்கள் ஆத்மா நம்மை எப்போதும் நிறைவோடு வாழ்த்திக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த குலதெய்வ வழிபாடு. 

வம்சம் வழியாக தொன்றுதொட்டு வந்த குலதெய்வத்தை நாம் வணங்கி குலதெய்வத்தை குளிர மகிழ வைக்க வேண்டும் என்பதால்தான்..

 முன்னோர்கள் வழி வழியாக வழிபட்டு வந்த குலதெய்வத்தை நாம் வணங்கி  

நம் முன்னோர்களின்ஆசியை மட்டுமின்றி  குலதெய்வத்தின் அருளையும் பெறுவதற்காக குலதெய்வ வழிபாடு செய்கின்றோம். 

தெய்வ வழிபாடு என்பது.. 


நம்முடையகஷ்டங்கள் அனைத்தும் விலக வேண்டும் என வேண்டுவது தெய்வ வழிபாடு . 

நம்முடைய வினைப்பயன்கள் அனைத்தும் விலக வேண்டும் என்பது தெய்வ வழிபாடு .

 நமக்கு செல்வங்கள் அனைத்தும் பெற்று வாழ்க்கையில் சிறப்போடு வாழ வேண்டும் என்பது தெய்வ வழிபாடு. 

தெய்வத்தின்அருளால் கிடைத்த இவை அனைத்தும் நிலைக்க வேண்டும் -வாழ்க்கையில் சிறப்பு அடைய வேண்டும் என்பதுதான் குலதெய்வ வழிபாடு. நம்முடைய முன்னோர்கள் ஆசி கிடைக்க வேண்டும் என்பது குலதெய்வ வழிபாடு .

 நம்முடைய வம்சம் தழைக்கவேண்டும் என்பது குலதெய்வ வழிபாடு.

 . ஒரு காரியம் ஜெயமாக வேண்டும் என்பது குலதெய்வ வழிபாடு. 

திருமணம் -நம்முடைய வாழ்க்கையிலே நடக்கக் கூடிய ஒரு அற்புதமான பந்தம் . 

நம்முடையவாழ்க்கை துணையோடு காலமெல்லாம் மகிழ்ச்சியோடு மலரக்கூடிய -வாழக் கூடிய அருமையான பந்தம் .

இல் துணையாள்- நல்துணையாளாக நம்முடைய வம்சம் வளர்வதற்கு..

சீர் உடையவளாக -காலமெல்லாம் பெண்கள் குலத்திற்கு பெருமை சேர்ப்பவளாக அமைய வேண்டும் என்று குலதெய்வத்தை வேண்டி.. ஏற்படுத்துகின்ற ஒரு பந்தம் திருமண பந்தம் . 

வம்ச விருத்தி அடைவதற்கு நம்முடைய குலம் தழைப்பதற்கு -தமிழ் பண்பாடு குறையாது புகழோடு நிலைத்து நிற்பதற்கு- திருமணம் எனும் பந்தம் சிறப்பாக அமைந்தால் தான் வம்சம் விருத்தியாகும் . 


தோஷங்கள் அனைத்தும் விலகி வாழ்வில் சுபிட்சம் பெற எலுமிச்சை பழ தெய்வ வழிபாடு🙏🌹👇👇



அந்த திருமணம் ஜெயமாக -வம்சம் விருத்தி பெற -நம்முடைய முன்னோர்களின் ஆசி கிடைப்பதற்கு குலதெய்வ வழிபாடு ஒரு அற்புதமான வழிபாடு.

 அதனால்தான் திருமணம் சுப நிகழ்ச்சிகள் கூடினால் முதல் பத்திரிக்கையை குல தெய்வத்திற்கு வைத்து பொங்கல் வைத்த பிறகு தான் அந்த கல்யாணத்துக்கான காரியங்களை தொடங்குகின்றோம். 

பிறந்த குழந்தைக்கு முதல் மொட்டை நம்முடைய குலதெய்வம் கோவிலில் போடுகின்றோம்.

நம் சொந்த பந்தம் அனைவரையும் அழைத்து -தாய்வீட்டு சீர் அளிக்க குலதெய்வத்தை மனதார வேண்டி தாய்மாமன் மடியில் -


குழந்தையை அமர வைத்து மொட்டை அடித்து காது குத்தி 'இது போன்ற வைபவம் வம்சம் வம்சமாக நம்முடைய குடும்பத்தில் தொடர வேண்டும்' என குலதெய்வத்தை வேண்டி -

சொந்தபந்தங்கள் அனைவருக்கும் வயிறார உணவு படைத்து குலதெய்வ காணிக்கையை செலுத்தி குலதெய்வத்தின் மனதை குளிர மகிழ வைக்கின்றோம்.  

நம்முடைய முன்னோர்கள் ஆசி கிடைப்பதற்கு.. நம்முடைய வம்சம் தழைப்பதற்கு .. ஒரு காரியம் ஜெயம் ஆவதற்கு.. 

இந்த மூன்று வேண்டுதலும் நமக்கு கிடைப்பதற்கு -குலதெய்வத்தை வணங்கி குலதெய்வத்தின் மனதை குளிர மகிழ வைத்தால் மட்டுமே- நாம் விரும்பும் அனைத்தும் சாத்தியம் ஆகும் . 

வாழ்க்கை என்றும் சுபமாக .. குல தெய்வத்தின் முகம் காண்கையிலே -நல்ல மனம் அமையும்.


குலதெய்வத்தின் புன்னகையை காண்கையிலே- பண்பு உயரும். இரு கை கூப்பி வணங்குகையிலே தடைகள் அனைத்தும் விலகும். பொங்கல் வைத்து பூஜை செய்தால் நினைத்தது நிறைவேறும். நல்ல மனதோடு -பண்போடு -உயர்ந்த மனிதனாக வாழ்வதற்கு குலதெய்வ வழிபாடு நிச்சயம் வழி வகுக்கும்.


இனிது இனிது வாழ்க்கை இனிது அன்றோ புத்தகம்
64 பக்கங்கள் கொண்டு... தம்பதியர்கள் சிறப்பாக வாழக்கூடிய 16 வழிமுறைகள் கொண்ட கைக்கு அடக்கமான அழகிய கவிதை தொகுப்பு புத்தகம்.


திருமணம் சுப நிகழ்ச்சிகளுக்கு வரும் சொந்த பந்தங்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க ஏற்ற புத்தகம்.

ஆர்டர் செய்தால் புத்தகங்கள் கொரியரில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகங்கள் வாங்கி வைத்துக்கொண்டு , திருமண நிகழ்ச்சியில் பூங்கொத்துடன் ஒரு புத்தகம் வைத்து திருமண தம்பதியர்களுக்கு கொடுத்தால்

நிச்சயம் மனம் கனிநத ஒரு மகிழ்ச்சி உங்களுக்கு பிறக்கும்.


📞‌அணுகவும் 8124152666

💐 என் புத்தகத்தை அமேசானில் படிக்க. இந்த link click செய்யுங்கள் 💐

https://read.amazon.in/kp/kshare?asin=B08GJGL2C7&id=6jyb424mevh3tn3csp2dsu4fde

சொந்தமாக மனை வாங்கி வீடு கட்டுவதற்கான யோகம் பெறுவதற்கான பத்து தெய்வீக வழிபாட்டு முறைகள் அமேசான் kindle app ல் படித்து பயன் பெறவும்🙏🌹👇👇

https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC


Copy rights at Balakshitha


ஞாயிறு, 10 நவம்பர், 2019

மகா அன்னாபிஷேகம் சிவனுக்கு மிக உகந்த தினம்


                                                        மகா அன்னாபிஷேகம்

அன்னை பராசக்ததி  பரமனிடத்திலே 'ஓரறிவு ஜீவனை சிறு பேழைக்குள் மறைத்து வைத்து' திருவிளையாடல் நாடகத்தை நடத்துகையில் -பேழையினுள்  சிற்றெரும்பு  ஒரு அன்ன பருக்கையை ஆனந்தமாய் சுவைத்து எம்மப்பன் பார்வையிலே எதுவுமே தப்பாது என உணர்த்திய நாளே மஹா அன்னாபிஷேகம்.

 சிவன்- பிரம்மனின் செருக்கை ஒடுக்க  ஒரு தலையை கொய்து விட அக்கபாலமோ  சிவனின் திருக்கரங்களை விட்டு அகலாது பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட- அந்தப் பாவத்திலிருந்து நீங்க கபாலத்தில் யார் இடும் அன்னம் நிறைகின்றதோ அன்று கபாலம் கைவிட்டுப் போகும் தோஷமும்  விலகும் என -சிவனோ பல இடம் சென்றும் நிறையாது போக முடியவிலே  காசிக்குச் சென்று அன்னபூரணி அன்னையவள் அன்னமிட  நிறைந்த கபாலமும் தோஷமும் விலகிய அற்புதமான நாளே மஹா அன்னாபிஷேகம் .

இன்றைய புனிதமான தினத்தில் நாம் மற்றவர்களின் வயிறு நிரம்பும்  அளவிற்கு அன்னமளித்தால் - நம்மிடம் உள்ள அனைத்து தோஷமும் நீங்கி வாழ்க்கையில் அனைத்து வளமும் பெறலாம் .

சந்திரனின் அழகை முழுதும் நாம் உள்வாங்கி வாழ்க்கையில் ஒளி பெற்று மகிழ்கின்ற  நாள் இன்று ...தட்சனின் சாபத்தால் சந்திரனோ ஒளி இழந்துபோக சிவனை நினைத்து விரதமிருந்து வேண்டி - மிகப் பிரகாசமாக சந்திரன் மீண்டும் ஒளி பெற்று இன்பமான நாளே மஹா அன்னாபிஷேகம்.



மகா அன்னாபிஷேக தரிசனம்

ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி தினத்தன்று சந்திரனின்  ஒளி எழும்பும் வேலையிலே -சிவனுக்கு அன்னாபிஷேகம் .

சந்தனம்- விபூதி -மாப்பொடி- மஞ்சள் இளநீர் -கரும்புச்சாறு -பசும்பால் என முடிவிலே அன்னாபிஷேகத்தில் சிவன் காட்சி தர  பக்தி பரவசத்தில் கண்களும் பனிக்க நிற்கின்ற அற்புதமான நாளே மஹா அன்னாபிஷேகம்.

அன்னம் என்னும் அமுதத்தை  பரப்பிரம்மமாய் காட்சி தரும் சிவன் மேனி முழுவதும் பூசி அளவிலாத காய்கறி பொருட்கள் அலங்கரித்து பரம ஜோதியாய் காட்சி தரும் சிவலிங்கத்திற்கு ஆராதனை காட்டுகின்ற அற்புத நாளே மஹா அன்னாபிஷேகம்.

' ஓம் நமசிவாய ஓம் நமசிவாய' என தரிசிக்கும் அனைவரும் ஒரே நேரத்தில் பக்தியோடு கரகோஷம் எழுப்பக்கூடிய பொன்னான நாளே வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய மகா அன்னாபிஷேகம்.

நோய் நொடிகளை -நம்முடைய பாவத்தை -தோஷத்தை- துன்பத்தை துயரத்தை -வறுமையை -நீக்கி இந்த சிவபெருமானின்  மகா அன்னாபிஷேகத்தை கண்டு தரிசனம் பெறுவோம்  மகிழ்வு காண்பார் என்பது திண்ணமே .


யஜூர் -வேதம்- ருத்ரம் -சமகம் என அனைத்து மந்திரங்களும் அந்நேரத்தின்போது  ஒலிக்கையில் நம் அறியாமையை நீங்கி 'அனைவரிடத்திலும் அன்பு கொண்டு தானதர்மங்கள் நிறைய செய்க' என உணர்த்துகின்றன அற்புத நாளே மஹா அன்னாபிஷேகம் .

ஆவுடையார்  மீதுள்ள அன்னம்- கடலில் நீர்வாழ் பிராணிகளுக்கும் மேல்பாகம் சாத்தப்பட்ட அன்னம்- பிரசாதமாக நமக்கும் வழங்குவதே ஐதீகம் .


குழந்தை பாக்கியம் வேண்டுவோர்
இந்த அன்னத்தை புசிக்க குழந்தை பாக்கியம் கிடைக்கும் .நோய்நொடி அகன்று உணவுப்பஞ்சம் இன்றி தோஷங்கள் விலகி வறுமை நீங்கி செல்வம் பெருகி அனைத்து வளமும் பெற்று மகிழ்ச்சியான  வாழலாம்.

அன்னாபிஷேகத்தில் கண்டு தரிசிப்போர் வாழ்க்கையில்..

நல்லதே நடக்கும்- நல்லதே நடக்கும்- நன்மையே பயக்கும் 
அகங்காரம் மறையும்
ஆணவம் தொலையும் 
அகம் மலரும் 
மனம் உவக்கும்
 தானம் பெருகும் 
அன்னதானம் பெருகும் 
கைகள் சிவக்கும்
 பாவம் தொலையும் 
புண்ணியம் கூடும் 
செல்வம் பெருகும் 
சிந்தை தெளியும் 
நற்பயன் விளையும்
 நினைத்தது கைகூடும்
 நீங்காத புகழ் நிறையும்
 உடல் பிணி அகலும்
 உள்ளம் மகிழும் 
வாழ்ந்த பயன் அனைத்தும் 
கிடைத்து முக்தி கிடைக்கும் 
இறைவன் அருள் கிட்டும் 

என்பதால் அனைவரும் கோவிலுக்கு சென்று சிவபெருமானின் மகா அன்னாபிஷேகம் கண்டு தரிசித்து பிரசாதம் பெற்று வாழ்க்கையில் அனைத்து நலன்களையும் பெறுவோம்.